search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gambling with money"

    • மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மைலம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (34), சரவணன் (31), ஒலகடத்தை சேர்ந்த பூபதி (28), பாலன் (32), கண்ணடிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (34) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

    • கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள முள் புதர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொடுமுடி, சாலைப்புதூரை சேர்ந்த மகேஷ்வரன் (33), பெரியசாமி (37), நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (49), தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்த நவமணி (53), இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் (44) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.1,200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பர்கூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பர்கூர் அருகே உள்ள துருசனம் பாளையத்தில் கெஞ்சேகவுடர் என்பவரது வீட்டின் முன் தெருவிளக்கின் கீழ் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முருகன் (27), மாதேவன் (37), சிவலிங்கம் (28), தேவராஜ் (30), பரமேஸ் (30), நாகராஜ் (35), தேவராஜ் (28) ஆகிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.4,900 ஆகியவற்றையும் பர்கூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சூரம்பட்டி போலீசார் சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு, பாரதிபுரம், மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த கார்த்திக் (34), சூரம்பட்டி வலசை சேர்ந்த தங்கராஜ் (50), அதேபகுதியை சேர்ந்த குமார் (38), மூர்த்தி என்ற வெங்கடாச்சலம் (42), வீரப்பன் (52) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.450 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் காரிய காளியம்மன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் சத்தியமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

    இதில் செண்பகபுதூரை சேர்ந்த முத்துசாமி(73) என்பவரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து முத்துசாமியை கைது செய்து தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற 7 மோட்டார் சைக்கிள்கள் ரூ.9 ஆயிரம் ரொக்கம், சீட்டுக்கட்டு க்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
    • அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி ஆதிபரா சக்தி கோவில் அருகே செயல்படாமல் உள்ள தனியார் நூல்மில் குடோனில் சூதாட்டம் நடைபெறுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவயிடம் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த இம்தியாஸ், தனசேகர், அமீர், ஜான் தேவராஜ், கண்ணன், கோகுல், ராஜேஷ்குமார், சசிகுமார் ஆகிய 8 பேர் என்பதும், இவர்களை சூதாட மில் காவலாளி பிரகாஷ் அனுமதித்ததும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரம், 10 செல்போன்கள், 4 மோட்டார்சைக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • புதுவை வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஒரு கும்பல் அதிகளவில் பணம் வைத்து சூதாடுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    காசு வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.34 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுவை வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஒரு கும்பல் அதிகளவில் பணம் வைத்து சூதாடுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் வைத்திகுப்பம், குருசுக்குப்பம், சோலைநகர், அங்காளம்மன் நகர் மற்றும் நடுகுப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்ற பிரகாஷ் (வயது38),ராஜா(40), மகேஷ்(61), செல்லப்பன்(46), சதீஷ்(24), வல்லத்தான்(31), செழியன்(30), ஆனந்த்(35), சங்கர்(40) மற்றொரு வல்லத்தான்(32) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் சூதாட்ட பணம் ரூ.34 ஆயிரத்து 180 மற்றும் 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • திருக்கனூர் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் உள்ள கர்மகாரிய கொட்டகையில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது32). சரண்ராஜ்(28), அஜித்குமார் என்ற அஜித்(26), பிரவீன்ராஜ்(28) மற்றும் தரணிகுமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
    • அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (37), அப்புசாமி (30), வெங்கடேஷ் (31), ஆனந்த ஜோதி (37), கமலக்கண்ணன்(42), முரளிசங்கர் (32) என்பது தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    • பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    மரப்பாலம், பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியது.

    விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி (54), சாகுல் ஹமீது (54), ஆனந்தகுமார் (62), மற்ெறாரு சாகுல் ஹமீது (45), பாபு (59), மாரியப்பன் (42), மைதீன் (44), முஸ்தபா (45) ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டும், ரூ. 4,200 பணமும் பறிமுதல் செய்தனர்.

    • பெருமாள் மலைப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1050 பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி அருகே உள்ள பெருமாள் மலைப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பெருமாள் மலை பஸ் நிறுத்தம்  அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1050 பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர்கள் பெருமாள் மலைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (29), கிருஷ்ணமூர்த்தி (40), சுதாகர் (28), விக்னேஸ்வரன் (29) என தெரிய வந்தது. அவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×