search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமிரா மூலம் கண்காணிப்பு"

    • மதுரை நகரில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • போலீஸ் கமிஷனர் லோகநாதன் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாவட்டம் மட்டு மின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் புத்தாடை மற்றும் தீபாவளிக்கு தேவை யான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு மதுரைக்கு வருகின்றனர்.

    முக்கிய விற்பனை இடங்களாக இருக்கக்கூடிய விளக்குத் தூண், தெற்கு மாசி வீதி, கீழ ஆவணி மூல வீதி, மேலமாசி வீதி, கீழமாசி வீதி பகுதி களில் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் வந்து செல்வதினால் இந்த பகுதியில் திருட்டை கண் காணிக்கவும், பொது மக்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வருவதற்கு ஏதுவாகவும் 50 இடங்களில் 85 காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பை தீவிர படுத்தப்பட்டுள்ளது இந்த கண்காணிப்பு கேமராவை மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி தீபாவளி பொருட்களை வாங்கி செல்வதற்கு சட்ட ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார், குற்றப்பிரிவு போலீசார் என ஆயி ரத்துக் கும் மேற்பட்டோர் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.

    உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி யாரும் பொதுமக்களின் பொருட்களை திருடன் முயற்சித்தால் அவர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயார் நிலையில் இருக்கின்றனர்.

    மேலும் பழைய குற்ற வாளிகளை கண்காணிப்பு காமிரா மூலம் கூட்டத்தை பயன்படுத்தி திருடன் முயற்சிக்கின்றனாரா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு முன்பாக மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நவீன மய மாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகரின் 32 முக்கிய சந்திப்புகளில் ஏற்கனவே உள்ள தானியங்கி சிக்னல்களை போல் இதிலும் டிஜிட்டல் நேரம் காட்டப்பட்டு கருவி புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதையும் போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார்.

    ×