search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    • சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி திரு.வி.க. தெருவில் உள்ள பெருமாள் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக சிவகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.

    இதில் அவர்கள் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த கார்த்தி (38), பாரதி தெருவை சேர்ந்த வாசுதேவன் (49), விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோ (49), லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சுகராஜ் (37), காந்திஜி தெருவை சேர்ந்த அருணாச்சலம் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டு, ரூ.2,480 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×