search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை-கலெக்டர் கற்பகம் அறிவிப்பு
    X

    தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை-கலெக்டர் கற்பகம் அறிவிப்பு

    • தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என கலெக்டர் கற்பகம் அறிவித்தார்
    • மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிவும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூ மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையங்கள் அமைக்க உரிமம் வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டிடத்தில் கணினி பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 எம்.பி.பி.எஸ் அதிவேக அலைவரிசையுடன் தொடர்ச்சியான, தடையற்ற இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×