என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fry Recipes"
- மட்டன் வைத்து தான் கோலா உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.
- இன்று வாழைக்காய் வைத்து கோலா உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 3
வெங்காயம் - 2
பொட்டுக்கடலை - 1 கையளவு
தேங்காய் - 1/4 மூடி துருவியது
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - சிறிய துண்டு
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1
ஏலக்காய் -3
கசகசா - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை- கையளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயின் தோல் நீக்கி விட்டு அதனை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சி ஜாரில் சோம்பு, பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கசகசா, வெங்காயம், கொத்தமல்லித்தழை, பெருங்காயம், மஞ்சள் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே மிக்ஸி ஜாரில் துருவிய வாழைக்காயை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்து அதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ஒரே மாதிரியான அளவிலான உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும். உருண்டை பிடிச்ச முடியவில்லை என்றால் சிறிது கடலை மாவு சேர்த்துகொள்ளலாம்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அடுப்பின் தீயினை மிதமாக வைத்து ஒவ்வொரு 4 முதல் 5 உருண்டைகளை போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுவென வாழைக்காய் கோலா உருண்டை ரெடி!
இதற்கு டொமேட்டோ கெட்ச் அப் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சூடான டீ, காபியுடன் சாப்பிட இந்த வடை சூப்பராக இருக்கும்.
- இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் - ஒரு கப்
கடலை பருப்பு - அரை கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின் மிக்சியில் போட்டு அதனுடன் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் துருவிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
இன்னொரு கிண்ணத்தில் தண்ணீரை வடிகட்டிய காலிஃபிளவர், அரைத்த கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
சூப்பரான காலிஃபிளவர் பருப்பு வடை ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சீஸ் பூரியை வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் செய்து கொடுத்து அசத்தலாம்
தேவையான பொருட்கள்:
பூரி மாவிற்கு...
கோதுமை மாவு - 1 கப்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
துருவிய சீஸ் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் மசாலா பூரி தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும்.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
சோள மாவு - தேவையான அளவு
முட்டை - 1
எண்ணெய் - பொரிக்க
பிரெட் தூள் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுளாக(cube shape) வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய உருளைக்கிழங்கை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
5 நிமிடம் கழிந்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
ஒரு பிளாஸ்டிக் கவரில் சோள மாவை போட்டு அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடித்து போட்டு நன்றாக குலுக்கவும். இப்போது சோளமாவு முழுவதும் உருளைக்கிழங்கில் ஒட்டியிருக்கும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.
இப்போது உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான மொறு மொறு ஆலு பாப்கார்ன் ரெடி.
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சிக்கனை பல்வேறு ருசியான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 50 கிராம்
முட்டை - 2
வெங்காயத்தாள் - 20 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 100 கிராம்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பிரெட் தூள் - 20 கிராம் + தேவையான அளவு
சோள மாவு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
பிளாஸ்டிக் கவரை கேன் வடிவில் (Piping bag) செய்து கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும்.
மிக்சிஜாரில் சிக்கனை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், வேக வைத்த உருளைக்கிழங்கு, பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், பிரெட் தூள் 20 கிராம் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த சிக்கன் விழுதை (Piping bag) கேன் கவரில் போடவும்.
ஒரு தட்டில் பட்டர் பேப்பரை விரித்து அதன் மேல் அரைத்த விழுதை டோநட்ஸ் வடிவில் செய்யவும். செய்ததை பிரிட்ஜில் 2 மணிநேரம் வைக்கவும். பிரிட்ஜில் வைத்த உடன் அவை சற்று கெட்டியாகி இருக்கும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து டோநட்ஸை எடுத்து சோள மாவில் நன்றாக பிரட்டி பின் முட்டையில் முக்கி மீண்டும் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு அனைத்தையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் டோநட்ஸ் ரெடி.
- இந்த ஸ்நாக்ஸ் செய்ய 20 நிமிடங்களே போதுமானது.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்
சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா -தலா அரை டீஸ்பூன்
முட்டை - 1 (பாதி)
பிரெட் - 2 ஸ்லைஸ்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 3 பெரியது
சோளா மாவு - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சி ஜாரில் சிக்கனை போட்டு அதனுடன், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, உப்பு, தனி மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா, கொரகொரப்பாக பொடித்த தனியா, பாதி முட்டை, பிரெட் துண்டுகள், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த மசாலா திக்கான பதத்தில் இருக்கும். கட்டியாக இருக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு 1 1/2 இஞ்ச் அளவில் தடிமனாக வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்(படத்தில் உள்ளபடி). வெட்டிய உருளைக்கிழங்கின் நடுவில் பாதி அளவு வெட்டவும். இரண்டாக வெட்டி விடக்கூடாது. பாதிஅளவு மட்டுமே வெட்ட வேண்டும்.
உருளைக்கிழங்கின் மேல் சோளா மாவை போட்டு நன்றாக பிரட்டி விடவும்.
இப்போது அரைத்த மசாலவை சிறிது எடுத்து உருளைக்கிழங்கில் நடுவில் வைக்கவும். ஒரங்களில் வெளியில் வரக்கூடாது. இவ்வாறு அனைத்து உருளைக்கிழங்கிலும் வைக்கவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த உருளைக்கிழங்கை போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் ஸ்டப்ஃடு உருளைக்கிழங்கு ரெடி.
- சிக்கனில் விதவிதமான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
- இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
எலும்பில்லாத சிக்கன் - 1 கப்
நெய் - 1 டீஸ்பூன்
முட்டை - 2
சில்லி பிளேக்ஸ் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஆரிகானோ - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கபாப் ஸ்டிக் - 10
உப்பு - சுவைக்கு
பிரெட் துள் - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
சிக்கனை வேக வைத்து உதிர்த்து கொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வேக வைத்து உரித்த சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ஆரிகானோ, தனி மிளகாய் தூள், சாட் மசாலா, சில்லி பிளேக்ஸ், நெய் சேர்த்து நன்றாக பிசைத்த பின்னர் கடைசியாக 2 டீஸ்பூன் பிரெட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.
2 கபாப் ஸ்டிக்கை எடுத்து கொண்டு அதில் சிக்கன் மசாலாவை ஒரு உருண்டை அளவு எடுத்து கபாப் ஸ்டிக்கில் வைத்து தட்டையாக தட்டவும். இவ்வாறு அனைத்து மசாலாவையும் செய்யவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த ஸ்டிக்கை முட்டை கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் ஸ்டிக் ரெடி.
- சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 2
ப.மிளகாய் - 2
உப்பு - சுவைக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
மலாய் அல்லது கிரீம் - 2 டீஸ்பூன்
பிரெட் தூள் - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி சிறிது உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
குக்கரில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 1 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
விசில் போனவுடன் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து விட்டு அதில் தண்ணீர் வற்றும் வரை சிக்கனை அடுப்பில் வைத்து வேக விடவும்.
தண்ணீர் வற்றியதும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி போட்டு மசிக்கவும்.
அடுத்து அதில் மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய், மலாய் அல்லது கிரீம், உப்பு, கொத்தமல்லி,ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். இது சற்று தளர்வாக தான் இருக்கும்.
ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி நன்றாக பரப்பி விடவும்.
அப்போது சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து பிரெட் தூளில் போட்டு பிரட்டி வேண்டிய வடிவில் பிடிக்கவும். சிக்கன் மசாலா தளர்வாக இருக்கும் என்பதால் பிரெட் தூளில் பிரட்டினால் மட்டுமே சரியான வடிவில் வரும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
அடுத்து மற்றொரு முறை பிடித்து வைத்த கட்லெட்டை முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதை மிதமான தீயில் வைத்து தான் செய்ய வேண்டும்.
இப்போது சூப்பரான சிக்கன் மலாய் கட்லெட் ரெடி.
- பார்க்க கஷ்டமாக தெரிந்தாலும் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுபலம்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
சீரகம் - அரை டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 4
துருவிய கேரட் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் -2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
ப.மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, நெய், உப்பு, சீரகம் போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் துருவிய கேரட், குடைமிளகாய், கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிசைத்து வைத்த மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
தேய்த்த மாவில் நடுவில் மசாலாவை வைத்து மாவு முழுவதும் பரப்பி விடவும். அதன் மேல் மற்றொரு சப்பாதியால் மூடி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும்.
இப்போது சப்பாத்தியின் 4 ஓரங்களையும் வெட்டி (சதுர வடிவில்) விடவும். அடுத்து கத்தியால் கைவிரல் அகலத்தில் துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய ஒரு துண்டின் நடுவில் நீளமான குச்சியால் நடுவில் அழுத்தினால் இருபக்க ஒரங்களிலும் விரிந்து வரும்.
இப்போது அதை இருபக்க முனைகளையும் பிடித்து வெவ்வோறு கோணத்தில் முறுக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்ததை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு டிவிஸ்டர் சமோசா ரெடி.
- பிரெட் வைத்து சூப்பரான கச்சோரி செய்யலாம்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
உருளைக்கிழங்கு - 1
பிரெட் துண்டுகள் - 10
கேரட் - 1
குடைமிளகாய் - 1
வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப்
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
மைதா மாவு - 1 டீஸ்பூன்
சோள மாவு - 3 டீஸ்பூன்
முந்திரி - 10
பிரெட் தூள் - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையானஅளவு
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கேரட், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.
சோளமாவில் சில்லி பிளேக்ஸ் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து முந்திரியை உடைத்து போட்டு வறுபட்டதும் சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு, ஆம்சூர் பவுடர், தனியா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கி குளிர வைக்கவும்.
பிரெட் துண்டை பூரி கட்டையால் மெலிதாக தேய்க்கவும்.
தேய்ந்த பிரெட்டை வட்ட வடிவ கட்டரால் வெட்டவும். இவ்வாறு அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ளவும்.
ஒரு வட்ட வடிவில் வெட்டிய பிரெட் துண்டில் மசாலாவை நடுவில் வைக்கவும். மற்றொரு பிரெட்டி துண்டில் ஓரங்களில் மைதா பசையை தடவி மசாலா வைத்த பிரெட்டில் மேல் வைத்து மூடி விடவும். ஓரங்களில் நன்றாக அழுத்தி விடவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.
செய்து வைத்தவற்றை சோளமாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கச்சோரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு பிரெட் கச்சோரி ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
- விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
பிரெட் - 6 துண்டுகள்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பன்னீர் - 100 கிராம்
துருவிய சீஸ் - விருப்பத்ற்கேற்ப
ப.மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சில்லி ப்ளோக்ஸ் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
ஆரிகானோ - 1 தேக்கரண்டி
சோள மாவு - கால் கப்
பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
சோள மாவில் 1 தேக்கரண்டி சில்லி ப்ளோக்ஸ், சிறிதளவு உப்பு, ஆரிகானோ, சிறிதளவு தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மஞ்சள் தூள், சில்லி ப்ளோக்ஸ் 1 தேக்கரண்டி, தனியா தூள், மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து ஒன்றாக கலந்து வரும் போது துருவிய சீஸை சேர்த்து வதக்கவும்.
மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
பிரெட்டில் மேல் இந்த மசாலாவை தடவவும்.
பின்னர் மசாலா தடவிய பிரெட்டை நீளமான துண்டுகளாக வெட்டவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வெட்டிய பிரெட் துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு பிரெட் பிங்கர்ஸ் ரெடி.
- டீ கடையில் வெங்காய போண்டா சாப்பிட்டு இருப்பீங்க.
- இன்று வீட்டிலேயே இந்த போண்டா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மைதா மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்