search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festivel"

    • எவ்வளவு வேண்டுமானாலும் கறி விருந்து சாப்பிடலாம்.
    • மதுபோதையில் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

    தூத்துக்குடி தருவைகுளம் கிழக்குக் கடற்கரைச் சாலை செல்லும் பகுதியில் சக்கம்மாள்புரம் அடுத்து உள்ள துரைச்சாமிபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான மணிகட்டி மாடசாமி கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் கொடை விழா பிரசித்தி பெற்றதாகும். சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடி வழிபட்டு செல்வார்கள்.

    கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நூற்றுக்கணக்கான கிடாக்களை மணிகட்டி மாடசாமிக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விருந்தாக வழங்கப்படும்.

    இந்த விருந்து நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிடுவார்கள். யாரும் எடுத்துச் செல்லக் கூடாது. மதுபோதையில் வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், எவ்வளவு வேண்டுமானாலும் கறி விருந்து சாப்பிடலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த ஆண்டு கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று இரவு மணிகட்டி மாடசாமிக்கு சாம பூஜைக்கு பின் இன்று காலை ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது .

    இதில் கறி விருந்து சாப்பிட மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக வந்து கலந்து கொண்டு மணிகட்டி மாடசாமி வணங்கி சென்றனர். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளைஞர் ஒருவர் கழுமரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்த பரிசுபொருட்களை எடுத்தார்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    சாணார்பட்டி அருகே கழுமரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே ராகலாபுரம் கிராமத்தில் முத்தாலம்மன், காளியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதற்காக 60 அடி உயர கழுமரம் தயாரிக்கப்பட்டு வழுக்கும் பொருள்களான எண்ணெய் வகைகள் தடவப்பட்டு கோயில் மைதானத்தில் ஊன்றப்பட்டது.

    இதில் முறையான விவாதம் மேற்கொண்ட இளைஞர்கள் போட்டிபோட்டுக்கொண்டு கழுமரம் ஏற முயன்றனர். அப்போது சிலர் வழுக்கி விழுந்தனர்.

    சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின்பு ராகலாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுமரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்த பரிசுபொருட்களை எடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ராகலாபுரத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

    தீபத் திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். #Thiruvannamalaitemple

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா அன்று பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 தற்காலிக பஸ் நிலையங்களில் 2,420 பஸ்கள் நிற்க வைக்கலாம். 2,650 சிறப்பு பஸ்கள், 6,600 நடைகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல 59 தொடர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தென்னக ரெயில்வே மூலம் 14 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசல் தவிர்க்க விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், உள்ளே 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    அன்னதானம் 7 இடங்களில் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 8 குழுக்களாக உணவு தரம் குறித்து சோதனை மேற்கொள்வார்கள். ஆவின் பாலகம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது 3 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதன்படி, 72 வெள்ளி நாணயங்களும், 2 கிராம் எடையுள்ள 6 தங்க நாணயங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thiruvannamalaitemple

    குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விசயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விசயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சுமார் 1400 ஆண்டுகள் பழமை மிக்கதும், புராதான பெருமைகள் பல கொண்டதும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த கோவில் ஆண்டு தோறும் 13 நாட்கள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரம், நந்தியம்பெருமாள், பலிபீடத்திற்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அலங்கரிக்கப் பட்ட கொடிமரத்திற்கு சிறப்பு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அப்பர் அடிகள் உழவாரப்பணி வீதி உலா, 7 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் ஸ்ரீபலிநாதர் திருவீதிஉலா, இரவு 8.30 மணிக்கு அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.

    விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் அம்பாள் கேடயம், காமதேனு, சிங்கம், ரி‌ஷபம், பூங்கோயில், அன்னம், மின் அலங்காரம், கிளி, பல்லக்கு சப்பரங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அறம் வளர்த்த நாயகி திருக்கூடத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு தேவாரப் பண்ணிசை, சமய சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    வருகிற 1-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல் வைபவமும், 2-ந் தேதி இரவு7 மணிக்கு திருக்கல்யாணக் காப்புக் கட்டுதல், 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு சுவாமி காட்சி கொடுக்க ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளல், இரவு 11.30 மணிக்கு அம்பாள் பல்லக்கில் கதிர் குளிப்புக்கு எழுந்தருளல் நடைபெறும்.

    4-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அறம் வளர்த்த நாயகிக்கு திருமாங்கல்யதாரணம் திருமங்கல திருநாண் பூட்டுதல் வைபவம் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்துள்ளனர்.
    தேவதானப்பட்டி கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் ஸ்ரீகவுமாரியம்மன கோவில் திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவில் அக்ரகார தெருவை சேர்ந்த காமுத்துரை என்பவர் மைக்செட் போடும் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு மைக்செட்டை அணைத்து விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாட்டை போடுமாறு அவரிடம் தகராறு செய்தனர்.

    ஆனால் 10 மணிக்கு மேல் பாட்டு போடக்கூடாது என்று போலீசார் கூறி உள்ளனர் என காமுத்துரை தெரிவித்தார். பாட்டை போடாவிட்டால் உன்னை அடித்தே கொலை செய்துவிடுவோம் என மிரட்டி தாக்கி உள்ளனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் காமுத்துரை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கோட்டை முருகன் (வயது33), மச்சக்கண்ணன் (40), ஆனந்த் (25), கார்த்திக் (27), முத்துப்பாண்டி (28), திலகர் (27) உள்பட மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில் மகாபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் நேற்று ஒரு தரப்பினர் வண்டி வேசம் ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கிருந்த வாகனங்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது.

    இதனால் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் திருவிழாவில் பங்கேற்ற ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. அவ்வழியாக வந்த அரசு பஸ் கல் வீசி தாக்கப்பட்டதால் குள்ளபுரம், ஏ.வாடிப்பட்டி பகுதியில் இருந்து வத்தலக்குண்டு நகருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தண்ணீர் பந்தலுக்கும் தீ வைத்து எரித்தனர். இதனால் நேற்று சுவாமியின் முத்துப் பல்லக்கு ஊர்வலம் சிறிது நேரத்தில் முடிந்தது. இன்று தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானலில் முதல்வர் பாதுகாப்புக்கு பெரும்பாலான போலீசார் சென்று விட்டதால் குறைந்த அளவு போலீசாரே உள்ளனர். எனவே இன்று மீண்டும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை சமாளிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×