search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காசு வைத்து சூதாடிய 5 பேர் கைது
    X

    கோப்பு படம்

    காசு வைத்து சூதாடிய 5 பேர் கைது

    • திருக்கனூர் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் உள்ள கர்மகாரிய கொட்டகையில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது32). சரண்ராஜ்(28), அஜித்குமார் என்ற அஜித்(26), பிரவீன்ராஜ்(28) மற்றும் தரணிகுமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×