search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paul Pogba"

    • போக்பாவின் இடைநீக்கம் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • சீரி ஏ லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவென்டஸுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று யுவென்டஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், பால் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது.

    அந்தப் போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்படி இருந்தும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் சிக்கினார். இதனால் கால்பந்தில் பங்கேற்பதில் இருந்து அவருக்கு நான்கு ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடும் போக்பா, ஆடுகளத்தில் மீண்டும் விளையாட முடியாமல், கிட்டத்தட்ட 35 வயது வரை ஓரங்கட்டப்படும் ஒரு நிலையை எதிர்கொள்கிறார். போக்பாவின் இடைநீக்கம் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சீரி ஏ லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவென்டஸுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இவர் 2018-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் ஆவார்.

    மான்செஸ்டர் யுனைடெட்டின் பால் போக்பாவை எப்போதுமே பார்சிலோனா வரவேற்க இருக்கிறது என்று லூயிஸ் சுவாரஸ் தெரிவித்துள்ளார். #PaulPogba
    பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் பால் போக்பா. 25 வயதாகும் அட்டக்கிங் மிட்பீல்டரான போக்பா கடந்த 2016-ம் ஆண்டு யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். மிகப்பெரிய தொகைக்கு (105 மில்லியன் யூரோ) போக்பாவை மான்செஸ்டர் யுனைடெட் வாங்கியது.

    ஆனால் அணியின் தலைமை பயிற்சியாளரான ரோஸ் மவுரினோவிற்கும், போக்பாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் இன்னும் முடிந்த பாடில்லை. இதனால் போக்பா மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகி பார்சிலோனா அல்லது ரியல் மாட்ரிட் அணியில் சேரலாம் என்ற வதந்தி பரவிக் கொண்டே வருகிறது.



    இந்நிலையில் பார்சிலோனா அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான லூயிஸ் சுவாரஸ், பால் போக்பாவை எப்போதுமே பார்சிலோன வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
    அரையிறுதியில் பெற்ற வெற்றியை இங்கிலாந்து வீரர் பால் போக்பா குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். #WorldCup2018 #thaicaverescue
    தாய்லாந்து நாட்டில் கால்பந்து விளையாடும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்கள், தங்களது பயிற்சியாளருடன் குகையில் சிக்கிக் கொண்டனர். 18 நாட்கள் குகையில் தவித்த அவர்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். சிறுவர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த செய்தி உலகக்கோப்பையில் விளையாடும் பிரான்ஸ் நட்சத்திர வீரரான பால் போக்பாவையும் எட்டியது.

    நேற்று பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    போக்பா தனது டுவிட்டர் பக்கத்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் படத்தை வெளியிட்டு ‘‘இன்றைய நாளில் ஹீரோக்கள் ஆன சிறுவர்களுக்கு இந்த வெற்றி செல்கிறது. வெல்டன் பாய்ஸ், நீங்கள் எப்போதும் வலிமையானவர்கள்’’ ட்வீட் செய்துள்ளார்.
    பிரான்ஸ் கால்பந்து அணி வீரரான மப்பேயிடம் என்னைவிட அதிக திறமை உள்ளது சக நாட்டு வீரரான பால் போக்பா தெரிவித்துள்ளார். #WorldCup2018 #Mbappe
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜென்டினா மோதின. இதில் 4-3 என பிரான்ஸ் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிக்கு பிரான்ஸ் அணியின் முன்னணி வீரரான கிலியான் மப்பே இரண்டு கோல்கள்தான் முக்கிய காரணம். 19 வயதே ஆன மப்பே 64 மற்றும் 68-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.



    மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு பிரான்ஸ் வீரரான பால் போக்பா சிறந்த வீரராக கருதப்படுகிறார். மிட்பீல்டரில் சிறந்த வீரரான போக்பா, என்னைவிட கிலியான் மப்பேவிற்கு அதிக திறமை உள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து பால் போக்பா கூறுகையில் ‘‘கிலியான் மப்பே மிகவும் வேகமாக ஓடக்கூடியவர். அவரை ஒப்பிட்டு பேசுவது சரியாகாது. என்னைவிட அவருக்கு அதிக திறமை உள்ளது’’ என்றார்.
    ×