search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali Festival"

    • கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
    • அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.

    திருப்பூர்:

    ஒரு காலத்தில் திருப்பூர் பனியன் தொழில் நகரத்தில், தீபாவளி என்றாலே 10 நாட்களுக்கு முன்பாகவே, பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போனஸ் வழங்குவார்கள். அதிலிருந்தே, நகரப்பகுதியில் உள்ள கடைகள் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் திருப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் மந்தமாகிவிட்டது. கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி போனஸ் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் போனஸ் பட்டுவாடா தொடங்கி விட்டது. இருப்பினும் பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் இன்று அல்லது நாளைதான் போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளன. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் கடைகளுக்கு வந்து செல்வதால் நகரப்பகுதி கலகலப்பாக காணப்படும். தற்போது பனியன் தொழிற்சாலைகளில் பணி குறைவு என்பதால் தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளனர். அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி நாளையுடன் (9-ந்தேதி) உற்பத்தி பணிகளை நிறைவு செய்து விட்டு 10-ந்தேதி முதல் பண்டிகை விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளன. சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் 19-ந்தேதிக்கு முன்னதாக திரும்ப போவதில்லை. இதனால் 20-ந்தேதிக்கு பின்னரே பனியன் தொழிற்சாலைகளின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும். இதுவரை போனஸ் கிடைக்காத தொழிற்சாலைகளில் எப்படியும் இன்று மாலைக்குள் கிடைத்துவிடும். அதற்குள் கொள்முதல் வேலைகளை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் எனவும் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். கடைசி நேர கூட்டத்தில் சிக்காமல் முன்கூட்டியே குடும்பத்தினரை பஸ்சில் அனுப்பி வைக்கவும் தொழிலாளர்கள் தயாராகி விட்டனர்.

    சிறப்பு பஸ்கள்

    திருப்பூரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில் வழி ஆகிய 3 பஸ் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் (300-க்கும் மேற்பட்ட) பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தான் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளதால், அதற்கேற்ப கோவில்வழி பஸ் நிலையத்தை தயார் படுத்தும் பணியில் மாநகராட்சி, போக்குவரத்து கழக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் விரிவுப்படுத்தும் கட்டுமான பணி நடந்து வருவதால், கூடுதலான சிறப்பு பஸ்களை பஸ் நிலையத்திற்குள் நிற்க வழியில்லாத நிலைமை உள்ளது. இதனால் பஸ் நிலைய மேற்குபுறத்தில் உள்ள மாநகராட்சி காலியிடத்தை, தூய்மைப்படுத்தி, சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இந்த இடத்தை ஜே.சி.பி., எந்திரத்தின் உதவியுடன் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டு, வழித்தட பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் சேறும், சகதியுமாக உள்ள இடங்களில் மண் கொட்டப்படுகிறது. கூடுதலாக பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு பின் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பஸ்கள் நிற்பதற்கு பஸ் நிலையத்தில் இடம் போதியதாக உள்ளது. மேலும் அடுத்தடுத்து பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் வரும் போது, நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்கூட்டியே காலியிடம் தயார்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இடையூறு இல்லாமல் சென்று வர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் மின் விளக்குகளும் பொருத்தப்படும். அத்துடன் அப்பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றனர்.

    தற்போது ஸ்மார்ட் சிட்டி பணி தொடங்கியதால், பஸ் நிலையத்தில் இருந்த ரேக், மேற்கூரை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு விட்டது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. குழந்தைகள், குடும்பத்துடன் வரும் பயணிகள் மழை, வெயிலில் படும் சிரமங்களை தவிர்க்க, தற்காலிக நிழற்குடை உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை நகரில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • போலீஸ் கமிஷனர் லோகநாதன் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாவட்டம் மட்டு மின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் புத்தாடை மற்றும் தீபாவளிக்கு தேவை யான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு மதுரைக்கு வருகின்றனர்.

    முக்கிய விற்பனை இடங்களாக இருக்கக்கூடிய விளக்குத் தூண், தெற்கு மாசி வீதி, கீழ ஆவணி மூல வீதி, மேலமாசி வீதி, கீழமாசி வீதி பகுதி களில் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் வந்து செல்வதினால் இந்த பகுதியில் திருட்டை கண் காணிக்கவும், பொது மக்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வருவதற்கு ஏதுவாகவும் 50 இடங்களில் 85 காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பை தீவிர படுத்தப்பட்டுள்ளது இந்த கண்காணிப்பு கேமராவை மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி தீபாவளி பொருட்களை வாங்கி செல்வதற்கு சட்ட ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார், குற்றப்பிரிவு போலீசார் என ஆயி ரத்துக் கும் மேற்பட்டோர் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.

    உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி யாரும் பொதுமக்களின் பொருட்களை திருடன் முயற்சித்தால் அவர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயார் நிலையில் இருக்கின்றனர்.

    மேலும் பழைய குற்ற வாளிகளை கண்காணிப்பு காமிரா மூலம் கூட்டத்தை பயன்படுத்தி திருடன் முயற்சிக்கின்றனாரா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு முன்பாக மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நவீன மய மாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகரின் 32 முக்கிய சந்திப்புகளில் ஏற்கனவே உள்ள தானியங்கி சிக்னல்களை போல் இதிலும் டிஜிட்டல் நேரம் காட்டப்பட்டு கருவி புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதையும் போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார்.

    • தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது.
    • பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை எந்த நேரமும் தொடர்புகொள்ளலாம். அதேபோல், ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 கட்டணமில்லா எண்கள் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அரசு போக்குவரத்து கழக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகைையயொட்டி கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன், கோவை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்-சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் போன்ற ெரயில்களில் முன்பதிவு, 100 சதவீதம் நிறைவு பெற்றது. பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற ஊர்களுக்கு தீபாவளி சிறப்பு ெரயில் அறிவிப்பு வெளியிட வேண்டும். பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரித்தால், பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.சிறப்பு ெரயில் அறிவிப்பு குறித்து கோரிக்கை வைக்கும் போது அதனை பரிசீலிக்கும் சேலம் கோட்ட அதிகாரிகள் எர்ணாகுளம், கொச்சுவேலி, ஆலப்புழா, திருவனந்தபுரம் என கேரளாவில் இருந்து சென்னைக்கு ெரயில் அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கோவை, திருப்பூர் மாவட்ட பயணிகளுக்கு இருக்கை கிடைக்காமல் போகிறது. எனவே இம்முறையும் அப்படியொரு அறிவிப்பு வெளியிடாமல் கோவையில் இருந்து ெரயில் புறப்படும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை
    • மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு

    வேலூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வேலூர் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்க பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் வேலூர் அண்ணா சாலை, பி.எஸ்.எஸ். கோவில் தெரு, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    ஜவுளி கடைகளில் பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை, வேஷ்டி, துண்டு, டவல், பனியன் உள்ளிட்ட வைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மார்க்கெட்டில் மளிகை மற்றும் பூஜை பொருட்கள் வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது.

    வேலூர் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    • தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த என்.கந்தம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சியினை செய்து காண்பித்தனர்.

    பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
    • எந்த வாகனங்களையும் வீதியில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்ைல.

    மதுரை

    மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகின்ற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்கள் நகருக்குள் எளிதாக வந்து செல்லும் வகையில் சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து தற்காலிக மாக மாற்றம் செய்யப்படுகிறது.

    இன்று (2-ந்தேதி) முதல் இலகுரக (டாடா ஏஸ் போன்ற) சரக்கு வாகனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை ஆகிய நேரங்களில் மட்டுமே கீழ மாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் ஆகிய சாலைகளில் சரக்குகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப் படும்.

    9-ந் தேதி அன்று பகல் நேரத்தில் மதுரை நகருக்குள் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உட்பட எந்த ஒரு சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.

    மேலும் பை-பாஸ் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடிரோடு, கே.கே. நகர் 80 அடிரோடு, அழகர்கோவில் சாலை, மூன்றுமாவடி சந்திப்பு, புது நத்தம் ரோடு, அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு, கூடல் நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை-ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருந்துவமணை சந்திப்பு ஆகிய சந்திப்புகளில் இருந்து நகருக்குள் நுழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. அன்று இரவு 11 மணி முதல் மறுநாள் 10-ந்தேதி. காலை 7.10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் படும்.

    10, 11-ந் தேதிகளில் பகல் மற்றும் இரவு நேரம் முழுவதும் மதுரை நகருக் குள் மேற்படி சாலைகளில் லாரிகள், கனரக வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.

    அதே நாட்களில் பொது மக்களின் நலன் சுருதி நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இருசக்கர வாகனங் கள் தவிர மற்ற வாகனங்க ளுக்கு அனுமதி இல்லை. அவசியமெனில் இரு சக்கர வாகன போக்குவரத்தும் தடை செய்யப்படும்.

    அதே நாட்களில் பேலஸ் ரோடு, கீடிமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எந்த வாகனங்களையும் வீதியில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்ைல.

    மதுரை மாநகர பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், வர்த்தக சங்கங்கள் நெரிசல் இல்லாமல் மக்கள் பொருட்கள் வாங்கி செல்ல உதவும் வகையில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படு கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    சிவகாசி

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சிவகாசி நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தீபாவளி வரை போக்குவரத்து மாற்றம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சிவகாசி நகருக்குள் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பிற்பகலில் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நகர் பகுதிக்குள் கனரக வாக னங்கள் அனுமதிக்கப்படும்.

    அனுமதிக்கப்பட்ட நேரங் கள் தவிர மற்ற நேரங்களில் வெளியூரில் இருந்து லோடு ஏற்றவோ, இறக்கவோ, வரும் கனரக வாகனங்கள், உள்ளூரில் இருந்து வெளியே செல்லும் கனரக வாகனங்கள் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    கனரக வாகனங்கள் பிள்ளைக்குழி நிறுத்தத்தில் இருந்து இடது புறமாக திரும்பி தெய்வானை நகர், மணிகண்டன் மருத்துவ மனை, மணி நகர் பஸ் நிறுத்தம் வழியாக சிவகாசி பழைய மீன் மார்க்கெட் பகுதியில் சென்று நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் கனரக வாக னங்கள் சாட்சியாபுரம் சாமி யார் மடத்திலிருந்து கங்கா புரம், செங்கமல நாச்சியார் புரம், திருத்தங்கல் தேவர் சிலை, திருத்தங்கல் மாரி யம்மன் கோவில், திருத்தங் கல் செக்போஸ்ட் வழியாக சென்று திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டும்.

    அனுமதிக்கப்பட்ட நேரங்கள் மட்டுமே வெம்பக்கோட்டை ஜங்ஷன் வழியாக பன்னீர் தெப்பம், மணிநகர், பஸ் நிலையம், அம்பலார் மடம் மற்றும் பழனியாண்டவர் தியேட்டர், காரனேஷன் ஜங்ஷன் வரையிலான சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி லோடு ஏற்றவோ, இறக்கவோ செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க கூடாது.

    அனைத்து வாகனங்களை யும் மதியம் 3 மணிக்கு காரனே ஷனுக்கு எதிரே இந்து நாடார் பெண்கள் மேல்நி லைப்ப ள்ளிக்கு சொந்தமான மைதானத்திற் குள் சென்று நிறுத்த வேண்டும். பயணிகளை அங்கிருந்து மட்டுமே ஏற்ற வேண்டும். திருத்தங்கல் வழியாக வெளியே செல்ல வேண்டும். சிவகாசி நகருக்குள் வேறு எங்கும் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க கூடாது. திருத் தங்கல் சாலையிலும் எங்கும் கனரக வாகனங்களை யோ, ஆம்னி பஸ்களையோ நிறுத்தக் கூடாது. திருத் தங்கல் புதிய பஸ் நிலையத்தில் மட்டுமே பயணிகள் மற்றும் பொருட் களை ஏற்ற, இறக்க வேண்டும்.

    • தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முத்தூ:

    முத்தூர் பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கு சுத்தமான பலகாரங்களை விற்பனை செய்யாத கடைகள் சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    வெள்ளகோவில், முத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் முத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள், தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் தவறாமல் உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    காலாவதியாக உள்ள இனிப்பு, கார உணவு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதை தவிர்த்தல் வேண்டும். நல்ல சுத்தமான உணவு பொருட்கள், சுத்தமான எண்ணெய் ஆகிவற்றை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் புதிதாக தயார் செய்யப்பட்ட பலகாரத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே முத்தூர் நகர, கிராம பகுதி தீபாவளி பண்டிகை இனிப்பு காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் இனிப்புகள், காரங்கள், காலாவதியான உணவுப் பொருட்கள் ஆகியவற்றினை விற்பனை செய்ய வேண்டாம்.

    கெட்டுப்போன இனிப்பு கார வகைகள், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் மீது உணவு பாதுகாப்பு துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த வாரத்தில் 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • கன்னிவாடி சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

     மூலனூர்:

    தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தையாகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.இங்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை இறைச்சிக்காக வாங்கி செல்கின்றனர்.

    அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக இந்த பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் மேலும் செம்மறி மற்றும் மேச்சேரி இன ஆடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் இனி வரும் காலங்களில் மழைக்காலம் தொடங்குவதால் இந்த பகுதியில் மேய்ச்சல் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் அதிக லாபம் தரும் மேச்சேரி இன மற்றும் செம்மறி ஆடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது

    இதனால் ஆடுகளின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த வாரத்தில் 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.770 என்ற அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு செம்மறி ஆட்டின் விலை ரூ.7ஆயிரத்து 700 ஆகும்.இதனால் கன்னிவாடி சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விலை மேலும் உயரும் என்பதால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது.
    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது முதலே ரெயில், பஸ் உள்ளிட்டவைகளில் வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    அதேபோல் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் பயணிகளின் வசதிக்காக மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவை வழங்கப்ப டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 22-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதையடுத்து, இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சிங்கப்பூர்-மதுரை, மதுரை-சிங்கப்பூர் வழித்தடத்திற்கான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விரைவு பஸ்களை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும்.
    • நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோருக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    விரைவு பஸ்களை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும்.

    அந்த வகையில் நவம்பர் 10-ந்தேதி பயணம் மேற்கொள்வோர் இன்று (புதன்கிழமை) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இது தவிர பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.காசிராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் மு.மனோகரன் முன்னிலை வகித்தாா்.
    • போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே வழங்க வேண்டும்.

      திருப்பூர்:

    திருப்பூா் பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.காசிராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் மு.மனோகரன் முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பனியன் தொழிலைச் சாா்ந்த அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே வழங்க வேண்டும். மேலும், தொழிலாளா்களுக்கான 4 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    ×