search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Code"

    • இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
    • அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாடலை ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

    நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தற்போது தி கோட் (THE GREATEST OF ALL TIME) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

    இந்த படம் சைஃபை டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விசில் போடு எனும் பாடல் போன்றவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

    அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாடலை ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யா, திருவனந்தபுரம், சென்னை போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    அதேசமயம் இந்த படத்தின் 50 சதவீத டப்பிங் பணிகளையும் நடிகர் விஜய் நிறைவு செய்துள்ளார். படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளும் நிறைவடைந்ததாக சமீபத்தில் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்று ஆரம்பத்திலேயே தகவல் வெளியானது. அதன்படி அப்பாவாக நடிக்கும் விஜய்க்கு நடிகை சினேகா ஜோடியாகவும் மகனாக நடிக்கும் விஜய்க்கு நடிகை மீனாட்சி சௌத்ரி ஜோடியாகவும் நடிக்கின்றனர்.

    ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இதன் கூடுதல் தகவல் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய், இரட்டை வேடங்களில் அல்லாமல் மூன்று வேடங்களில் நடிப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

    மூன்றாவதாக நடிக்கும் விஜய்யின் கதாபாத்திரத்தை படக்குழு சர்ப்ரைஸாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் உள்பட பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
    • போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவுபெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தலையாட்டி பொம்மை, வீணை, ஓவியம், திருபுவனம் பட்டு, கருப்பூர் கலம்காரி ஓவியங்கள், கலைத்தட்டுகள், நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவில் சிறந்த பொருட்களை தேர்வு செய்வதற்காக மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பு இணையதளம் மூலம் நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன.

    இதில் கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள், உணவு பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது. இவற்றில் அதிக வாக்குகளை பெற்று கைவினைப் பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

    இதையடுத்து கைவினை பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழ் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத்தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக அருகில் இயங்கி வரும் தனியாா் இ-சேவை மையத்தில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக புகாா் வந்தது.
    • இதனையடுத்து அந்த மையத்தின் பயனாளா் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக அருகில் இயங்கி வரும் தனியாா் இ-சேவை மையத்தில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக புகாா் வந்தது. இதனைத் தொடா்ந்து அதிகாரிகள் குழு திடீா் ஆய்வு செய்ததில் முதியோா் ஓய்வூதியத் திட்டம் சாா்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டாமாறுதல் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மையத்தின் பயனாளா் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட இ-சேவை மைய அங்கீகாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இது தொடா்பான புகாா்களை tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 18004251997 மூலமாகவோ புகாா்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×