என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு சாவு
புதுச்சேரி:
அரியாங்குப்பம் அருகே எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அரியாங்குப்பம் அருகே மணவெளி மாஞ்சாலை ரோடு வரதராஜா கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது60). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் ரமேஷ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
ஜெயசித்ரா அரியாங்குப்பத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே 4 மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரன் விபத்தில் சிக்கி தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கால் பகுதியில் எரிச்சல் அதிகரித்ததால் அதற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் வலி குறையாததால் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் வழக்கம் போல் ஜெயசித்ரா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேந்திரன் மட்டும் இருந்தார். ஜெயசித்ரா கணவருக்கு போன் செய்த போது அவர் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
பின்னர் மீண்டும் போன் செய்து பார்த்தும் ராஜேந்திரன் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜெயசித்ரா ஓடைவெளியில் வசிக்கும் தனது மகள் சாந்தலட்சுமிக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.
அதன்படி சாந்தலட்சுமி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது தந்தை ராஜேந்திரன் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்