search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்
    X

    கடலூரில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்

    இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் நாளை கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். அதன்படி, கமல்ஹாசன் இன்று மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, வை‌ஷ்ணவா கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை (26-ந் தேதி) கடலூர் மாவட்டம் குணமங்கலம் மற்றும் அதிசயநத்தத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதையடுத்து தேவனாம்பட்டினம், மந்தாரகுப்பம் மற்றும் விருத்தாசலத்தில் மக்களை கமல்ஹாசன் சந்திக்கிறார்.

    27-ந் தேதி கடலூர் அண்ணா நகரில் நடைபெறும் சான்றோன் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார். இதையடுத்து அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட, பகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். தொடர்ந்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் 6-வது மாநில மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam
    Next Story
    ×