என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "health"
- சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு.
- மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.
சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத் தருவதில் பெரும்பங்கு வகிக்கிறது எனலாம். செவிமடல்களைப் போல் மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய தன்மையுள்ள குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.
உட்பகுதி மென்மையான சிலேத்தும் படலத்தால் உண்டாக்கப்பட்டுள்ளது. பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மூக்குத் துவாரம் தொண்டையில் இணைகிறது. காதுத் துவாரமும் தொண்டையில் குழாய் போன்ற அமைப்புடன் இணைகிறது.
மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன. அவை நுண்ணிய நரம்புகள் மூலம் மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வுணர் இழைகள் ஆயிரக்கணக்கில் சிலேத்தும் படலத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ளன. மண்டை ஓட்டிற்கும் மூக்கின் இணைப்புத் தசைகளுக்கும் இடையே மூக்கைச் சுற்றி வெற்றிடங்கள் உண்டு. இவைகளைத்தான் சைனஸ் (காற்றறைகள்) என அழைக்கிறோம்.
மூக்கு வாசனை அறிய உதவும் உணர்ச்சி மிகுந்த உறுப்பாக இருப்பதால் உட்பகுதியில் சிலேத்தும் படலத்திற்கு அருகே நிறைய ரத்தக் குழாய்களும் நரம்புக்கற்றைகளும் நிறைந்துள்ளன. இவை காற்றை வடிகட்டி அனுப்பும் தன்மையைக் கொண்டவை. அவ்வாறு வடிகட்டப்பட்ட காற்றில் நச்சுக் கிருமிகள் இருந்தால் அவற்றைத் தடுத்து அழிக்கவே மூக்கின் பின் பகுதியில் தொண்டைக்கு அருகே அடிநாய்டு என்னும் தசைக்கோளம் உள்ளது.
நுண்ணிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட மூக்கை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சளிதான் மூக்கை அடிக்கடி பிடிக்கும் நோய்.
காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மூச்சுக் காற்றுடன் மூக்கினுள் சென்று சிலேத்துமப் படலங்களில் படிகிறது. நோய் எதிர்ப்பாற்றல் சக்தி இயற்கையிலேயே மனிதனுக்கு இருப்பதால் அவை வைரஸ்களை அழிக்கும். அச்சக்தி சிலருக்கு அல்லது சில நேரங்கள் குறைவு பட்டிருக்கும்போது வைரசின் ஆதிக்கம் அதிகமாகும். அதனால் மூக்கினுள் சிலேத்துமப் படலங்கள் அழற்சியுற்று சளி உண்டாகிறது.
முதல் அறிகுறியாக தும்மல், மூக்கில் நீர்வடிதல், கண்களின் நீர் கட்டுதல், மூக்கில் வலி, அடைப்பு போன்றவை தோன்ற ஆரம்பித்துவிடும், சளிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆங்கில மருத்துவர்களின் கூற்றாகும். மூலிகை மருத்துவத்தில் சளியை ஆரம்பத்திலே கண்டு சிகிச்சை செய்தால் விரைவில் சரி செய்யலாம்.
அடிநாய்டு என்னும் மூக்கில் உள்ள கோளம் நோயுற்றால் வாசனைத் திறனை மூக்கு இழந்துவிடும். மூக்கு, காது, தொண்டை துவாரங்கள் சந்திக்கும் இடத்திற்கு சற்று பின்பக்கம் இக்கோளம் அமைந்துள்ளது. இது நிணநீர் திசுக்களால் ஆனது. வெளிக்காற்றில்
இருந்து வரும் கிருமிகளை இது தடுத்து நிறுத்தும், அப்போது ஏற்படும் போரின் விளைவாக அடிநாய்டு வீங்கும். இது குழந்தைகளை அடிக்கடி பாதிக்கும் பிரச்சினையாகும்.
இதன் பாதிப்பு வாயில் மூச்சுவிடச் செய்யும், காதில் தொற்று நோயை உண்டாக்கும். மூளைவரை கூட இத்தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது அடிக்கடி நோயற்றால் மூக்கடைப்பு வரும். எனவே இதை அறுவைசிகிச்சையின் மூலம் நவீன மருத்துவத்தில் நீக்கப்படுகிறது.
மூக்கின் அருகில் உள்ள காற்றறைகளில் அழற்சி, கிருமித்தொற்று, சளி தங்குதல் போன்றவற்றை சைனஸ் என அழைப்பதாகப் பார்த்தோம். இதைத்தான் சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்ற அடிப்படையில் பீனிசம் என்று அழைக்கப்படுகிறது. இப்பீனிச நோயில் 8 வகை இருப்பதாகவும் அறிகிறோம்.
மேலும் இந்நோய்க்கு சளி மட்டுமே காரணமல்ல, மேக நோயும் காரணம் எனப்படுகிறது. உடலில் உஷ்ணம் அதிகமாகி அது மூலாதாரக் கொதிப்பை உண்டாக்கி, பித்த நீரை உண்டாக்கி, அவைகள் (சைனஸ்) காற்றறைகளில் தங்கி தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில், கன்னத்தில், கண்களில் வலி போன்றவற்றை உண்டாக்குவதாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரமற்ற காற்று. புகைப்பழக்கம், பல் நோய், டான்சில் மற்றும் அடினாய்டு தொந்தரவு போன்றவைகளாலும் பீனிசம் வரும்.
ஒவ்வாமையும் பீனிசத்தை உண்டாக்கும். நாள்பட்ட பீனிசத்தால் காற்றறைகள் புண்ணாகி சளியுடன் கலந்து சீழும் ரத்தமும் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிலசமயம் கட்டிகள் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சியைக் கூட இது உண்டாக்கும். இத்தகைய மூக்குப் பிரச்சினைகளுக்கு நம்பகமான சிகிச்சைமுறைகள் உண்டு.
- முதல் மூன்று மாதத்தில் தான் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும்.
- பொதுவான யோகா பயிற்சியை செய்யலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் எனில் உடற்பயிற்சி செய்யுங்கள் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். வயது பேதமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வயதான காலத்திலும் நடைபயிற்சி கூட போதுமான உடற்பயிற்சியின் பலனை அளித்துவிடும்.
கர்ப்பிணி பெண் மாரத்தான் போன்று ஓட வேண்டியதில்லை. ஆனால் எப்போதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துகொள்ளுங்கள்.
நேரத்தை பயனுள்ள முறையில் கழியுங்கள். கூடுதல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியதை விட இதுவே போதுமானது. அதே நேரம் சில எளிய பயிற்சிகள் செய்வது வலி மற்றும் அசெளகரியத்தை நீக்கி குழந்தையை வெளி உலகுக்கு கொண்டுவர தயார்படுத்த செய்யும். இதற்கு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் தான் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். இந்த நேரத்தில் சில யோகாசன பயிற்சிகள் செய்யும் போது உடல் தளர்வடையும். பொதுவான யோகா பயிற்சியை செய்யலாம். இதை இரண்டாம் மற்றும் மூன்றாம் ட்ரைமெஸ்டரில் செய்யும் போது பிரசவ வலியை குறைக்கவும், சுகப்பிரசவத்தை தூண்டவும் உதவும்.
கர்ப்பிணி யோகா செய்வதற்கு முன்பு காற்றோட்டமான இடத்தை தேர்ந்தெடுக்கவும். யோகா மேட் விரிப்பில் நிமிர்ந்து உட்கார்ந்து செய்ய வேண்டும்.
இப்படி எந்த பயிற்சி செய்தாலும் கவனத்துடன் இருக்க வேண்டும், முக்கியமாக வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. இது மூன்று ட்ரைமெஸ்டருக்கும் பொருந்தும்.
கோமுகாசனம்
கோமுகாசனம் என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் தோள்பட்டைகளுக்கு ஏற்றது. உட்கார்ந்த நிலையில் முதலில் ஒரு கையை மேல் நோக்கி எடுத்து தோள்பட்டையில் மீது மடித்தாற்போன்று வைக்கவும். பிறகு மற்றொரு கையை அந்த கையின் முட்டி பகுதியில் பிடித்தாற்போன்று வைக்கவும்.
உங்களால் முடிந்தால் மற்றொரு கையை முதுகு சுற்றி வளைத்து மேல்நோக்கிய கையின் விரல்களை கீழ் நோக்கி எடுத்து செல்லும் கை விரல்களால் பிடித்துகொள்ளலாம். அல்லது ஒரு முறுக்கிய பெரிய கயிறுவை உயர இருக்கும் கைகளில் பிடித்து மறு கையால் பிடிக்கலாம். இதை இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றி பிடிக்க வேண்டும்.
இடுப்பு தசைகள் பயிற்சி
கர்ப்பத்தின் ஐந்து மாதங்களுக்கு பிறகு இடுப்புதசைகள் பெல்விக் தசைகள் வலிமையாக இருக்க சில பயிற்சிகள் செய்ய வேண்டும். இடுப்பு தசைகள் வலுப்படுத்தும் பயிற்சிகள் செய்வதன் மூலம் சிறந்த நன்மைகள் பெறலாம். எனினும் நீங்கள் செய்யும் பயிற்சிகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு அனுமதி பெற்ற பிறகு செய்வது சிறந்த பலனளிக்கும்.
இதனோடு நீங்கள் எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் உங்கள் மருத்துவ நிலைமைகளை பற்றி யோகா பற்சியாளரிடம் தெளிவாக கூறவும்.
பட்டாம்பூச்சி ஆசனம்
இடுப்புத்தசைகளை வலுப்படுத்த பட்டர் ஃப்ளை பயிற்சி உதவியாக இருக்கும். இந்த பயிற்சி செய்யும் போது நீங்கள் செளகரியமாக இருந்தால் போதும். இந்நிலையில் உங்கள் பாதங்கள் சிரமமாக இருந்தால் பாதங்களை விரித்து கூட உட்காரலாம். உங்கள் முழங்கால்களை மட்டும் மேல் இருந்து கீழாக பறப்பது போன்று செய்யுங்கள். உங்கள் வசதிக்கேற்ப வலியில்லாமல் செய்யுங்கள்.
வேகமாக அசைக்க வேண்டாம். இடைவெளி விட்டு விட்டு செய்யலாம். வலி இருந்தால் பயிற்சி செய்வதை நிறுத்தி உங்கள் உடற்பயிற்சி நிபுணரிடம் கேளுங்கள்.
பிறகு கைகளை பக்கவாட்டில் கீழே வைத்து மற்றொரு கையை மேல் நோக்கி ஒரு பக்கமாக சாயுங்கள். இதே போன்று இரண்டு பக்கமும் செய்யலாம். உடலை இருபக்கமும் திருப்பலாம். எனினும் இது எதுவுமே உங்களை அசெளகரியப்படுத்த கூடாது. வயிற்றை அழுத்தக்கூடாது. சிரமப்பட்டு செய்ய கூடாது.
இந்த பயிற்சி செய்வதன் மூலம் முதுகு, தொடைகள் மற்றும் இடுப்பில் உள்ள தசைகளை தூண்டுவதோடு அதனை விரிவுப்படுத்தவும் செய்கிறது. இது தவிர உங்கள் தோரணையை சரி செய்கிறது. இது மூட்டுகளை நெகிழவைக்கும். அது மட்டுமல்லாமல் உடலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.
- அம்மான் பச்சரிசி இலையை கீரையாக சாப்பிட்டு வர வேண்டும்.
- தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி அல்லது லேகியம்
புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.
பால் சுரப்பை அதிகரிக்க உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள்:
1) தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி அல்லது லேகியம்: காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் வீதம் சாப்பிட வேண்டும்,
2) சவுபாக்கியசுண்டி லேகியம்: காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் வீதம் சாப்பிடலாம்,
3) வெந்தயத்தை பொடித்து, பனை வெல்லம், நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை இரவு இருவேளை கொடுக்க வேண்டும். இது போன்று உளுந்தங்களி செய்து சாப்பிடலாம்.
4) பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5) அம்மான் பச்சரிசி இலையை கீரையாக சாப்பிட்டு வர வேண்டும்.
6) பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும், பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.
7) பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கருப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும்.
8) பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 9) பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும்.
10) பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறா மீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு.
பூசணி சாறு, பூசணி விதை, ஆளி விதை. ப்ளாக் சீட்ஸ் எனப்படும் அலிசி விதை, பருத்திப் பால், பார்லி கஞ்சி, பாதாம் பருப்பு, செவ்விளநீர், கடல் பாசி இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
11) குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். பால் இல்லை என்றாலும் குழந்தையை அணைத்து பால் குடிக்க வைக்க வேண்டும்.
தொடர்ச்சியாக இவ்வாறு செய்வதன் மூலமாக, புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் போன்றவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
- சுமார் 7 மணி நேரம் இரவில் நன்கு தூங்க வேண்டும்.
- ஒருவர் படுத்து 15 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும்.
பல விலங்குகள், பறவைகள் நின்றுகொண்டே தூங்கும் வழக்கம் உள்ளவை. ஆனால், மனிதன் உட்கார்ந்து கொண்டே தூங்குவது என்பது இயற்கையான செயல் அல்ல. அதிக உடல் எடை, மிகப்பெரிய தொப்பை, சுவாசக்கோளாறு போன்றவை உள்ளவர்கள், இரவு நேர வேலை செய்பவர்கள், தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே தூங்கி விடுவதுண்டு.
20 வயது நிரம்பிய ஒருவர் சுமார் 7 மணி நேரம் இரவில் நன்கு தூங்க வேண்டும் என்பது ஒரு அறிவியல் கணக்கு. உடலியல் கணக்கும் கூட. ஒருவர் உட்கார்ந்த இடத்தில் எல்லாம் சுமார் 5 நிமிடங்களில் தூங்கி விடுகிறார் என்றால் அவரது உடலில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.
உட்கார்ந்த நிலையில் தூங்கும் போது இடுப்பு, கழுத்து, முதுகு பகுதிகளில் வலி, தசை-மூட்டுகள்- தோள்பட்டை இறுக்கம் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்துவிடும்.
உட்கார்ந்து கொண்டே அசைவற்ற நிலையில் தூங்கும் போது உடலின் எல்லா பாகங்களுக்கும் முறையாக ஒழுங்காக கிடைக்க வேண்டிய ரத்த ஓட்டம் சற்று குறைய நேரிடும். இது எல்லாவற்றையும் விட 'டி.வி.டி' என்று சொல்லக்கூடிய `ஆழ்சிரை ரத்த உறைவு' என்கிற மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
சாய்வு நாற்காலியில் முக்கால்வாசி படுத்தது போன்று தூங்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கு, தூக்கத்தில் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலப்பின்னோட்ட நோய் உள்ளவர்களுக்குத் தான் இது உபயோகமாக இருக்கும். சாதாரணமாக இருப்பவர்களுக்கு அல்ல.
உட்கார்ந்து கொண்டே தூங்கும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது?
1) நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையில் உள்ள விளக்குகளை எரிய விடுங்கள்.
2) பக்கத்தில் இருக்கும் யாரிடமாவது எதையாவது பேச ஆரம்பித்துவிடுங்கள்.
3) உடனடி சக்தி கொடுக்கக்கூடிய ஏதாவது ஒரு பானத்தைக் குடித்து, உடலுக்கு சக்தியை உடனே வரவழையுங்கள்.
4) ஒரு பெருமூச்சை இடையில் இடையில் இழுத்து விட்டுக்கொண்டு சில விநாடிகள் அல்லது சில நிமிடங்கள் ஓய்வாக இருங்கள்.
5) கண்களுக்கு வேலை கொடுங்கள்.
6) உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து எழுந்து வீட்டிற்குள்ளோ, அலுவலகத்திற்குள்ளோ ஒரு ரவுண்டு சுற்றி வாருங்கள்.
ஒருவர் படுத்து 15 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும். இதுதான் இயற்கையான தூக்க முறை. ஒருவர் ½ மணி நேரத்திற்கு மேலும் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார் என்றால், அது தூக்கமின்மை நோயின் ஆரம்ப அறிகுறி ஆகும். இது உடல் பிரச்சினையாகவும் இருக்கலாம், மனப்பிரச்சினையாகவும் இருக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரை சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பயப்படத் தேவையில்லை.
- ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
- அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.
ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சர்க்கரை நோயாளிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர்கள் ஐஸ்கிரீமை சாப்பிடவே கூடாது என்பதல்ல. தங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் போது ஐஸ்கிரீமை எப்பொழுதாவது சாப்பிடலாம். ஒரு அரை கப் ஐஸ்கிரீமில் 137 கலோரிகள், 7 கிராம் கொழுப்பு, 16 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் இனிப்பு இருக்கிறது.
ஐஸ்கிரீமில் அதிகமான அளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை, கலோரி மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதாலும், ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுவதில்லை. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மூன்று வாரத்துக்கு ஒருமுறை, அரை கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். அப்போது அவர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.
1) ஐஸ்கிரீம் சாப்பிடும் போது குறைந்த கார்போஹைட்ரேட், கலோரி, சுகர், கொழுப்பு மற்றும் அதிக புரதம் உள்ள ஐஸ்கிரீம்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2) உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லது. அப்போது ஐஸ்கிரீமில் உள்ள அதிக கார்போஹைட்ரேட் அளவை சமன் செய்ய அன்று உட்கொள்ளக்கூடிய உணவில் கார்போஹைட்ரேட் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
3) ஐஸ்கிரீமின் மேலே டாப்பிங்ஸாக பாதாம், பிஸ்தா போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். இது ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸை திடுக்க உதவுகிறது.
4) அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.
5) ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது, அந்த சூழலில், ஐஸ்கிரீம் உண்ண முயற்சிக்க கூடாது.
ஐஸ்கிரீமில் உள்ள டிரிப்டோபான் எனும் அமினோஆசிட் "பீல் குட்" ஹார்மோன் என்று அழைக்கப்படும் "செரட்டோனின்" சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து உற்சாகமாக வைத்திருக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
- ஆத்மாவில் மூன்று நிலை உள்ளது.
- மூச்சு விடுதலில் இறுக்கம் அதிகமாக இருக்கும்.
நாம் தூங்கி எழுந்த உடனே அதிக தும்மல் வருவதும், மழை மற்றும் பனி காலத்தில் மீண்டும் மீண்டும் சளி ஜலதோஷம் வருவது, சளி பிடித்த போது மூச்சு வெளியே விடுவதில் சிரமமாக இருப்பது, மார்பை இறுக்கி பிடித்தது போன்ற உணர்வு, மூச்சை வெளியே விடும் போது wheeze என்னும் விசில் போன்ற சத்தம் வந்தால் இது மிதமாக இருக்கும் போது ஸ்டெதஸ்கோப் வழியாக கேட்க முடியும். அதுவே தீவிரமாக இருந்தால் மார்பிற்கு அருகில் வந்தாலே கேட்க முடியும். இதை தான் bronchial asthma என்பார்கள்.
இந்த அறிகுறிகள் சிறு வயதிலும் இருக்கலாம் அல்லது வளர வளர வர தொடங்கலாம். சிறு வயதில் இருந்தே அடிக்கடி ஆக்ஸிஜன் மாஸ்க், நெபுலைஸர் வைப்பதை பார்த்திருப்போம். இந்தியாவில் மட்டும் 25 மில்லியன் மக்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது, அதில் 6 மில்லியன் குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா வருவதற்கான காரணம் குறிப்பாக இது மட்டும் தான் என்று இன்றுவரை எந்த அறிவியலும் கண்டுப்பிடிக்கவில்லை.
ஆத்மாவில் மூன்று நிலை உள்ளது. mild, moderate, severe. சிலருக்கு வெறும் அலர்ஜியோடு நின்ருவிடும். இன்னும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு தீவிரமாக இருக்கலாம். இது சிறுகுழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மூச்சு விடுதலில் இறுக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு மைல்டாக இருக்கும். சிலருக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு இருக்கும்.
தொண்டையிலிருந்து நுரையீரலுக்கு செல்லும் டியூப் முடிச்சுகள் இறுக்கமாகி மூடிக்கொள்ளும். சளி தூசி, மாசு, புகையால் நுரையீரல் பாதிக்கப்படும் போது சளி அதிகமாக வருகிறது. இயல்பாகவே நுரையீரலில் சளி உற்பத்தி இருக்கும். ஆனால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சளி bronchioles துவாரத்தை அடைப்பதால் சுவாசிக்க சிரமம் ஏற்படும்.
மூச்சு உள்ளிழுத்து வெளியே விடும்போது மிகவும் சிரமமாக இருக்கும் ஏனென்றால் அந்த பாதை முழுவதும் அடைத்துவிடும். மிகச்சிறு துவாரத்தால் மட்டுமே மூச்சு விடுதல் இருக்கும். அதனால் தான் ஆஸ்துமாவின் போது சுவாசிக்க சிரமமாக இருக்கிறது.
தடுப்பது எப்படி
ஆஸ்துமாவை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் அறிகுறியை கட்டுப்படுத்தலாம். இதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இல்லையென்றாலும் சில காரணங்களால் ஆஸ்துமா வரலாம் என்று சொல்லப்படுகிறது.
அப்படி சொல்லப்படும் காரணங்களில் மரபணு போக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும்போது அவை அப்படியே குழந்தைகளுக்கு மாறுகிறது. இதை முழுவதுமாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் ஆஸ்துமாவை தூண்டும் காரணங்களை கட்டுப்படுத்தலாம்.
புகை பிடிக்கும் இடம், காற்று மாசடைந்த இடங்களில் ஆஸ்துமா தூண்டுதல் அதிகரிக்கலாம். அந்த இடத்தில் போகாமல் இருப்பதன் மூலம் இதை தடுக்கலாம்.
- மனித வாழ்க்கையில் உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமானது.
- நல்ல உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் தப்பில்லை.
மனித வாழ்க்கையில் உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமானது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல சில உணவுகளை அளவோடு எடுத்துக்கொண்டால் நல்லது. பொதுவாக நல்ல உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் தப்பில்லை. ஆனால், நாம் சாப்பிட்ட உணவு எவ்வளவு நேரத்தில் செரிமானம் ஆகும் என்பதை தெரிந்துகொண்டு சாப்பிட்டால் நல்லது.
இல்லையென்றால் உடல் எடை அதிகரிப்பு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, சர்க்கரை நோய், போன்ற நோய்கள் தான் நமக்கு பரிசாக கிடைக்கும். உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நாம் உட்கொள்ளும் உணவின் வகை உள்ளிட்டவற்றை பொறுத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொறுத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே, இந்த கட்டுரையில் எந்தெந்த உணவுகள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
காய்கறிகள்
தக்காளி, முள்ளங்கி, குடை மிளகாய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் கொண்டவைகள் செரிமானமாக குறைந்தபட்சம் 30-40 நிமிடங்கள் ஆகும். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் ஆகும்.
பழங்கள்
ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப் பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும்.
கிழங்கு வகைகள்
காய்கறிகளை காட்டிலும் கிழங்கு வகைகளின் செரிமான நேரம் சற்றே மாறுபடுகிறது. உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் 1 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
முட்டை
முட்டையின் மஞ்சள் கரு மட்டும் செரிமானம் அடைய 30 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அதேநேரம், முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.
பால் பொருட்கள்
பாலில் புரதம், கால்சியம், கொழுப்பு, வைட்டமின்கள் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக் கட்டிகள் செரிமானம் அடைவதற்கு சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக் கட்டிகள் செரிமானமாக 5 மணி நேரம் கூட ஆகலாம்.
தானிய வகைகள்
கோதுமை, பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் 90 நிமிடங்கள் வரை ஆகலாம். அதேபோல் பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
இறைச்சி
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். ஆடு, கோழி, மாடு, போன்ற இறைச்சி உணவுகள் செரிமானம் ஆவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரம் கூட எடுத்துக்கொள்ளும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து.
* விதைகள், கொட்டைப்பருப்புகள் (சூரியகாந்தி, பூசணி, எள், பாதாம், முந்திரி)- 60 நிமிடங்கள்
* பதப்படுத்தப்பட்ட இறைச்சி- 3 முதல் 4 மணி நேரம்
* மீன் வகைகள்- 30 நிமிடம்
* நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் (வெள்ளரி, தக்காளி, முள்ளங்கி)- 30 முதல் 40 நிமிடங்கள்
* இலை காய்கறிகள் (முட்டைக்கோஸ், பிரக்கோலி, காலிபிளவர்)- 40 முதல் 50 நிமிடங்கள்
* மாவுச்சத்துள்ள காய்கறிகள் (சோளம், பூசணி, கிழங்கு)- 60 நிமிடங்கள்
* தானியங்கள் (தினை, ஓட்ஸ்)- 90 நிமிடங்கள்
* பருப்பு வகைகள் (பருப்பு, கொண்டைக்கடலை, பட்டாணி, பீன்ஸ்)-2 முதல் 3 மணி நேரம்
* தண்ணீர் நிறைந்த பழங்கள் (தர்பூசணி)- 20 முதல் 25 நிமிடங்கள்
* குறைந்த தண்ணீர் உள்ள பழங்கள் (ஆரஞ்சு, திராட்சைப் பழம், வாழைப்பழம்)- 30 நிமிடங்கள்
* மிகக் குறைந்த தண்ணீர் உள்ள பழங்கள் (ஆப்பிள், பேரிக்காய், செர்ரி, கிவி)- 40 நிமிடங்கள்
* பழச்சாறு- 15 நிமிடங்கள்
- பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
- பழங்கள் மூலம் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கின்றன.
பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பழங்கள் மூலம் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கின்றன.
உலகின் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றான `யுபாரி கிங் முலாம் பழம்' பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இதன் விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்.
யுபாரி கிங் முலாம் பழம், ஜப்பானின் `யுபாரி' பகுதியில் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகிறது. இதனால்தான் இப்பெயர் பெற்றது. இந்த நகரத்தின் தட்பவெப்பநிலை முலாம் பழங்களை பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. மிகக் குறைந்த அளவு உற்பத்தி மற்றும் அதிக தேவை காரணமாக, இது உலகின் மிக விலை உயர்ந்த பழமாக உள்ளது.
2019-ம் ஆண்டில், ஒரு ஜோடி முலாம்பழம் ரூ.31.6 லட்சத்துக்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு முலாம்பழத்தின் விலை ரூ.15 லட்சத்துக்கு மேலாகும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை இந்தப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு முலாம்பழமும் வளர 100 நாட்கள் ஆகும். இந்த முலாம்பழங்களை உற்பத்தி செய்ய சிறப்பு வகையான உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவற்றின் நறுமணமும், சுவையும் அதிகரித்தும், குறைவான விதையுடனும் காணப்படுகிறது.
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தனிமங்கள் இந்த முலாம்பழத்தில் காணப்படுகின்றன.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ரத்த அழுத்தத்தை குறைப்பது, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பது மற்றும் சரும பளபளப்பு தருவது போன்றவை இதன் சிறப்பு. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் புற்று நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு கடைகள், அங்காடிகள், சந்தைகள் போன்றவற்றில் இந்த விலை உயர்ந்த பழம் கிடைப்பது கடினம். விலை அதிகமாக இருந்தாலும் ஜப்பான் மக்கள் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
- ஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் இருக்கிறது.
- தூங்க செல்வதற்கு முன்பு சில பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது.
பழங்களில் இயற்கையான இனிப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் அவை தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலங்காரங்களுக்கு மாற்றுத்தேர்வாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் இருக்கிறது. அதிலும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு சில பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் சில பழங்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். தூக்கத்தைச் சீர்குலைக்கும். தூங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கலாம். இரவில் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய அத்தகைய பழங்களுள் சிலவற்றை பார்ப்போம்...
சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. இரவில் தூங்குவதற்கு முன்பு அவற்றை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் அதிகளவிலான அமிலத்தன்மை வயிற்றுக்கு தொந்தரவு கொடுக்கும். செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். அசிடிட்டி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் தூக்கம் சீர்குலைய நேரிடும்.
அன்னாசி:
அன்னாசிப்பழத்தில் புரோமலைன் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். அன்னாசி பழத்தை அதிகமாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ உட்கொள்ளும்போது இரைப்பை, குடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும். தூங்குவதற்கு முன்பு அன்னாசிப்பழம் சாப்பிடுவது செரிமான கோளாறு, வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதிலும் புரோமெலைன் நொதி இரைப்பை அமிலத்தின் உற்பத்தியை தூண்டி அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.
தர்ப்பூசணி:
தர்ப்பூசணி நீர்ச்சத்து மிகுந்த புத்துணர்ச்சியூட்டும் பழமாகும். அதில் நீர் அதிகம் இருப்பதால் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். தூங்குவதற்கு முன்பு அதனை உட்கொள்வது வயிறு வீக்கம் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக அளவில் சாப்பிட்டால், அதிகப்படியான நீர் மற்றும் சர்க்கரையை ஜீரணிக்க உடல் கடுமையாக போராடும். அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் தூக்கம் தடைபடும்.
மாம்பழம்:
இதில் இயற்கையான சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. தூங்குவதற்கு முன்பு மாம்பழம் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதனால் தூக்கமும் தடைபடலாம்.
வாழைப்பழம்:
வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டிய சிற்றுண்டியாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அதிகம் சாப்பிடுவது ஆபத்தானது. நன்கு பழுக்காத பழமாக இருந்தால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளன. அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். இருப்பினும், படுக்கைக்கு முன்பு வாழைப்பழங்களை அதிகமாக உட்கொள்வது வயிறு வீக்கம், அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
- நம்மில் எத்தனை பேருக்கு கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து தெரியும்?
- எழுத்துக்களை நல்ல பெரிய எழுத்துருக்களில் படிக்கவும்.
இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் கையிலும் செல்போன்கள் வந்து விட்டன, இதன் கூடவே கண்கள் சோர்வு வந்துவிட்டது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்குதலுக்கு பிறகு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மோகத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். மொபைல் ஃபோன், லேப் டாப், ஐ பேட் என வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கேட்ஜட்களும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
அதில் முதன்மை வகிப்பது மொபைல் போன்கள் தான். என்னதான் உலகை ஒரு சிறு பெட்டிக்குள் அவை இணைத்தாலும், அதற்கான பின்விளைவு களையும் நாம் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. அதுவும் முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தும் பகுதி என்றால் அவை கண்கள்தான்.
உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் நடப்பதை உடனடியாக பார்க்க முடியாத விஷயங்களை கூட நம்மை பார்க்க வைக்கும் இந்த எலக்ட்ரானிக் டிவைஸ்களால் நாளடைவில் நம்மை நிரந்தரமாக பார்வையே இல்லாமல் கூட செய்ய முடியும்.
மன அழுத்தம், ரத்த அழுத்தம் பற்றியெல்லாம் கேள்விபட்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து தெரியும்? நம்மை பொறுத்தவரை கண்கள் தெரிந்தால் போதும், ஆனால் அதை முறையாக பராமரிக்கிறோமா என்றால் இல்லை.
எல்லாவற்றையும் பார்க்க தெரிந்து கொள்ள நாம் முதலில் பயன்படுத்துவது கண்களைத் தான். நார்மலாக ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 20 முறை வரை கண் இமைகள் மூடி திறக்கும். அதுவே ஒரு புத்தகம் படிக்கும்போதோ அல்லது டிவி, மொபைல் பார்க்கும்போதோ ஒரு நிமிடத்திற்கு ஒன்றிலிருந்து இரண்டு முறைதான் அவை திறந்து மூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உங்களது கண்களை ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை உங்கள் டிவைஸிலிருந்து கண்ணை திசைதிருப்பி 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பாருங்கள். இப்படி தொடர்ந்து செய்வது கண்களை பாதுகாக்கும் குறிப்பாக கண்கள் உலர்ந்து போகாமல் தடுக்கும்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இரே இடத்தில் உட்கார கூடாது. கண்களுக்கு அதிக பணி கொடுக்க கூடாது. அதற்கு போதுமான இந்த இடைவெளி தேவை. நீங்கள் பயன்படுத்தும் அறையில் நல்ல வெளிச்சம் நிறைந்த மின்விளக்குகளை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கண்கள் சிரமமின்றி பார்க்க அல்லது படிக்க வேண்டியவற்றை பார்த்து கொள்ளும்.
உங்கள் டிவைஸின் ஸ்கிரீனை ஒரு கை அளவு தூரத்தில் எப்போதும் வைத்துக் கொள்ளவும். அதே போல் உங்கள் கண்பார்வைக்கு 10 டிகிரி கீழே உங்கள் ஸ்கிரீன் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அதே போல் ஸ்கிரீன் வழியாக படிக்கும் போது எழுத்துக்களை நல்ல பெரிய எழுத்துருக்களில் படிக்கவும்.
குறுகிய வடிவ எழுத்துக்கள் கண்களுக்கு படிக்க சிரமத்தை ஏற்படுத்தும். எனவே ஸ்கிரீனை பெரிது படுத்தி பயன்படுத்தவும். மேலும் நீங்கள் அமர்ந்திருக்கும் வடிவம் சவுகரியமானதாக இருந்தால் மட்டும் கழுத்து, இடுப்பு, கண்களுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். அமரும் போதே சரியான இடத்தில் அமருங்கள்.
- ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது.
- ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது.
உட்கடசனா (நாற்காலி போஸ்)
* உத்கடாசனா நமது தொடை தசைகள் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்துகிறது.
* இந்த ஆசனம் நமது தோள்பட்டைகள், முதுகு, இடுப்பு மற்றும் பிட்டம் ஆகிய உறுப்புகளை சீராக்குகிறது. மேலும் நமது தசைகளை இறுக்கி, அவற்றுக்குள்ளேயே வலிமையைத் தருகிறது.
* தட்டையான பாதங்களினால் சிரமப்படுபவா்களுக்கு உத்கடாசனா மிகப் பொிய நன்மையைச் செய்கிறது. அதாவது தட்டைப் பாதப் பிரச்சினையை படிப்படியாகக் குணப்படுத்துகிறது.
* இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உத்கடாசனா மிகவும் உதவியாக இருக்கிறது. இது இதயத்தை மேம்படுத்தி, இதயத்தையும் அதன் துடிப்பையும் தூண்டிவிடுகிறது. பதங்குஸ்தாசனம் (பெருவிரல் போஸ்)
இந்த ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. பதங்குஸ்தாசனத்தில் கால்களின் விரல்களை கைகளின் கட்டைவிரல்களால் தொட வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
உத்தனாசனம் (முன்னோக்கி நிற்கும் வளைவு)
உத்தனாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது முக்கியமாக கணுக்கால், முழங்கால்கள், தொடைகளில் வலிமையை உருவாக்குகிறது. இது தசையின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. உத்தனாசனம் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்கிறது.
உத்தாசனத்தில் உடலின் மேல் பகுதி தரையை நோக்கி வளைவதுடன், தலை பாதங்களைத் தொடுவது போல இருக்க வேண்டும். இதன் காரணமாக, இதயத்தை நோக்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கத் தொடங்கலாம். இது இதய செல்திறனை மேம்படுத்துகிறது.
தடாசனா (மலை போஸ்)
தடாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது மிகவும் பயனுள்ள ஆசனமாகும். இந்த ஆசனம் செய்வது உடல் தோரணையை மேம்படுத்துவதுடன், உடல் சீரமைப்பை சரியாக்குகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் மன வலிமையை அதிகரிக்கிறது.
கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் எதிர்மறை எண்ணங்களைக் குறைக்கிறது. நுரையீரலை சுத்தம் செய்வதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்துகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் நேர்மறையை ஊக்குவிக்கிறது. கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. உங்கள் முதுகுத்தண்டில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
சக்ராசனம்
இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் யோகாசனங்களில் சக்ராசனம் மிகவும் கடினமான ஒன்றாகும். இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பிட்டம், முதுகு மற்றும் கால்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும். இது தவிர, இந்த ஆசனம் செய்வது மார்பு தசைகளை நீட்டுவதுடன் முதுகுத் தண்டின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய செயல்பாட்டை அதிகரிக்கிறது.
முதுகு எலும்புகளைப் பலப்படுத்துவதுடன் புத்துணர்ச்சியை அளிக்கிறது. நீண்ட நேரம் மேசையில் அமர்ந்து கணினி பயன்படுத்துவோர்களுக்கு மன அழுத்தம், கோபம் மற்றும் கூன் முதுகு வராமல் தடுக்கும்.
இந்த ஆசனங்கள் அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் ஆசனம் செய்யும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதைத் தவிர்ப்பது நல்லது. எனவே நிபுணரின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த ஆசனம் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.
- ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்.
- ஜீரண உறுப்புகள் சரியாக செயல்பட இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது.
இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது உடல் முழுவதும் ரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கவும் முக்கியம்.
இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை மிகவும் பொதுவான ஒன்றாகும். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய போதுமான இரும்புச்சத்து உடலில் இல்லாதபோது ஏற்படுகிறது. ஆய்வின்படி, குழந்தைகளில் 30 முதல் 50 சதவிகிதம் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுகிறது. சோர்வு, பலவீனம் மற்றும் வெளிர் தோல் ஆகியவை அறிகுறிகளாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும், ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படவும் இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன, அவற்றை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என அறிவோம்...
இரும்புச்சத்து குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது:
கீரைகள்:
உணவில் அதிகளவு கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கீரைகளில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக கீரைகளில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது.
நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்:
முந்திரி பருப்பு, ஆப்ரிகாட், பாதாம் பருப்பு, வாதுமை, உலர்ந்த பழங்கள் மற்றும் பேரீச்சம் பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது.
பருப்பு வகைகள்:
பருப்பு வகைகளிலும் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது. சோயா, பீன்ஸ், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால், இரும்புச் சத்தை அதிகரிக்கலாம். பாசிப்பயிறு, முழு கருப்பு உளுந்து போன்ற பயிறு வகைகளைச் சாப்பிடுவது இன்னும் அதிக அளவிலான இரும்புச்சத்து கிடைக்க வழி வகைசெய்யும்.
விதைகள்:
பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். இதுவும் உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கும்.
செறிவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள், ஓட்ஸ் நல்ல ஆதாரங்களாகும். ஒரு கப் செறிவூட்டப்பட்ட தானியங்கள் போதுமான அளவு இரும்புச்சத்தை வழங்கும். கூடுதலாக, பாதாம், திராட்சை மற்றும் முந்திரி போன்ற சில பழங்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம்.
மீன்:
மீன் வகைகளில் ஷெல்பிஷ், நண்டு, டூனா மற்றும் சார்டைன்ஸ் போன்ற மீன்களில் இரும்புச் சத்து காணப்படுகிறது. சிவப்பு இறைச்சி, கோழி, கடல் உணவுகள், பருப்பு வகைகள், டோஃபு, கொட்டைகள், விதைகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லேட் உடம்பிற்கு தேவையான இரும்புச் சத்தையும், ஆன்டி ஆக்சிடென்டுகளையும் தருகிறது. டார்க் சாக்லேட்டில் 55 சதவிகிதம் கோக்கோ மற்றும் நிறைய இரும்புச்சத்து காணப்படுகிறது.
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது தாவர மூலங்களில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடைமிளகு மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றில் காணப்படுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், இரும்புச்சத்து உறிஞ்சுதலில் தலையிடக்கூடிய சில பொருட்களின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இந்த பொருட்களில் காபி, தேநீர் மற்றும் பால் பொருட்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் அடங்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்