search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவல் சூதாட்டம் நடத்திய 6 பேர் கைது
    X

    சேவல் சூதாட்டம் நடத்திய 6 பேர் கைது

    • ஈங்கூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்பதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோடு ஈங்கூர் அருகே உள்ள எல்லமேட்டில் சிமெண்ட் கற்கல் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்ப தாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மேலாளராக பணி புரியும் பெருந்துறை அருகே உள்ள கொம்பக்கோவிலை சேர்ந்த பிரகாஷ் (40), எல்லை மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (34), கோவை வ. உ .சி, நகரைச் சேர்ந்த ராஜா (36), கோவை அஞ்சும் நகரைச் சேர்ந்த செல்வம் (54), கொம்ம கோவில் பகுதிைய சேர்ந்த முருகன் (48), கொம்ம கோவில் பகுதியை சேர்ந்த ரவி (38) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 3 சேவல் கள் மற்றும் ரூ.8,700-ஜ போலீசார் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×