search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanged"

    • வில்லியனூரில் சோக சம்பவம்
    • அதிகமாக மது குடித்து வந்ததால் சுந்தரத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த கணுவாய்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் சுந்தரம்(வயது47). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தன.

      ஆனால் உடல்நலக்குறைவால் அந்த குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போனது. இதனால் சுந்தரம் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த சோகத்தை மறக்க மது பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

    தினமும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனால் குடும்பத்தை நடத்த மஞ்சுளா வில்லியனூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் சுந்தரத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது.

    இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஏற்கனவே குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் சோகத்தில் இருந்த சுந்தரம் தனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை வழக்கம் போல் மஞ்சுளா ஓட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    அதன் பின்னர் சுந்தரம் வீட்டில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாய்க்கு உதவியாக வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தாயின் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பொறையூர் பேட் புது நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் புதுவை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி கோமளா. இவர்களது மூத்த மகள் தவப்பிரியா 14 இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த தவப்பிரியா தாய்க்கு உதவியாக வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை வெங்கடேசன் கண்டித்தாக தெரிகிறது. இதனால் தவப்பிரியா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

     வெங்கடேசன் வெளியே சென்று விட்டார். அவரது மனைவி கோமளா மளிகைக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது வீட்டில் தனியக இருந்த தவப்பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தாயின் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார்.

    சிறிது நேரம் கழித்து பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கோமளா மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தவப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த சிவராந்தகம் பேட் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் வில்லியனூர் கொம்யூன் டேங்க் ஆப்ரேட்டராக அரியூர் வள்ளலார் தண்ணீர் டேங்கில் பணியாற்றி வந்தார்.

     அவருக்கு காத்தாயி என்ற மனைவியும், நதியா என்ற மகளும், தேவநாதன் என்ற மகனும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி யினருக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

     வீட்டுக்கு வந்து சாப்பிட்ட பின்னர் அரியூரில் உள்ள தண்ணீர் டேங்குக்கு சென்றவர் டேங்கில் தண்ணீர் ஏற்றவில்லை.

    சக ஊழியர் பாபு அதிகாலை செல்வத்திற்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. உடனே பாபு செல்வத்தின் மகன் தேவநாதனுடன் தண்ணீர் டேங்க் அறையில் சென்று பார்த்த போது செல்வம் அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.

    இதனை பார்த்துஅதிர்ச்சி அடைந்த தேவநாதன் இது குறித்து அவரது தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். வில்லியனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து செல்வத்தின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனிசாமி மின் விசிறியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள திங்களூர் அடுத்த திருக்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவருக்கு திரு மணமாகி அன்னக்கொடி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.

    இவர் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று பழனிசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவ ர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து பழனிசாமியின் மனைவி அன்னக்கொடி கோபித்து கொண்டு மகள்க ளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் பழனிசாமியின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீடு உள் பக்கமாக மூடி இருந்தது.

    வீட்டிக் கதவை தள்ளி திறந்து பார்த்த போது அங்கு பழனிசாமி மின் விசிறியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மரத்தில் 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மரத்தில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வில்லியனூரில் சுற்றுலா வாகன டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதற்கிடையே கிருஷ்ணசாமி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மது குடிக்க பணம் இல்லாமல் திண்டாடிவந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் சுற்றுலா வாகன டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் கணுவா பேட்டை புது நகரை சேர்ந்தவர் கிருஷ்ண சாமி (வயது 66). இவர் சுற்றுலா வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மாலதி என்ற மனைவியும் 2 மகளும் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வயது முதிர்ச்சி காரணமாக கிருஷ்ண சாமி கடந்த சில ஆண்டுகளாக டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் கிருஷ்ணசாமிக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்தது. இதனால் குடும்பத்தை நடத்த மாலதி துத்திப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இதற்கிடையே கிருஷ்ணசாமி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மது குடிக்க பணம் இல்லாமல் திண்டாடிவந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கிருஷ்ணசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது மனைவி வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் உள்ள இரும்பு பைப்பில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கினார்.

    அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகன் பார்த்த சாரதி தந்தை தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை தூக்கில் இருந்து மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி மாலதி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மடுகரையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • 2 ஆண்டுகளுக்கு முன்பு முருவனின் வலது காலில் ஈச்சமுள் குத்தி விட்டது.

    புதுச்சேரி:

    மடுகரையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ராம்ஜிநகரை அடுத்த புதுநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முருவன் (வயது62). கூலி தொழிலாளி. இவருக்கு மொளவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருவனின் வலது காலில் ஈச்சமுள் குத்தி விட்டது. ஆனால் இதற்கு மருத்துவம் பார்க்காமல் முருவன் அலட்சியமாக இருந்து விட்டதால் அவருக்கு காலில் காயம் பரவியது. இதனால் தினமும் முருவன் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில்  கால் வலி அதிகமானதால் முருவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டின் ஜன்னலில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து முருவனின் மகன் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து தனது தந்தையை தூக்கில் இருந்து மீட்டு மினிவேன் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குயவர்பாளையத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு இறந்து போனார். இதனையறிந்த அவரது நண்பரும் வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் கேட்டரிங் படித்து விட்டு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ரெசிடெண்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    புதுச்சேரி:

    குயவர்பாளையத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு இறந்து போனார். இதனையறிந்த அவரது நண்பரும் வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை குயவர்பாளை யம் புது அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாலமுருகன் (வயது24). இவர் கேட்டரிங் படித்து விட்டு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ரெசிடெண்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இதேபோல் கடலூர் தில்லைநாயகம் புரத்தை சேர்ந்த கார்த்திக்(25) என்பவர் புதுவை வண்ணான்குளத்தில் வாடகை வீட்டில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார். பாலமுருகனும், கார்த்திக்கும் நண்பர்கள் ஆவார்கள். அடிக்கடி கார்த்திக் வீட்டுக்கு வந்து பாலமுருகன் சாப்பிட்டு செல்வார்.

    இந்த நிலையில் பாலமுருகன் அவரது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கார்த்திக் ஆஸ்பத்திரிக்கு சென்று நண்பரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்தார். அப்போது கார்த்திக் சோகத்துடன் இருந்ததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவுரி(51) என்பவர் கார்த்திக்கிடம் சோகத்துக்கான காரணத்தை கேட்டார். அதற்கு கார்த்திக் தான் உயிருக்கு உயிராக பழகிய நண்பர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தேம்பிதேம்பி அழுதார். அவருக்கு கவுரி ஆறுதல் தெரிவித்து தூங்கினால் சோகம் குறையும் என்று சமாதானம் செய்து அவரை தூங்க வைத்து விட்டு கவுரி தன் வீட்டுக்கு சென்று தூங்கினார்.

    இந்த நிலையில் கவுரி தூங்கி எழுந்த போது வீட்டின் வராண்டாவில் கார்த்திக் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நண்பர் பிரிவை தாங்க முடியாமல் மனவேதனையில் கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து கவுரி முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கார்த்திக்கின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அரியாங்குப்பம் அருகே எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அரியாங்குப்பம் அருகே மணவெளி மாஞ்சாலை ரோடு வரதராஜா கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது60). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் ரமேஷ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

    ஜெயசித்ரா அரியாங்குப்பத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே 4 மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரன் விபத்தில் சிக்கி தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கால் பகுதியில் எரிச்சல் அதிகரித்ததால் அதற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் வலி குறையாததால் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் வழக்கம் போல் ஜெயசித்ரா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேந்திரன் மட்டும் இருந்தார். ஜெயசித்ரா கணவருக்கு போன் செய்த போது அவர் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    பின்னர் மீண்டும் போன் செய்து பார்த்தும் ராஜேந்திரன் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜெயசித்ரா ஓடைவெளியில் வசிக்கும் தனது மகள் சாந்தலட்சுமிக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

    அதன்படி சாந்தலட்சுமி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது தந்தை ராஜேந்திரன் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குழப்பு காரமாக இருப்பதாக கூறி சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை சுந்தரமூர்த்தி வெளியே வீசி விட்டார்.

    புதுச்சேரி:

    சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூரை அடுத்த சிவன்படபேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் கீதா(வயது26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று கீதா ஆட்டுக்கறி குழம்பு சமைத்து வைத்திருந்தார். மதியம் கீதா கணவருக்கு அதனை பறிமாறினார். அப்போது குழப்பு காரமாக இருப்பதாக கூறி சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை சுந்தரமூர்த்தி வெளியே வீசி விட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கி டையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் கீதா மனவேதனை அடைந்தார்.

    பின்னர் சுந்தரமூர்த்தி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கீதா கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    கடைக்கு சென்று திரும்பிய சுந்தரமூர்த்தி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்ததார். அப்போது மனைவி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மனைவியை தூக்கில் இருந்து மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்து க்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கீதாவை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீதா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்து போனார்.

    இதுகுறித்து கீதாவின் தாய் வாசுகி கொடுத்த புகாரின் பேரில் நெட்டப் பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #Bribe #maduraicourt
    சென்னை:

    லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- 

    லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சம் வாங்குவது குறையும்.

    கடும் தண்டனை அளித்தால் தான் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும். லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

    இவ்வாறு  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. #Bribe #maduraicourt
    பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமுகனுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை உடன் இருந்தார். #ImranAli
    லாகூர்:

    பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் இம்ரான் அலி (30). இவன் 9 சிறுமிகளை கற்பழித்தான்.

    அவர்களில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது உடலை குப்பையில் வீசினான். இது குறித்து அவனை கைது செய்த போலீசார் லாகூர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அத்துடன் 3 ஆயுள் தண்டனை மற்றும் 23 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

    அவன் லாகூரில் உள்ள காட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் மாஜிஸ்திரேட்டு அடில் சர்வார் முன்நிலையில் இம்ரான் அலி தூக்கில் போடப்பட்டான்.

    அப்போது கற்பழித்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தையும் உடன் இருந்தார். தூக்கில் போடப்பட்ட பின் இம்ரான் அலியின் உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. #ImranAli
    ×