search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fry Recipes"

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • சொஜ்ஜி அப்பம் என்பது பூரி போன்ற இனிப்பு உணவு.

    தேவையான பொருட்கள்

    ரவை - 1 கப்

    மைதா - 1 கப்

    துருவிய தேங்காய் - 1 கப்

    சர்க்கரை - ஒன்றரை கப்

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    உப்பு - சிட்டிகை

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வெறும் வாணலியில் ரவையை லேசான தீயில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள்.

    இப்போது வறுத்த ரவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடுங்கள்.

    ரவை வெந்ததும் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். ரவை ஆறியதும் எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளை உருட்டிக்கொள்ளுங்கள்.

    இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவைச் சிறு உருண்டைகளாகத் திரட்டி அதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மூடி மீண்டும் பூரியாகத் திரட்டுங்கள்.

    வாணலியில் எண்ணெய் சூடானதும் திரட்டிவைத்துள்ள சொஜ்ஜி அப்பத்தை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள்.

    இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
    • கோதுமை மாவில் வித்தியாசமான ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்

    வெல்லம் - 1/2 கப்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    கனிந்த வாழைப்பழம் - 2

    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

    சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்

    உப்பு - 1 சிட்டிகை

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை :

    வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு, உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் பொடி, சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!..

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டிகளில் ஒன்று 'ஆனியன் ரிங்ஸ்'.
    • விருந்தினர்களுக்கு சில நிமிடங்களில் செய்து கொடுத்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 5

    மைதா மாவு - 200 கிராம்

    சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி

    ஆரிகனோ (உலர்ந்த கற்பூரவள்ளி) - 2 தேக்கரண்டி

    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

    பூண்டு - 8 பல்

    தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    ரொட்டித் தூள் - 100 கிராம்

    'டிப்' தயாரிக்க தேவையான பொருட்கள்:

    பிரியாணி இலை - 1

    வெண்ணெய் - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 1 ஆரிகனோ (உலர்ந்த கற்பூரவள்ளி) - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

    மயோன்னஸ் - 4 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை

    படத்தில் காட்டியுள்ளதுபோல் வெங்காயத்தை வட்டமாக வெட்டி, தனித்தனி வளையங்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

    பின்பு அதில் சிறிது மைதா மாவைத் தூவி கிளறி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, சில்லி பிளேக்ஸ், ஆரிகனோ, மிளகுத்தூள், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.

    பின்பு வெங்காயத் துண்டுகளை ஒவ்வொன்றாக அந்த மாவில் தோய்த்து, ரொட்டித்தூளில் நன்றாக புரட்டி எடுத்து, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    'டிப்' செய்முறை

    வாணலியில் வெண்ணெய்யைப் போட்டு உருகியதும், பிரியாணி இலை, சில்லி பிளேக்ஸ், பொடிதாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

    பின்னர் அந்தக் கலவையில் மயோன்னஸ், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

    இப்பொழுது 'ஆனியன் மயோன்னஸ் டிப்' தயார்.

    மொறுமொறு ஆனியன் ரிங்சுடன், ஆனியன் மயோன்னஸ் டிப் சேர்த்து பரிமாறலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    வெள்ளைக் காராமணி - 1 கப்

    தினை அல்லது வரகு அல்லது அரிசி - கால் கப்

    வெங்காயம் - 1

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    காய்ந்த மிளகாய் - 4

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெள்ளைக் காராமணியுடன், தினை அல்லது வரகு அல்லது அரிசியை நன்றாக கழுவி மூன்று முதல் 4 மணிநேரம் ஊறவையுங்கள்.

    * நன்றாக ஊறியதும் தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில்வைத்து மாவை மெலிதான வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுங்கள்.

    * சூப்பரான காராமணி வடை ரெடி.

    புரதச் சத்து நிறைந்த இதைக் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வாயுத் தொல்லை கிடையாது. வெள்ளைக் காராமணியில் சுண்டலும் செய்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உளுந்து வைத்து பல்வேறு வெரைட்டி வடைகளை செய்யலாம்.
    • இன்று அரிசி மாவில் வடை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி மாவு - 200 கிராம்,

    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

    பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    கொத்தமல்லி, கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    2 கப் நீரைக் கொதிக்கவிட்டு… அதில் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

    ஒரு நிமிடத்துக்குப் பிறகு கொத்தமல்லி, அரிசி மாவைத் தூவி கட்டியின்றி கிளறி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவும்.

    இந்த மாவில் சிறிதளவு எடுத்து வடைகளாக தட்டி வைக்கவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்த வடைகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

    விரைவில் பொரிந்துவிடும் இந்த வடை.

    இப்போது சூப்பரான அரிசி வடை ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    காய்கறி மசாலா செய்ய

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    பட்டாணி - 1/2 கப்

    உருளைக்கிழங்கு - 4

    பன்னீர் - 100 கிராம்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

    சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

    உப்பு - 1 தேக்கரண்டி

    ஆம்சூர் தூள் - 1/2 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை நறுக்கியது

    எண்ணெய் - தேவையான அளவு

    சோள மாவு கலவை செய்ய

    சோள மாவு - 1 மேசைக்கரண்டி

    மைதா - 2 மேசைக்கரண்டி

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

    தண்ணீர்

    கார்ன் பிளேக்ஸ்

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.

    * காய்கறிகள் வெந்த பிறகு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    * பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள்,கரம் மசாலா தூள், உப்பு, ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    * பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விட்டு, மசித்து கொள்ளவும்.

    * அடுத்து அடுப்பை அணைத்து விட்டு துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.

    * ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மசாலாவை பரப்பி ஆறவிட்டு, 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.

    * கார்ன் பிளேக்ஸை பொடியாக்கி கொள்ளவும்.

    * சோள மாவு கலவை செய்ய, சோள மாவு, மைதா, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கட்டியின்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்..

    * பிரிட்ஜில் வைத்த மசாலாவை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டவும்.

    * பின்பு அதை சோள மாவு கலவையில் முக்கி கார்ன் பிளக்ஸில் பிரட்டி எடுத்து 5 நிமிடம் பிரீஸரில் வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த நக்கெட்ஸை சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    * இப்போது சூப்பரான வெஜிடபிள் நக்கெட்ஸ் ரெடி.

    * கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்

    பிரெட் - 1 துண்டு

    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

    வால்நட் - 1/2 கப்

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    இட்டாலியன் சீசனிங் - 1 1/2 தேக்கரண்டி

    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு

    சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

    சோளமாவு - 1/4 கப்

    மைதா - 1/4 கப்

    தண்ணீர்

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை:

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * பிரெட்டை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

    * மிக்ஸியில் நறுக்கிய பிரெட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    * ஒரு கிண்ணத்தில் மைதா, சோளமாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * ஊற வைத்த சிக்கனை மாவில் தோய்த்து பிறகு வால்நட் பிரெட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.

    * கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான சிக்கன் டென்டெர்ஸ் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸை சுத்தமான முறையில் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா - 1 கப்

    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - 1 டீஸ்பூன்

    வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    * ஒரு பாத்திரத்தில் மைதா, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

    * அதில் தண்ணீரை விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்து குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

    * ஒரு எலுமிச்சம்பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இட்டு கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும். எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.

    * ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்திருக்கும் துக்கடாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * இப்போது சூப்பரான கார துக்கடா ரெடி

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தயிர் வடை கேள்விப்பட்டிருப்பீங்க. அது என்ன தயிர் பக்கோடா?
    • வாங்க இன்னைக்கு இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தயிர் - 400 கிராம்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா - அரை டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 3 கப்

    பக்கோடா செய்ய :

    கடலை மாவு - 1 கப்

    சீரகம் - 4 டீஸ்பூன்

    மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் , நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி கடலை மாவுக் கலவையை பக்கோடா போல் உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கலந்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

    இவை நன்கு வதக்கியபின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அதில் ஊற்றவும்.

    ஒரு முறை கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    அடுப்பில் இருந்து இறக்கி அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    இப்போது சூப்பரான தயிர் பக்கோடா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பிஷ் ஃபிங்கர்ஸ் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    வஞ்சரம் (அ) வவ்வால் மீன் - அரை கிலோ

    எலுமிச்சை பழம் - இரண்டு (சாறு எடுக்கவும்)

    ரொட்டித்தூள் - 1௦௦ கிராம்

    காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரணடி

    முட்டை - மூன்று

    வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவைகேற்ப

    செய்முறை

    முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.

    பின்னர் மீனை விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

    மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

    எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் போடவும்.

    மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி.

    இந்த ஸ்நாக்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த ஸ்நாக்ஸ் 10, 15 நாட்கள் வரை கெட்டு போகாது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 2 கப்,
    அரிசி மாவு - ஒரு கப்,
    சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    கருப்பு எள் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்,
    புளித் தண்ணீர் - கால் கப்,
    கொப்பரைத் துருவல் - அரை கப்,
    வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்,
    கசகசா - ஒரு டீஸ்பூன்,
    சர்க்கரை, உப்பு - சிறிதளவு,
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    செய்முறை:

    கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும்.

    கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து… உப்பு, சர்க்கரை, கருப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும்.

    அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும்.

    நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும்.

    இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு…. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பாக்கர் வாடி ரெடி.

    இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு 10, 15 நாட்கள் பயன்படுத்தலாம்.
    காலையில் செய்ய சாதம் மீந்து விட்டால் மாலையில் அந்த மீந்த சாதத்தை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பழைய சாதம் - 1 கப்
    முட்டை - 2
    கடலை மாவு - 1/2 கப்
    வெங்காயம் - 1
    உப்பு - தேவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 1
    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை :


    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    முதலில் பழைய சாதத்துடன், இரண்டு முட்டை சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.

    பின் இந்த கலவையுடன் கடலை மாவு, வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

    அவற்றை நன்றாக கலந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்த கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்

    நன்றாக சிவந்து வந்தபின் பொரித்த பக்கோடாவை எடுத்து பரிமாறினால் சுவையான பக்கோடா தயார் ஆகிவிடும்.
    ×