என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • மடுகரையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • 2 ஆண்டுகளுக்கு முன்பு முருவனின் வலது காலில் ஈச்சமுள் குத்தி விட்டது.

    புதுச்சேரி:

    மடுகரையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ராம்ஜிநகரை அடுத்த புதுநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முருவன் (வயது62). கூலி தொழிலாளி. இவருக்கு மொளவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருவனின் வலது காலில் ஈச்சமுள் குத்தி விட்டது. ஆனால் இதற்கு மருத்துவம் பார்க்காமல் முருவன் அலட்சியமாக இருந்து விட்டதால் அவருக்கு காலில் காயம் பரவியது. இதனால் தினமும் முருவன் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கால் வலி அதிகமானதால் முருவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டின் ஜன்னலில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து முருவனின் மகன் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து தனது தந்தையை தூக்கில் இருந்து மீட்டு மினிவேன் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×