என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "father complaint"
திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் சவுந்திரபாண்டி (வயது 29). ஆசிரியர் பயிற்சி படிப்பு (பி.எட்.) முடித்துள்ளார்.
வேலை தேடி வந்த சவுந்தரபாண்டி, அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதாக கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது சவுந்திர பாண்டியின் சட்டைப்பையில் இருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அதில், தனது சாவுக்கு ஞானமணி மற்றும் இளையராஜா தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி ஞானமணி (35)க்கும், சவுந்தர பாண்டிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இளையராஜா என்பவருடன் ஞானமணி தொடர்பில் இருந்தாராம். இந்த விவகாரத்தில் தான் சவுந்தரபாண்டி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதன் பேரில் ஞானமணி மற்றும் இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சவுந்தரபாண்டி சாவில் மர்மம் நிலவுவதாக அவரது தந்தை சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். மகனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என கள்ளிக்குடி போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வடக்கு பாளையம் அடுத்த பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். இவரது மகள் செண்பக தேவி(வயது18). இவர் மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை செண்பக தேவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று உடன் தங்கி இருக்கும் மாணவிகளிடம் தெரிவித்தார். மேலும் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.
இந்தநிலையில் கல்லூரி முடிந்து மாணவிகள் திரும்பி வந்தபோது விடுதி அறையில் செண்பகதேவி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செண்பகதேவியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவருடன் தங்கி இருந்த மாணவிகளிடமும் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே செண்பக தேவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை முத்துகிருஷ்ணன் மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
மகள் செண்பகதேவியை கடந்த 31-10-2018 அன்று அரசு தோட்டக்கலை கல்லூரியில் டிப்ளமோ தோட்டக்கலை துறையில் சேர்த்தேன்,
கல்லூரியில் சேர்ந்து 43 நாட்களில் பலமுறை கல்லூரியை பற்றியும், கல்லூரியின் நிர்வாகம் மற்றும் அந்த துறை சார்ந்தவர்களை பற்றியும் பலமுறை எண்ணிடம் பகிர்ந்து கொள்வாள்.
விடுதி காப்பாளர் மூன்றாம்பிறை என்பவர் தினமும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வருவதாக கூறுவாள். மேலும் சக மாணவிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளை சொல்லி திட்டி அனைவருக்கும் முன்பு முட்டிபோட வைப்பதாகவும் தெரிவித்தாள். அங்கு நடக்கும் கொடுமைகளை பற்றியும் அவ்வப்போது என்னிடம் கூறி வந்தாள்.
இந்தநிலையில் செண்பக தேவி தற்கொலை செய்து இருப்பதாக தெரிவித்தனர். அவளது சாவில் சந்தேகம் உள்ளது. கல்லூரியின் நிர்வாகத்தினர் மற்றும் விடுதி காப்பாளர் மூன்றாம் பிறை ஆகியோரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி விடுதி காப்பாளரான ஆவடியை சேர்ந்த மூன்றாம் பிறையிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மாணவி செண்பகதேவி தற்கொலை செய்ததையடுத்து தோட்டக்கலை கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. விடுதியில் தங்கி இருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentSuicide
புதுச்சேரி:
முதலியார்பேட்டை பாரதிமில்திட்டு பகுதியை சேர்ந்த 17 வயதான இளம்பெண் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு நெல்லித்தோப்பில் உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலைபார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அந்த இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை.பியூட்டி பார்லருக்கு சென்று விசாரித்த போது அங்கு அந்த பெண் வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் அவர் இல்லை.
இதையடுத்து அந்த இளம்பெண்ணின் தந்தை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை தவளக்குப்பம் அருகே தானம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் பெட்ரோல் பங்க் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரும் ஆயிஷா (வயது 24) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் குழந்தை உள்ளது. ஆயிஷா கம்ப்யூட்டர் சென்டருக்கு வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ஆயிஷா வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை காஜா மைதீன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இதேபோல் உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைக் கண்ணன் (வயது 40). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு சம்பவத்தன்று பெங்களூரில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு எங்கு சென்றார்? என தெரியவில்லை.
இது குறித்து அவரது மனைவி தவசீலா உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வடக்கு சாந்திபட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் வள்ளி (வயது 22).
இவர் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 29-ந் தேதி வள்ளி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலையில் பணிமுடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் வள்ளியை பல இடங்களில் தேடினர். எங்கும் காணவில்லை.
இதனைத் தொடர்ந்து காடாம்புலியூர் போலீசில் தந்தை வடிவேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குபதிவு செய்து மாயமான ஆசிரியையை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்