search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 people were arrested for"

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.
    • பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கொடி வேரி அணை பகுதி அருகே ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரன் (43), சேதராமன் (30), சுரேந்திரன்(29), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரேம் ராஜ் (40) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோல் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அளுக்குளி தேவேந்திர நகர் பகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த மதகன்குமார்(27) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

    இதேபோல் காசிபாளையம் இந்திரா நகர் பகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த பரணி (25) என்பவர் மது அருந்தி பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படு த்தும் வகையில் செய ல்பட்டதால் அவரையும் போலீசார் கைது செய்தனர். 

    • சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி திரு.வி.க. தெருவில் உள்ள பெருமாள் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக சிவகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

    இதில் அவர்கள் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த கார்த்தி (38), பாரதி தெருவை சேர்ந்த வாசுதேவன் (49), விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோ (49), லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சுகராஜ் (37), காந்திஜி தெருவை சேர்ந்த அருணாச்சலம் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டு, ரூ.2,480 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • சூரம்பட்டி போலீசார் சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு, பாரதிபுரம், மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த கார்த்திக் (34), சூரம்பட்டி வலசை சேர்ந்த தங்கராஜ் (50), அதேபகுதியை சேர்ந்த குமார் (38), மூர்த்தி என்ற வெங்கடாச்சலம் (42), வீரப்பன் (52) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.450 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் காரிய காளியம்மன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் சத்தியமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

    இதில் செண்பகபுதூரை சேர்ந்த முத்துசாமி(73) என்பவரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து முத்துசாமியை கைது செய்து தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற 7 மோட்டார் சைக்கிள்கள் ரூ.9 ஆயிரம் ரொக்கம், சீட்டுக்கட்டு க்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    • ஈங்கூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்பதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோடு ஈங்கூர் அருகே உள்ள எல்லமேட்டில் சிமெண்ட் கற்கல் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்ப தாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மேலாளராக பணி புரியும் பெருந்துறை அருகே உள்ள கொம்பக்கோவிலை சேர்ந்த பிரகாஷ் (40), எல்லை மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (34), கோவை வ. உ .சி, நகரைச் சேர்ந்த ராஜா (36), கோவை அஞ்சும் நகரைச் சேர்ந்த செல்வம் (54), கொம்ம கோவில் பகுதிைய சேர்ந்த முருகன் (48), கொம்ம கோவில் பகுதியை சேர்ந்த ரவி (38) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 3 சேவல் கள் மற்றும் ரூ.8,700-ஜ போலீசார் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
    • அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (37), அப்புசாமி (30), வெங்கடேஷ் (31), ஆனந்த ஜோதி (37), கமலக்கண்ணன்(42), முரளிசங்கர் (32) என்பது தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    ×