search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் இ சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் இ சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

    • இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வ முள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட் டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர் நெட் மூலம் விண்ணப் பிக்கவும், https://www.tnesevai.tn.gov.in/ என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வ முள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட் டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர் நெட் மூலம் விண்ணப் பிக்கவும், https://www.tnesevai.tn.gov.in/ என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

    வருகிற 30-ந் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப் புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

    விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி என்ற ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்திக் காணலாம். அல்லது https://tnega.tn.gov.in என்ற வெப்சைட் முகவரியிலும் காணலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×