search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனவரி 3-ந்தேதி முதல் மக்களை சந்திப்போம்: முக ஸ்டாலின்
    X

    ஜனவரி 3-ந்தேதி முதல் மக்களை சந்திப்போம்: முக ஸ்டாலின்

    கிராம சபை கூட்டங்கள் மூலம் ஜனவரி 3-ந்தேதி முதல் மக்களை சந்திப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. இன்று தொடங்கியது.

    40 தொகுதிகளில் உள்ள ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 3-ந்தேதி தொடங்கி இந்த கூட்டங்கள் நடைபெறும்.

    இந்த கூட்டங்கள் மூலம் நாங்கள் மக்களை சந்தித்து பேச உள்ளோம். தி.மு.க. மட்டுமின்றி தி.மு.க. கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்கும்.

    கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றார். மக்களோடு மக்களாக அமர்ந்து பேசினார்.

    மேலும் அந்தந்த பகுதி பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால்தான் தி.மு.க. அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    கிராம சபை கூட்டங்கள் தந்த வெற்றி காரணமாக தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கும் அதே பாணி பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளார். #DMK #MKStalin
    Next Story
    ×