என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
காசு வைத்து சூதாடிய 5 பேர் கைது
Byமாலை மலர்8 Oct 2022 8:36 AM GMT
- திருக்கனூர் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் உள்ள கர்மகாரிய கொட்டகையில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது32). சரண்ராஜ்(28), அஜித்குமார் என்ற அஜித்(26), பிரவீன்ராஜ்(28) மற்றும் தரணிகுமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X