search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுஞ்செய்தி"

    • சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.
    • கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது.

    சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், பொது மக்கள் யாரும் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரை பகுதிக்கோ, தேவை இல்லாமல் வெளியேவோ செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்ணை துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    அதன்படி, அந்த குறுஞ்செய்தியில், " மிச்சாங் புயலால் கனமழையுடன் 60- 70 கி.மீ., பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    பொது மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். மரங்கள், மின்கம்பங்கள் சாலைகள் பாதிக்கும்- தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்" என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது.

    • ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
    • ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டையிலுள்ள மகளிர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உதவி மைய எண் 1100-ல் தொடர்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்ட இணைய முகவரியான kmut.tn.gov.in/login.html யில் பொதுமக்கள் உள்நுழைவு என்ற மெனுவை தேர்வு செய்து அதில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்திட்டத்திற்கென பிரத்யேகமாக செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தினை அணுகி விண்ணப்ப த்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொகை ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தொகை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளாவிடில் வங்கியிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்வார்கள் என அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    • www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் துண்டிப்பு செய்யப்படும் என குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து அதன் மூலம் டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவ்வாறான போலியான தகவல்கள் தங்களது செல்போனுக்கு கிடைக்கப்பெற்றால் தங்களது 10 இலக்க மின் இணைப்பு எண் மற்றும் நிலுவையில் உள்ள மின் கட்டணம் போன்ற தகவல்கள் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொருளை மாற்றி அனுப்பியதற்காக ப்ளிப்கார்ட்க்கு போன் செய்த கொல்கத்தா வாலிபருக்கு பாஜகவில் இணைந்ததாக உறுப்பினர் எண்ணுடன் குறுஞ்செய்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FlipKart #BJP
    கொல்கத்தா:

    வீட்டில் உள்ளவர்களுக்கு தொந்தரவு தராமல் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க விரும்பிய கொல்கத்தா இளைஞர் ஒருவர், ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இரண்டு இயர் போன்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு அனுப்பப்பட்ட பெட்டியில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் பாட்டில் இருந்துள்ளது.

    இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் பார்சலில் இருந்த ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு போன் செய்துள்ளார். ஆனால், தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில வினாடிகளில், “பாஜகவுக்கு வரவேற்கிறோம். உங்களது உறுப்பினர் எண் ...... உங்களது, பெயர் மற்றும் விலாசத்தை அனுப்பவும்” என குறுஞ்செய்தி வந்துள்ளது. 

    என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த அவர் அதே எண்ணை தனது நண்பர்களுக்கும் அனுப்பி, போன் செய்ய செய்துள்ளார். அவரது நண்பர்களுக்கும் அதே போல குறுஞ்செய்தி வந்துள்ளது. தனது அனுபவத்தை பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட இந்த செய்தி வைரலாக பரவியது.



    இதற்கு விளக்கமளித்துள்ள அம்மாநில பாஜக தலைவர், “பார்சல் கவரில் கொடுக்கப்பட்ட எண் பாஜவுக்கு சொந்தமானதே. இந்த எண்ணை யார் வேண்டுமானாலும் பகிரலாம். ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கும் மாநில பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என கூறியுள்ளார்.

    இந்த செய்தி இணையதளத்தில் பரவியதை அடுத்து, சப்தமில்லாமல் அந்த இளைஞருக்கு போன் செய்த ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையம், “உங்களுக்கு அனுப்பிய எண்ணெய் பாட்டிலை உபயோகப்படுத்தவும் அல்லது தூக்கி எறியவும். தற்போது எங்களிடம் ஒரு செட் இயர் போன் மட்டுமே உள்ளது. அதனை உடனே அனுப்புகிறோம். மற்றொரு செட்டுக்கான பணத்தை திரும்ப அனுப்பி விடுகிறோம்” என கூறியுள்ளது.

    மேலும், பார்சலின் மீது இருந்த எண் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியது. தற்போது உபயோகப்படுத்தப்படும் எண்ணுக்கு பதிலாக பழைய எண் ஒட்டப்பட்டுள்ளது என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 
    ×