என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குருவிகுளத்தில் பள்ளி மாணவன் திடீர் மாயம்
Byமாலை மலர்17 Dec 2018 1:31 PM GMT (Updated: 17 Dec 2018 1:31 PM GMT)
குருவிகுளத்தில் பள்ளி மாணவன் திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
குருவிகுளம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41). விவசாயி. இவரது மகன் மகேஸ்குமார் (17). இவர் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி படிக்க செல்கிறேன் என கூறி சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதறி போன லட்சுமணன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பல இடங்களில் தேடியுள்ளார்.
எனினும் மகேஸ்குமாரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி லட்சுமணன் குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்த குருவிகுளம் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மகேஸ்குமார் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றுவிட்டார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X