search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GV Prakash"

    • ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியிடும் விழா இன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜி வி பிரகாஷ், இவானா, இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். கள்வன் படத்தின் டிரெயிலர் 11.30 மணி அளவில் வெளியானது.

    படத்தின் டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஊரினுள் யானை நழைந்ததாக தகவல் வருகிறது அதனால் யாரும் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கின்றனர். அக்காட்டுப் பகுதியில் காவல் நிப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

    அப்பொழுது கதாநாயகனான ஜி வி பிரகாஷ் மற்றும் அவன் கூட்டாளியான தீனா காட்டு பகுதிக்குள் காவலுக்காக செல்கின்றனர் அதற்கடுத்து அவர்களுக்கு என்ன ஆனது, காட்டில் இருந்து அவர்கள் எப்படி யானையிடம் இருந்து மீண்டு வந்தனர் என்பதே மீதிக்கதை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'கேங்ஸ் ஆப் வாசிப்பூர்' படம் எடுக்க காரணமே சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் தான்
    • அனுராக் காஷ்யப்பிற்கு எப்பொழுதும் தமிழ் சினிமா மீதும் , மலையாள சினிமா மீதும் ஒரு ஆர்வம் உண்டு.

    அனுராக் காஷ்யப் இந்தி சினிமாவின் முதன்மையான இயக்குனர். ராம் கோபால் வர்மாவுடன் இணைந்து தொலைக்காட்சி தொடரான 'சத்யா'-வில் எழுத்தாளராக தன் பயணத்தை தொடங்கினார். 'பான்ச்' என்ற படத்தை அனுராக் காஷ்யப் முதன் முதலில் இயக்கினார். ஆனால் அப்படம் சென்சார் பிரச்சனைகளால் திரைக்கு வரவில்லை. 2004-ஆம் ஆண்டு 'பிளாக் ஃப்ரைடே'என்ற படத்தை இயக்கினார். 2007 ஆம் ஆண்டு 'நோ ஸ்மோக்கிங்' படத்தையும், 2009-ல் 'தேவ். டி'என்ற படத்தையும் இயக்கினார். 2012 ஆம் ஆண்டு 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்தை இயக்கினார். இத்திரைப்படம் அனுராக் காஷ்யப்புக்கு மிகப் பெரிய பெயரையும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. இத்திரைப்படம் இரண்டு பாகமாக வெளியானது. இரண்டு பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    நெட்ஃபிக்ஸ் முதன் முதலில் தயாரித்த இந்தியன் வெப்சீரிஸான 'சாக்ரட் கேம்ஸ்' என்ற சீரிசை அனுராக் காஷ்யப் இணைந்து இயக்கினார்.

    அனுராக் காஷ்யப்பிற்கு எப்பொழுதும் தமிழ் சினிமா மீதும் , மலையாள சினிமா மீதும் ஒரு ஆர்வம் உண்டு. மலையாள சினிமா அளவிற்கு இந்தி சினிமா என்றுமே படங்களை எடுக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை எப்பொழுதும் வைப்பார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு நெடுநாளாகவே இருக்கிறது. 'கேங்ஸ் ஆப் வாசிப்பூர்' படம் எடுக்க காரணமே சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் தான் என்று அவர் பல நேர்காணலில் கூறியுள்ளார். 'கேங்ஸ் ஆப் வாசிப்பூர் படத்தின்' தொடக்கத்திலே நன்றி மதுரை சாம்ராட் சசிகுமார் என்று தன் அன்பை வெளிப்படுத்தியிருப்பார்.

    இந்நிலையில் அனுராக் காஷ்யப் தமிழ் சினிமாவில் களம் இறங்கவுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி. வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் (PAN INDIA MOVIE)வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

    • இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது.
    • நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார்.

    ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெபல். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 22ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஜி.வி. பிரகாஷ் ரெபல் படம் பற்றி பேசியுள்ளார்.

     


    இது குறித்து அவர் பேசும் போது, "ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ரெபல் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது."

    "தமிழ் பற்றிப் பேசும் கதை, இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலை செய்துள்ளார்."

    "நீண்ட காலம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன். அவர் தான் டார்லிங் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும்," என்று தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டு ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார்

    ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் மட்டுமல்ல நடிப்பிலும் அசுரனாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான பேச்சுலர் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான "ரெபெல்" வெளியாக உள்ளது. அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.

    கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ளார்.

    இந்த படத்தின் டிரைலரை இன்று நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 22-ம் தேதி வெளியாகும் ரெபல் படத்தின் படக்குழு மற்றும் அன்புக்குரிய ஜி.வி. பிரகாஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் இப்படத்தின் பாடல்களும் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    • தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார்.
    • மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான “ரெபெல்” வெளியாக உள்ளது.

    ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்து இருந்தார். கேப்டன் மில்லர் படத்திற்கு கூடுதல் போனசாக இருந்தது ஜி. வி. ப்ரகாஷின் இசை. மக்கள் அனைவராலும் பாராட்டு பெற்றது.

    இவர் இசையமைத்த வா வாத்தி, கருப்பு நெரத்தழகி, மார்க் ஆண்டனி மற்றும் அடியே படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்கள் மனதில் எப்போழுதும் கேட்டுக் கொண்டே இருக்கும். சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர்கான தேசிய விருதை பெற்றார்.

    இசையில் மட்டுமல்ல நடிப்பிலும் இவர் அசுரனாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான பேச்சுலர் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான "ரெபெல்" வெளியாக உள்ளது.அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.

    கேரளாவில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மமிதா பைஜூ இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மார்ச் 22-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.




     


    • ரெபல் படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்குகிறார்.
    • படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரெபல் படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்குகிறார்.

    இந்த படத்தில், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.

    ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி எடுத்துள்ள இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ரெபல் படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியான நிலையில், இன்று படத்தின் 2-வது சிங்கிளான "தி ரைஸ் ஆப் ரெபல்" வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்தில் 'ஸ்டார்டா' தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்த தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஜி. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார்.

    தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலக அளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும் வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


    இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் 'ஸ்டார்டா' எனும் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஜி. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார்.

    இந்த 'ஸ்டார்டா' தளத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், ஜி.வி.பிரகாஷ்குமார், அருண்ராஜா காமராஜ், ரமேஷ் திலக், நிவேதிதா சதீஷ், அபிஷேக் ராஜா, ஷ்யாம் குமார், சி. வி. குமார், தனஞ்ஜெயன், சக்திவேலன், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.வி.பிரகாஷ் "குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்கள் போன்றவற்றிற்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஒத்துழைப்பதில்லை. ஆனால் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றியிருக்கிறேன். அந்த வகையில் இந்த 'ஸ்டார்டா' தளத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்றிருப்பதற்கும் மகிழ்கிறேன்.

    திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும் தளமாக இந்த 'ஸ்டார்டா' இருக்கும் என எதிர்பாக்கிறேன். நிறைய பேரின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்ற இந்த தளத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என விரும்பினேன். அதனால் இந்த தளத்தில் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தளத்தின் மூலம் நிறைய பேருக்கு வாய்ப்புகிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நானும் என்னுடைய படங்களுக்கு இந்த தளத்தில் உள்ள திறமைசாலிகளை தேர்வு செய்து வாய்ப்பளிக்க முயற்சிக்கிறேன். புதிய கலைஞர்களுக்கு இந்த தளம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார். 

    • நடிகை திவ்ய பாரதி 'கிங்ஸ்டன்’ படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தினை ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார்.

    இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இது இவரின் 25-வது படமாகும். இவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடிக்கிறார். மேலும், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


    கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம் ஆகும்.


    இந்நிலையில், நடிகை திவ்ய பாரதி 'கிங்ஸ்டன்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரெபெல்'.
    • இப்படத்தை நிக்கேஷ் இயக்கியுள்ளார்.

    அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மார்ச் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    • நடிகை கங்கனா இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.


    ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.


    எமர்ஜென்சி போஸ்டர்

    இந்நிலையில், 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை கங்கனா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'இடிமுழக்கம்'.
    • இந்த படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ளார்.

    தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் 'இடிமுழக்கம்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ரெபெல்'.
    • இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ரெபெல் போஸ்டர்

    இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    ×