search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA World cup 2018"

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. #WorldCup2018 #ENGCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்து வருகிறது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
    அரையிறுதியில் பெற்ற வெற்றியை இங்கிலாந்து வீரர் பால் போக்பா குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். #WorldCup2018 #thaicaverescue
    தாய்லாந்து நாட்டில் கால்பந்து விளையாடும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்கள், தங்களது பயிற்சியாளருடன் குகையில் சிக்கிக் கொண்டனர். 18 நாட்கள் குகையில் தவித்த அவர்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். சிறுவர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த செய்தி உலகக்கோப்பையில் விளையாடும் பிரான்ஸ் நட்சத்திர வீரரான பால் போக்பாவையும் எட்டியது.

    நேற்று பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    போக்பா தனது டுவிட்டர் பக்கத்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் படத்தை வெளியிட்டு ‘‘இன்றைய நாளில் ஹீரோக்கள் ஆன சிறுவர்களுக்கு இந்த வெற்றி செல்கிறது. வெல்டன் பாய்ஸ், நீங்கள் எப்போதும் வலிமையானவர்கள்’’ ட்வீட் செய்துள்ளார்.
    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு ஜெர்சி வழங்க அட்ரஸ் தருமாறு உதவி கேட்டுள்ளார் இங்கிலாந்து வீரர் வால்கர். #WorldCup2018
    தாய்லாந்து நாட்டில் கால்பந்து விளையாடும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்கள், தங்களது பயிற்சியாளருடன் குகையில் சிக்கிக் கொண்டனர். 18 நாட்கள் குகையில் தவித்த அவர்களை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

    சிறுவர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த செய்தி உலகக்கோப்பையில் விளையாடும் இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ள கைல் வால்கரையும் எட்டியுள்ளது.

    அவர் தனது டுவிட்டரில், அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நான் அவர்களுக்கு எனது ஜெர்சியை அனுப்ப விரும்புகிறேன். அங்கே, யாராவது எனக்கு அவர்களுடைய முகவரியை அனுப்பு உதவி செய்ய முடியுமா? என்று பதிவிட்டுள்ளார்.



    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.

    ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRABEL #BELFRA #FrancevBelgium
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகிக்கிறது. #WorldCup2018 #FRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.



    ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRABEL #BELFRA #FrancevBelgium
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்னும் மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் சுவீடனை 2-0 என வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் குரோசியாவை எதிர்கொள்கிறது. குரோசியாவை வீழ்த்தினால் இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அல்லது பிரான்ஸ் அணியை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு நாங்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளோம் என்று இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹாரி கேன் கூறுகையில் ‘‘அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு, நாங்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம். இது அனேகமாக மூழ்காது. இன்னும் பெரிய போட்டி காத்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்’’ என்றார்.
    காலிறுதியில் தோல்வியடைந்தது எனது கால்பந்து வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என நெய்மர் தனது வேதனை வெளிப்படுத்தியுள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஒன்றில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நெய்மர், கவுட்டினோ, மார்சிலோ, வில்லியன் போன்ற நட்சத்திர வீரர்களை கொண்ட பிரேசில் 1-2 என பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    பிரேசில் வீரர்கள் சோகம் நிறைந்த முகத்துடன் சொந்த நாடு திரும்பினார்கள். இந்நிலையில் பெல்ஜியத்திடம் 1-2 எனத் தோல்வியடைந்தது எனது கால்பந்து வாழ்க்கையில் மிகவம் சோகமான தருணம் என்று நெய்மர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.



    பெல்ஜியத்திற்கு எதிரான தோல்வி குறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எனது கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம் என்பதை என்னால் கூற முடியும். இதன் வழி மிகவும் அதிகமானது. ஏனென்றால், உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைக்க வாய்ப்பு இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு அமையவில்லை’’ என்றார்.
    காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரஷியா அணியின் மூத்த வீரரான இக்னாஷேவிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து சமநிலை பெற்றிருந்ததால், பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரஷியா 3-4 எனத் தோல்வியடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.



    இந்த தோல்வியில் இந்த அணியின் 38 வயதான டிபென்ஸ் வீரர் செர்கெய் இக்னாஷேவிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இவர் ரஷியா அணிக்காக 127 போட்டிகளில் விளையாடி 9 கோல்கள் அடித்துள்ளார்.
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #RUSCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழ்ங்கப்பட்டது.

    இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115வது நிமிடத்தில் ரஷியா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

    முதலில் ரஷியாவின் வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணி முதல் வாய்ப்பில்   கோல் போட்டது.

    இர்ண்டாவது வாய்ப்பை ரஷிய கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷியா கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
    இதனால் மீண்டும் 1 - 1 என சமனானது.

    மூன்றாவது வாய்ப்பை ரஷியா வீணாக்கியது. குரோஷியா மீண்டும் கோலாக்கியது. இதனால் 1-2 என முன்னிலை பெற்றது.

    நான்காவது வாய்ப்பை ரஷியா கோலாக்கியது. குரோஷியாவும் கோல் அடித்ததால் 2-3 என முன்னிலை பெற்றது.

    இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை ரஷியா கோல் போட்டதால் 3-3 என சமனானது. குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்து 4-3 என  வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #RUSCRO #CRORUS #RussiavCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகிக்கிறது. #WorldCup2018 #RUSCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமாண்டிக் ஒரு கோல் அடித்தார். 

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன. #WorldCup2018 #FifaWorldCup2018 #RUSCRO #CRORUS #RussiavCroatia
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அங்கீகாரம் பெறாத நிறுவனத்தின் உபகரணங்களை விளம்பரம் படுத்தியதால் சுவீடன் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்று சுவீடன். இந்த அணி அங்கீகாரம் பெறாத நிறுவனம் தயாரிக்கும் விளையாட்டு உபகரணங்களை விளம்பரம் படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தது.

    ஆனால் சுவீடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. அப்போது இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இதனால் சுவீடன் மீடியா மற்றும் மார்கெட்டிங் விதிமுறையை மீறியதாக சுவீடன் கால்பந்து பெடரேசனுக்கு 71 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளது பிபா.



    இதை சுவீடன் கால்பந்து பெடரேசன் உறுதி செய்துள்ளது. பிபா இதை ஏற்றுக் கொள்ளாத நிலையில், நாங்கள் மாற்று நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #BRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். 
    இதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது. 
    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்றவில்லை. 

    ஆனாலும், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் பின்தங்கியது.

    ஆட்டத்தின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #BRABEL #BELBRA #BrazilvBelgium
    ×