search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீர்மோர் பந்தலுக்கு தீவைப்பு: மர்ம நபர்கள் கைவரிசை
    X

    நீர்மோர் பந்தலுக்கு தீவைப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

    • தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.
    • பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.

    இதில் தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனியப்பன் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமரடக்கி பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    நேற்று இரவு இந்த நீர் மோர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதில் பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனியப்பன், தி.மு.க. நிர்வாகி ராமநாதன் உள்ளிட்டோர் சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தல் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×