search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supervising Engineer"

    • திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • நாட்டமங்கலம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஏழூர் முதல் குருசாமிபாளையம் செல்லும் சாலையின் தரம் மற்றும் கணத்தினை ஆய்வு செய்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் ராசிபுரம் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் ஒரு பகுதியாக நாட்டமங்கலம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஏழூர் முதல் குருசாமிபாளையம் செல்லும் சாலையின் தரம் மற்றும் கணத்தினை ஆய்வு செய்தார். மேலும் ராசிபுரம் நெடுஞ் சாலை உட்கோட்டத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், புறவழிச் சாலை பாலப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். சாலை பரா மரிப்பு பணி களான பாலம் சுத்தம் செய் யும்பணியினை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கி னார். நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் திரு குணா, ராசிபுரம் நெடுஞ் சாலை கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு உதவி கோட்ட பொறி யாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண் டன்ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    • www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் துண்டிப்பு செய்யப்படும் என குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து அதன் மூலம் டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவ்வாறான போலியான தகவல்கள் தங்களது செல்போனுக்கு கிடைக்கப்பெற்றால் தங்களது 10 இலக்க மின் இணைப்பு எண் மற்றும் நிலுவையில் உள்ள மின் கட்டணம் போன்ற தகவல்கள் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×