search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Those interested in"

    • விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • தகுதியான விண்ணப்பதாரருக்கு ‘யூசர் நேம்’, ‘பாஸ்வேர்டு’ வழங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    இ–-சேவை மையம் தொடங்க படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர் முன் வரலாம். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன் வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் இ–-சேவை மையங்களை செயல்படுத்தி அரசின் சேவைகளை இருப்பிடத்தில் வழங்குகிறது.

    அரசின் இணைய தள சேவையை மக்களுக்கான பொது இணைய தளம் மூலம் வழங்குகிறது. இதனை மேம்படுத்த 'அனைவருக்கும் இ–-சேவை மையம்' திட்டத்தை செயல்படுத்துகிறது.

    விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் https://www.tnesevai.tn.gov.in/ மற்றும் https://tnega.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி வருகின்ற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிராமப்புறங்களில் இம்மையம் பெற விண்ணப்ப கட்டணம் 3,000 ரூபாய். நகர்புற கட்டணம் 6,000 ரூபாய். இக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். தகுதியான விண்ணப்பதாரருக்கு 'யூசர் நேம்', 'பாஸ்வேர்டு' வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×