search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hamas"

    • ஒன்றரை மாத போருக்குப்பின் 4 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
    • பின்னர் மேலும் இரண்டு நாள் அதன்பின் ஒருநாள் என மொத்தம் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட உலக நாடுகள் விரும்புகின்றன. அமெரிக்காவும் கட்டாயம் போர் நிறுத்தம் தேவை என்கிறது. அதோடு கத்தாருடன் இணைந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாகத்தான் ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்திருந்த சுமார் 90 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 270 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதுடன், மீண்டும் காசா மீது தாக்குதல் தொடங்கியது.

    தற்போது ஹமாஸ் பிடியில் 135 பிணைக்கைதிகள் இருப்பதாகவும், இவர்களில் 115 பேர் உயிருடன் இருக்கலாம் எனவும் இஸ்ரேல் பிரதம மந்திரி அலுவலகம் நம்புகிறது.

    இதற்கு முன்னதாக கத்தாரின் தோகாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே இடத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதில் இஸ்ரேல் சார்பில் மொசாட் தலைவர் டேவிட் பார்னியா கலந்து கொள்ள இருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் அவரது பயணத்தை ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தலைமையலான இஸ்ரேல் போர் கேபினட், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் நாட்டின் உயர் அதிகாரி செல்லக்கூடாது என முடிவு எடுத்து, டேவிட் பார்னியாவின் பயணத்தை ரத்து செய்துள்ளது.

    • ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட ஐ.நா. சபையில் தீர்மானம்.
    • உதவி செய்து வந்தாலும் அமெரிக்காவும் போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்கிறது.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இரண்டு மாதங்களை கடந்து 3-வது மாதமாக நடைபெற்று வருகிறது.

    வடக்கு காசாவை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போது பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும், பிணைக்கைதிகள் முழுமையாக மீட்கப்படாமல் உள்ளனர்.

    இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. சபையில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், போர் நிறுத்தம் தேவை என இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் சர்வதேச நாடுகள் ஆதரவோடு அல்லது ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோஹன் தெரிவித்துள்ளார். மேலும், "தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு பரிசு (gift) போன்று அமைந்துவிடும். திரும்ப வந்து இஸ்ரேல் மக்களுக்கு மிரட்டல் கொடுக்க அனுமதித்துவிடும்" என்றார்.

    அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர் நேதன்யாகுவை சந்திக்கிறார். இதற்கிடையே, போருக்குப்பின் கையாளப்படும் காசாவை கையாளப்படும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    • சுரங்கங்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது.
    • பிணைக்கைதிகளையும் சுரங்கங்களில் அடைத்து வைத்திருக்கலாம் என நம்புகிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது எனக்கூறி இஸ்ரேல் ராணுவம் காசா மீது பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு காசா அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைத்துள்ளது.

    என்றபோதிலும் வீடுகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் ஆகியற்றுடன் சுரங்கங்கள் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. அதற்கு ஏற்ப பல்வேறு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வந்தது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் ரகசிய சுரங்கத்திற்குள் பிணைக்கைதிகளை வைத்திருக்கலாம். அவர்கள் மறைந்து இருக்கலாம். ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புகிறது.

    இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணியை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை சுரங்கங்களை அழிக்க பயன்படும் என சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    • உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
    • நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது.

    பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன.

    அரபு நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அப்போது அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லைஎன பெரும்பாலான நாடுகள் விமர்சனம் செய்திருந்தன.

    இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

    ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது. உலக மக்களுக்கு ஒரு சம்பவத்தில் உலக நாடுகள் எடுக்கும் முடிவை இதன் மூலமாக வலியுறுத்த மட்டுமே செய்ய முடியும்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலஸ்தீன கைதிகள்- பிணைக்கைதிகள் விடுவிப்பு பரிமாற்றம்.
    • பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு இல்லாமல் பிடித்து வைக்கப்பட்டவர்கள் உயிருடன் திரும்பமாட்டார்கள்.

    இஸ்ரேல் படை- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 2 மாதத்தை கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இடையில் 7 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    ஆனால் மீண்டும் போர் தொடங்கி இருப்பதால் தற்போது இஸ்ரேல் ராணுவத்தினர் காசா முழுவதும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தரை வழியாகவும், வான்வெளி வழியாகவும் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    தொடர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காசா நகரம் இனி மேம்படுத்த முடியாத அளவில் கடும் பேரழிவை சந்தித்து இருக்கிறது. அந்த நகரமே சின்னாபின்னமாகி விட்டது.

    இந்த போரில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதுவரை 17,997 பேர் சண்டையில் இறந்து விட்டதாக காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை வலியுறுத்தி வந்த போதிலும் அந்நாடு தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்த 240 பேரில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 105 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீன கைதிகளை அந்நாடு விடுதலை செய்தது.

    இந்த சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் இரு படையினரும் நேருக்கு நேர் சண்டையிட்டு வருகின்றனர்.

    ஹமாசிடம் இன்னும் பலர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்த பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் பிணைக்கைதிகளை அவர்கள் உயிருடன் பிடிக்க முடியாது என ஹமாசின் ஆயுதப்பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் காசாவில் புதிய போர் நிறுத்தம் கொண்டு வரவும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது.

    ஆனால் ஹமாஸ் எச்சரிக்கையை புறந்தள்ளிவிட்டு காசா மீது இன்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே ஹமாஸ் தலைவருக்காக உயிரை இழக்காதீர்கள். சரணடையுங்கள் என ஹமாஸ் அமைப்பினருக்கு நேதன்யாகு எச்சரித்துள்ளார்.

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழப்பு.
    • பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் வடக்குப் பகுதிகளை அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைத்துவிட்டது. தற்போது தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், சண்டை முடிவுக்கு வருவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இனிமேல் சரணடைவதுதான்... என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேதன்யாகு கூறுகையில் "சண்டை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கிவிட்டது. சண்டை முடிகிறது.

    எஹ்யா சின்வருக்காக உயிர் இழக்காதீர்கள். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். கடந்த சில தினங்களாக பல ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்களது படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்" என்றார்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்ததாக நேதன்யாகு கூறியபோதிலும், அதற்கான ஆதாரத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பும் நேதன்யாகு கருத்தை புறக்கணித்துள்ளது.

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக,

    ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதோடு, எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் 1200 பேர் உயிரிழந்தனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. இதுவரை காசாவில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகிறார்கள்.

    பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை சர்வதேச அமைப்புகள் அனுப்பி வருகின்றன.
    • சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை ஹமாஸ் கொள்ளையடிக்கிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவித்தது.

    இதையடுத்து, காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுப்பி வருகின்றன.

    இந்நிலையில், காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் குற்றம்சாட்டின.

    மேலும், காசாவின் தேவைகளை விட ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாதத்துக்கே முன்னுரிமையை அளித்து வருவதாகக் கூறிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்குதல்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் திருடும் வீடியோக்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    • இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
    • கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க இஸ்ரேல் உலக நாடுகளுக்கு வலியுறுத்தல்.

    பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேல் எல்லையில் உள்ள காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை ஒரு சில நாடுகள் பயங்கரவாத அமைப்பு என்று அழைத்த போதிலும், பெரும்பாலான நாடுகள் அவ்வாறு அறிவிக்கவில்லை. காசாவில் ஹமாஸ் தனியாக ஆட்சி அதிகாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில்தான் அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து எதிர்பாராத வகையில் கொடூர தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், தலையை துண்டித்தும் கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினரை பகிரங்கமாக பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் உலக நாடுகளை வற்புறுத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்திய பிரதமர் தெரிவித்தார். இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், இந்தியா ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்த நிலையில்தான் பாராளுமன்றத்தில் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லெகி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்ததாகவும், கடிதம் ஒன்று வெளியானது.

    இந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை தடைசெய்யும் முன்மொழிவு ஏதேனும் உள்ளதா? என ஒருவர் மீனாட்சி லெகியை டேக் செய்து கேட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த மீனாட்சி லெகி, "உங்களுக்கு தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி மற்றும் பதிலுடன் நான் எந்த பேப்பரிலும் கையெழுத்திடவில்லை" என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து பதில் அளித்துள்ளார்.

    • காசா எல்லையில் நடைபெற்ற சண்டையில் மரணம் அடைந்தார்.
    • போரில் இஸ்ரேல் பல்வேறு ராணுவ வீரர்களை இழந்துள்ளது.

    இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினந்தோரும் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வரிசையில், இந்திய வம்சாவழியை சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் காசா எல்லையில் நடைபெற்ற சண்டையில் மரணம் அடைந்துள்ளார்.

    ஆஷ்டோட்-ஐ சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற சண்டையில் உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் புதன் கிழமை நடைபெற்றது. காசா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன் மேலும் இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கிறது.

     


    "ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய தீய மற்றும் கொடூரமான போரில் இஸ்ரேல் பல்வேறு ராணுவ வீரர்களை இழந்துள்ளது. அந்த வகையில் இன்று இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர் மாஸ்டர் கில் டேனியல்ஸ் (34) உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம்," என்று இந்திய யூத பாரம்பரிய மையம் தெரிவித்துள்ளது. 

    • நான்கு நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே ஏற்பட்டது.
    • பின்னர் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டு ஏழு நாளாக அதிகரித்தது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல் 240 பேரை பிணைக்கைதிகளைாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 46 நாட்கள் இடைவிடாத தாக்குதலில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

    இதனால் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் போர் நிறத்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டன. இதன் பயனாக கடந்த 24-ந்தேதி வெள்ளிக்கிழமை இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஒரு பிணைக்கைதியை விடுவிக்க 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.

    முதல் நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது 50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின் இரண்டு நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது.

    நேற்று மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. 7-வது நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றது. ஹமாஸ் அமைப்பினர் அனைத்து பாலஸ்தீனர்களையும் ஜெயிலில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினர் அனைவரையும் விடுதலை செய்கிறோம் எனத் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் எனத் தெரிவித்தது. இதனால் இழுபறியான நிலையில் கடைசி நிமிடத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இதனால் 7-வது நாளான நேற்று ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர். இஸ்ரேல் ஜெயிலில் இருந்து பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் ஏழு நாள் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வருகிறது. இதனால் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே பிணைக்கைதிகள்- பாலஸ்தீனர்கள் விடுதலை பரிமாற்றத்திற்காக இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதை விரும்புவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    உலக நாடுகளும் இதைத்தான் விரும்புகின்றன. இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டணி பிளிங்கடன், "இந்த நடைமுறை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்பதை பார்க்கிறோம். 8-வது நாள், அதையும் தாண்டி இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    இஸ்ரேல் தெற்கு காசாவில் தாக்குதலை விரிவுப்படுத்தினால் மக்கள் அதிகமான அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பாதுகாப்பான இடத்தை உருவாக்கி, அந்த இடத்தில் குண்டு மழை பொழியாது என்பதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுதத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயல்பாட்டை மீறிவிட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இதனால் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததுள்ளது.

    • முதலில் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. பின்னர் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
    • ஹமாஸ் ஒரு பிணைக்கைதியை விடுவிக்கும்போது, இஸ்ரேல் 3 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கத்தார், எகிப்பு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டன.

    இதன் பயனாக இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்குப் பதிலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. ஒரு பிணைக்கைதிக்கு மூன்று பாலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் பரிமாற்றம் நடைபெற்றது.

    முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. நேற்று 6-வது நாளாக ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதற்குப் பதிலாக இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுவித்தது.

    இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடருமா? போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவு இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் "ராணுவ நடவடிக்கை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது அப்படியே தொடரும். வரையறைக்கு உட்பட்டு மத்தியஸ்தரர்கள் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தொடருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் ஒரு பிணைக்கைதியை விடுவிக்கும்போது, இஸ்ரேல் 3 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்கும். மேலும், காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

    கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் எதிர்பாராத வகையில் கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.

    ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 1200 பேரும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

    • ஆறு நாள் போர் நிறுத்தத்தின்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர்.
    • பிணைக்கைதிகளுக்குப் பதிலாக பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களை ஹமாஸ் விடுவித்து வந்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்படுள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

    நான்கு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு மேலும் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்றிரவு கடைசி கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்துள்ளது. காசா முனையில் இருந்து எகிப்து ராபா எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளனர்.

    மருத்துவ பரிசோதனைக்குப்பின் குடும்பத்தினருடன் சேர்க்கப்படுவார்கள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடைசி கட்டமாக பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள்.

    இன்று காலை 10.30 மணியுடன் ஆறு நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. அதன்பின் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளும்.

    10 மாத குழந்தை மற்றும் அந்த குழந்தையின் குடும்பத்தினரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்கள் காசா மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் இஸ்ரேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×