search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doping"

    • போக்பாவின் இடைநீக்கம் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • சீரி ஏ லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவென்டஸுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று யுவென்டஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், பால் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது.

    அந்தப் போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்படி இருந்தும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் சிக்கினார். இதனால் கால்பந்தில் பங்கேற்பதில் இருந்து அவருக்கு நான்கு ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடும் போக்பா, ஆடுகளத்தில் மீண்டும் விளையாட முடியாமல், கிட்டத்தட்ட 35 வயது வரை ஓரங்கட்டப்படும் ஒரு நிலையை எதிர்கொள்கிறார். போக்பாவின் இடைநீக்கம் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சீரி ஏ லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவென்டஸுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இவர் 2018-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் ஆவார்.

    • இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது.
    • அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலி தேவி சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் உள்ள ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில், அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (NADA) உத்தரவிட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதற்கு முன் அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம் என்றார் பி.டி.உஷா
    • அனைத்து போட்டிகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் கொண்டு வரவேண்டும்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்ட தடகள நட்சத்திரம் பி.டி.உஷா, இன்று முதல் முறையாக மாநிலங்களவையில் உரையாற்றினார். தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    விளையாட்டுத்துறையில் இந்தியா இன்று ஈடு இணையற்றதாக திகழ்கிறது. மாவட்டங்கள் தோறும் பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி பெறும் மையங்கள் கிடைக்கப்பெறுகின்றன. விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம்.

    ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்கள் தங்களது எதிர்காலத்தை பாழாக்குவது மட்டுமின்றி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களையும் பாழாக்குகின்றனர்.

    அனைத்து விளையாட்டு போட்டிகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் கொண்டு வரவேண்டும். மேலும் காயங்களிலிருந்து வீரர்கள் மீண்டு வர விளையாட்டு மருத்துவம் மற்றும் அறிவியல் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    ஸ்டெராய்டு சோதனையில் சிக்கிய மற்றும் ஊக்கமருந்துக்காக தண்டனை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளை தவறாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெராய்டுகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு எதிராக தகுந்த தடை விதிக்கப்பட வேண்டும். அதேசமயம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (NADA)செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும். தடையின்றி செயல்பட சுதந்திரம் அளிக்க வேண்டும். இவ்வாறு பி.டி.உஷா பேசினார்.

    ×