search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E service center"

    • ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
    • ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டையிலுள்ள மகளிர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உதவி மைய எண் 1100-ல் தொடர்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்ட இணைய முகவரியான kmut.tn.gov.in/login.html யில் பொதுமக்கள் உள்நுழைவு என்ற மெனுவை தேர்வு செய்து அதில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்திட்டத்திற்கென பிரத்யேகமாக செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தினை அணுகி விண்ணப்ப த்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொகை ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தொகை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளாவிடில் வங்கியிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்வார்கள் என அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வ முள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட் டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர் நெட் மூலம் விண்ணப் பிக்கவும், https://www.tnesevai.tn.gov.in/ என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வ முள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட் டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர் நெட் மூலம் விண்ணப் பிக்கவும், https://www.tnesevai.tn.gov.in/ என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

    வருகிற 30-ந் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப் புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

    விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி என்ற ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்திக் காணலாம். அல்லது https://tnega.tn.gov.in என்ற வெப்சைட் முகவரியிலும் காணலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என கலெக்டர் கற்பகம் அறிவித்தார்
    • மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிவும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூ மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையங்கள் அமைக்க உரிமம் வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டிடத்தில் கணினி பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 எம்.பி.பி.எஸ் அதிவேக அலைவரிசையுடன் தொடர்ச்சியான, தடையற்ற இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • தகுதியான விண்ணப்பதாரருக்கு ‘யூசர் நேம்’, ‘பாஸ்வேர்டு’ வழங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    இ–-சேவை மையம் தொடங்க படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர் முன் வரலாம். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன் வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் இ–-சேவை மையங்களை செயல்படுத்தி அரசின் சேவைகளை இருப்பிடத்தில் வழங்குகிறது.

    அரசின் இணைய தள சேவையை மக்களுக்கான பொது இணைய தளம் மூலம் வழங்குகிறது. இதனை மேம்படுத்த 'அனைவருக்கும் இ–-சேவை மையம்' திட்டத்தை செயல்படுத்துகிறது.

    விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் https://www.tnesevai.tn.gov.in/ மற்றும் https://tnega.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி வருகின்ற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிராமப்புறங்களில் இம்மையம் பெற விண்ணப்ப கட்டணம் 3,000 ரூபாய். நகர்புற கட்டணம் 6,000 ரூபாய். இக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். தகுதியான விண்ணப்பதாரருக்கு 'யூசர் நேம்', 'பாஸ்வேர்டு' வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    வழக்கமாக காலை 10 மணி முதல் மாலை, 5:45 மணி வரை இம்மையங்கள் இயக்கப்படும்.

    திருப்பூர்:

    டி.என்.பி.எஸ்.சி.,குரூப்- 2, குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோர் தங்களது சான்றிதழ்களை இ-சேவை வாயிலாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். வருகிற 15ந் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டியுள்ளது.

    இதையடுத்து அரசு கேபிள் டி.வி., நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள இ-சேவை மையங்களின் தினசரி செயல்படும் நேரம் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள் என அரசு கேபிள் டி.வி., நிறுவன கட்டுப்பாட்டில் 14 இ-சேவை மையங்கள் இயங்குகின்றன. வழக்கமாக காலை 10 மணி முதல் மாலை, 5:45 மணி வரை இம்மையங்கள் இயக்கப்படும்.குரூப் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளதால் இம்மையங்கள் வருகிற 16ந் தேதி வரை காலை 8மணி முதல் இரவு, 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக அருகில் இயங்கி வரும் தனியாா் இ-சேவை மையத்தில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக புகாா் வந்தது.
    • இதனையடுத்து அந்த மையத்தின் பயனாளா் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக அருகில் இயங்கி வரும் தனியாா் இ-சேவை மையத்தில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக புகாா் வந்தது. இதனைத் தொடா்ந்து அதிகாரிகள் குழு திடீா் ஆய்வு செய்ததில் முதியோா் ஓய்வூதியத் திட்டம் சாா்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டாமாறுதல் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மையத்தின் பயனாளா் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட இ-சேவை மைய அங்கீகாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இது தொடா்பான புகாா்களை tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 18004251997 மூலமாகவோ புகாா்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    திண்டுக்கல்லில் சான்றிதழ் வழங்க தாமதம் ஆவதால் இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் யூனியன் அலுவலகத்தில் இ-சேவை மையம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் பட்டா, சிட்டா அடங்கல், ஜாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், ரேசன் ஸ்மார்ட் கார்டு ஆகியவை பெற்று வந்தனர். கடந்த சில நாட்களாக இங்கு விண்ணப்பித்தால் அதிக நேரம் தாமதம் ஆகிறது.

    அதோடு சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறி இழுத்தடிக்கும் நிலை உருவானது. இதனால் பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர்.

    இன்று காலை ஏராளமானோர் இ-சேவை மையத்துக்கு வந்தனர். சான்றிதழ் தாமதமாக வழங்கப்படும் என்று தெரிய வந்ததால் ஆத்திரமடைந்தனர். அவர்கள் யூனியன் அலுவலகம் முன்பு திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் களைந்து சென்றனர்.

    சர்வர் இணைப்பு கிடைக்காததால் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் மூடப்பட்டது. இதனால் சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் பெறுவதற்கு முன்பெல்லாம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் வீண் அலைச்சல் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. அலுவலர்கள் இல்லை என்றால் அலுவலகத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் நேரம் வீணானது.

    இவற்றை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, கூட்டுறவு சங்க அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல்துறை, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சை, திருவையாறு, திருவிடைமருதூர், பூதலூர் ஆகிய 9 தாசில்தார் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், கூட்டுறவு சங்க அலுவலகங்களில் 274 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் இ-சேவை மையங்கள் மூலமாகவே பெற்று கொள்ளலாம். மேலும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கும், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கும் இந்த மையங்கள் மூலமாகவே விண்ணப்பம் செய்யலாம். இவைகள் அனைத்தும் இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து விசாரித்து அதன் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

    பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்வது, அவற்றின் மீதான நடவடிக்கை ஆகியவற்றை குறுந்தகவல் மூலமாக செல்போன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். சான்றிதழ் தயாரான தகவல் பெறப்பட்டதும், சம்பந்தப்பட்ட இ-சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். இ-சேவை மையங்கள் வழியாக சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை வந்தபிறகு கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்த மையங்கள் மூலம் சான்றிதழ் பெறுவது மிக எளிதாகவே இருந்தது. இதனால் இ-சேவை மையங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் தற்போது பள்ளிக்கூடம் திறந்துவிட்டதால் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்காக வழக்கத்தை காட்டியிலும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 5 நாட்களாக இ-சேவை மையங்களில் சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவும் முடியவில்லை. சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து பொதுமக்களுக்கு வழங்கவும் முடியவில்லை.

    தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்ட இ-சேவை மையத்தில் சர்வர் இணைப்பு கிடைக்காததால் நேற்று மையத்தை ஊழியர்கள் பூட்டிவிட்டனர். இதனால் சான்றிதழ் பெறுவதற்காகவும், பதிவு செய்வதற்காகவும் வந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

    தொடக்கத்தில் இ-சேவை மையங்களில் சாதி சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சில சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 15-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் தற்போது 30-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இ-சேவை மையங்களின் சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை.

    வழக்கமாக 50 விண்ணப்பங்கள் வரை பதிவேற்றம் செய்த நிலையில் நேற்றுமுன்தினம் 5 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்தது. இதனால் மையங்களுக்கு சான்றிதழ் பெற வந்த பொதுமக்கள், மாணவர்கள் பல மணிநேரம் காத்திருந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம். இன்றைக்கு(நேற்று) மையத்தையே பூட்டிவிட்டனர். சர்வர் இணைப்பு கிடைக்காத பிரச்சினை 5 நாட்களாக நீடித்து வருகிறது. ஆனால் அவற்றை சரி செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். தினமும் எந்த வேலைக்கும் செல்லாமல் மையத்திற்கு அலைவது தான் வேலையாக உள்ளது. வீண் அலைச்சலை போக்குவதற்கு தான் இ-சேவை மையம் தொடங்கப்பட்டது. இப்போது இங்கேயும் சான்றிதழ் பெற அலைய வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனே சர்வர் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, சர்வர் இணைப்பு கிடைக்காததால் 5 நாட்களாக பெரும் பிரச்சினையாக தான் உள்ளது. காலையில் 9 மணி அளவில் இணைப்பு கிடைக்கிறது. 10 மணிக்கு மேல் இணைப்பு கிடைப்பது இல்லை. பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருந்துவிட்டு திரும்பி செல்லும் சம்பவம் நடக்கிறது. நேற்று பல இடங்களில் சர்வர் இணைப்பு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. நாளைக்குள்(திங்கட்கிழமை) இந்த பிரச்சினை தீரும் என்றனர். 
    கூடலூரில் இ-சேவை மைய இணையதளம் முடக்கத்தால் சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    பொதுமக்கள் சாதி, வருமானம், இருப்பிடம், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடலூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். இதேபோல் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையமும் இங்கு இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விளக்கம் கேட்டால் இ-சேவை மைய இணையதள சேவை சரிவர செயல்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர். இதை அறியாத பொதுமக்கள் தினமும் வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

    மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் வாரக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்து உயர்கல்வி படிப்பதற்காக மாணவர்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இ-சேவை மைய இணையதள சேவை முடக்கம் காரணமாக சான்றிதழ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ×