search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anuppampattu Village People"

    அனுப்பப்பட்டு பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கிராம சபை வெறிச்சோடி காணப்பட்டது.
    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 55 பஞ்சாயத்துக்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஒன்றியத்தில் உள்ள அனுப்பப்பட்டு பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கிராம சபை வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு, சாலை சீரமைப்பு, சமுதாயகூடம் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    இதுபற்றி கிராம மக்களிடம் கேட்ட போது எங்கள் ஊராட்சிக்குட்பட்ட வேலப்பாக்கம் அரசு புறம்போக்கு இடத்தில் எங்கள் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு மனை வழங்க வேண்டும், வேறு பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்க கூடாது.

    உத்தன்டிகன்டிகை-அனுப்பம்பட்டு இடையேயான ஒன்றிய சாலை 10 ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சுகாதார நிலையம், சமுதாயக் கூடம் அமைக்க வலுயுறுத்தியும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×