search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camera surveillance"

    • மதுரை நகரில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • போலீஸ் கமிஷனர் லோகநாதன் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாவட்டம் மட்டு மின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் புத்தாடை மற்றும் தீபாவளிக்கு தேவை யான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு மதுரைக்கு வருகின்றனர்.

    முக்கிய விற்பனை இடங்களாக இருக்கக்கூடிய விளக்குத் தூண், தெற்கு மாசி வீதி, கீழ ஆவணி மூல வீதி, மேலமாசி வீதி, கீழமாசி வீதி பகுதி களில் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் வந்து செல்வதினால் இந்த பகுதியில் திருட்டை கண் காணிக்கவும், பொது மக்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வருவதற்கு ஏதுவாகவும் 50 இடங்களில் 85 காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பை தீவிர படுத்தப்பட்டுள்ளது இந்த கண்காணிப்பு கேமராவை மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி தீபாவளி பொருட்களை வாங்கி செல்வதற்கு சட்ட ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார், குற்றப்பிரிவு போலீசார் என ஆயி ரத்துக் கும் மேற்பட்டோர் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.

    உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி யாரும் பொதுமக்களின் பொருட்களை திருடன் முயற்சித்தால் அவர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயார் நிலையில் இருக்கின்றனர்.

    மேலும் பழைய குற்ற வாளிகளை கண்காணிப்பு காமிரா மூலம் கூட்டத்தை பயன்படுத்தி திருடன் முயற்சிக்கின்றனாரா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு முன்பாக மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நவீன மய மாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகரின் 32 முக்கிய சந்திப்புகளில் ஏற்கனவே உள்ள தானியங்கி சிக்னல்களை போல் இதிலும் டிஜிட்டல் நேரம் காட்டப்பட்டு கருவி புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதையும் போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார்.

    மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அரசு மணல் குவாரியில் நவீன கேமரா மூலம் கண்காணிப்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு மணல் குவாரி செயல்படாததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து அரசு உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை ஆற்றில் குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி மானாமதுரை பகுதியில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக தெ.புதுக்கோட்டையில் கடந்த 13-ந்தேதி தாசில்தார் சுந்தரராஜன் தலைமையில் குவாரி தொடங்கப்பட்டது. அப்போது 13 லாரிகளில் மணல் அள்ளி பொதுப்பணித்துறை குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் குவாரியில் மின் இணைப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பணிகள் நடந்து வந்தன.

    இந்தநிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது குவாரியில் மணல் அள்ளி லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை சார்பில் குவாரி செயல்பட தொடங்கியுள்ளது. இதில் லாரிகள் உள்ளே வரும் பாதை, வெளியே செல்லும் பாதை, குவாரி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையில் பதிவு செய்யப்பட்ட லாரிகளில் மட்டும் மணல் ஏற்றப்படும். மணல் ஏற்றப்பட்ட லாரி ஜி.பி.எஸ். கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பொதுப்பணித்துறை குடோனில் இருந்து மணல் ஏற்றுவதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை 4 ஆயிரத்து 700 லாரிகளை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சிவகங்கை அருகே காயாங்குளம் பொதுப்பணித்துறை குடோன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட உள்ளது.

    குவாரி அலுவலகத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. குவாரியில் இருந்து வெளியே செல்லும் லாரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து கண்காணிக்க முடியும். குவாரியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராவை சென்னையில் இருந்து இயக்கி கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். 
    ×