search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grama sabha meeting"

    • ஆண்டுதோறும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.
    • கூட்டத்தில் முக்கிய திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டங்கள் ஆண்டுதோறும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையால் நடத்தப்படுகிறது.

    கிராம சபை கூட்டங்களில் வேளாண்-உழவர் நலத்துறை திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்து ரைக்கவும், காட்சிப்படுத்த வும், பயனாளிகள் பட்டியலை பார்வைக்கு வைத்திடவும் அரசாணை நிலை எண்.41 வேளாண்மை இணை இயக்குநர்களை கிராம சபைக்கூட்ட நிகழ்வினை வேளாண்மைத்துறை மற்றும் அதன் சகோதர துறைகளுடன் ஒருங்கிணைந்து நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் விவசா யிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது.

    கூட்டத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறையின் உழவன் செயலி பற்றிய பயன் பாட்டினை எடுத்துரைத்து, தேவைப்படும் விவசாயி களுக்கு பதிவிறக்கம் செய்தும் கொடுக்கப்பட உள்ளது.

    பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்களை இணைக்கும் அவசியத்தை எடுத்துக்கூறி அத்திட்டப் பயன்களை தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட உள்ளது.

    எனவே, விவசாயிகள் தங்கள் கிராம பஞ்சாயத் துக்களில் நாளை மறுநாள்

    2-ந் தேதி ( ஞாயிற்றுக் கிழமை) நடை பெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை- உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பயன்களை அறிந்து கொண்டு பயன் பெற கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சிகள் ) ஸ்ரீதர், லதா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் , அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஊராட்சியின் வரவு செலவு, சுகாதாரம் ,பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா திட்டம் ,கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா, உழவர் நலத்துறை, குழந்தைகள் அவசர உதவி, வாக்காளர் பட்டியலில்ஆதார் எண் இணைத்தல், நியாய விலைக் கடைகளில் சமூக தணிக்கை ,நமக்கு நாமே திட்டம் குறித்து 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி நடத்தினார் . ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் நாளை கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். அதன்படி, கமல்ஹாசன் இன்று மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, வை‌ஷ்ணவா கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை (26-ந் தேதி) கடலூர் மாவட்டம் குணமங்கலம் மற்றும் அதிசயநத்தத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதையடுத்து தேவனாம்பட்டினம், மந்தாரகுப்பம் மற்றும் விருத்தாசலத்தில் மக்களை கமல்ஹாசன் சந்திக்கிறார்.

    27-ந் தேதி கடலூர் அண்ணா நகரில் நடைபெறும் சான்றோன் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார். இதையடுத்து அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட, பகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். தொடர்ந்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் 6-வது மாநில மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam
    கிராம சபை கூட்டங்கள் மூலம் ஜனவரி 3-ந்தேதி முதல் மக்களை சந்திப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. இன்று தொடங்கியது.

    40 தொகுதிகளில் உள்ள ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 3-ந்தேதி தொடங்கி இந்த கூட்டங்கள் நடைபெறும்.

    இந்த கூட்டங்கள் மூலம் நாங்கள் மக்களை சந்தித்து பேச உள்ளோம். தி.மு.க. மட்டுமின்றி தி.மு.க. கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்கும்.

    கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றார். மக்களோடு மக்களாக அமர்ந்து பேசினார்.

    மேலும் அந்தந்த பகுதி பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால்தான் தி.மு.க. அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    கிராம சபை கூட்டங்கள் தந்த வெற்றி காரணமாக தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கும் அதே பாணி பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளார். #DMK #MKStalin
    அனுப்பப்பட்டு பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கிராம சபை வெறிச்சோடி காணப்பட்டது.
    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 55 பஞ்சாயத்துக்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஒன்றியத்தில் உள்ள அனுப்பப்பட்டு பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கிராம சபை வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு, சாலை சீரமைப்பு, சமுதாயகூடம் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    இதுபற்றி கிராம மக்களிடம் கேட்ட போது எங்கள் ஊராட்சிக்குட்பட்ட வேலப்பாக்கம் அரசு புறம்போக்கு இடத்தில் எங்கள் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு மனை வழங்க வேண்டும், வேறு பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்க கூடாது.

    உத்தன்டிகன்டிகை-அனுப்பம்பட்டு இடையேயான ஒன்றிய சாலை 10 ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சுகாதார நிலையம், சமுதாயக் கூடம் அமைக்க வலுயுறுத்தியும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கமல் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தகோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவள்ளூர்:

    நடிகர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கூறும் போது, ‘‘சுதந்திரதினத்தை யொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் முருகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். சாலையை சீரமைத்தல், தெரு விளக்கு பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் அதே போல், பகுதி நேர ரே‌ஷன் கடைக்கு நிரந்தர கடை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் ஊராட்சி தலைவி சுமதி சிதம்பரநாதன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா பிரசாத் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    விருத்தாசலம் அருகே கலெக்டர் தண்டபாணி அரசு பஸ் மூலம் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்பது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாரிகள் கார் மூலம் சென்று வந்தனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகத்துக்கு அதிக செலவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட கலெக்டர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் அரசு பஸ்சில் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தையடுத்த ராஜேந்திர பட்டினத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா உள்பட அரசு அதிகாரிகள் இன்று காலை அரசு பஸ்சில் புறப்பட்டனர்.

    இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் அரசு பஸ் மூலம் செல்வதால் அதிகாரிகள் அனைவரும் ஒரே பஸ்சில் சென்று கலந்து கொள்கின்றனர். இதனால் அதிகாரிகள் காலதாமதம் இன்றி முகாமில் கலந்து கொள்கின்றனர். கலெக்டர் தண்டபாணி அரசு பஸ் மூலம் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்பது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


    ×