search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பஸ்கள் இயக்கம்"

    • கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 180 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • (OTRS) https://www.tnstc.in, TNSTC செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 டீலக்ஸ் பஸ்களின் முன்பதிவு செய்து பயனடையலாம்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் மதுரை கூட்டாண்மை வணிக அலுவலக மேலாண் இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழா நாளை நடப்பதையொட்டி பொது மக்கள் அதிகளவில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்வார்கள். எனவே பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பஸ்களும் மற்றும் சிறப்பு பஸ்களும் திருவண்ணா மலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு இன்று (25ந்தேதி) முதல் நாளை மறுநாள் (27-ந்தேதி) வரை 180 பஸ்கள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கோக்குவரத்து கழகம் மூலம் திருவண்ணா மலை திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்று வர பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பஸ்க ளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரிசலையும், கால நேர விரயத்தையும் தவிர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்து கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in, TNSTC செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 டீலக்ஸ் பஸ் களின் முன்பதிவு செய்து பயனடை யலாம்

    மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பஸ்களை கண்காணிக்கவும், முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப் பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • 24 மணி நேரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இன்று முதல் வரும் 12-ந் தேதி வரை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, சேலம், மதுரை, சென்னை, நாம க்கல், ராசிபுரம், திருப்பூர், சத்தி, பழனி மற்றும் கரூர் ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் ஈரோட்டில் இருந்து கம்பம், குமுளி, சிவகாசி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், வேலூர், புதுச்சேரி, செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்ல www.tnstc.in என்ற இணைய தளத்தின் வாயி லாக முன்ப திவு செய்து கொள்ளலாம்.

    கோபி, சத்தி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய ஊர்களில் இருந்து கோவை, ஈரோடு ஆகிய ஊர்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடு பஸ் நிலையத்திற்கு இன்று முதல் 12-ந் தேதி வரை தினமும் இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    • தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது.
    • பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை எந்த நேரமும் தொடர்புகொள்ளலாம். அதேபோல், ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 கட்டணமில்லா எண்கள் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அரசு போக்குவரத்து கழக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகைையயொட்டி கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன், கோவை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்-சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் போன்ற ெரயில்களில் முன்பதிவு, 100 சதவீதம் நிறைவு பெற்றது. பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற ஊர்களுக்கு தீபாவளி சிறப்பு ெரயில் அறிவிப்பு வெளியிட வேண்டும். பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரித்தால், பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.சிறப்பு ெரயில் அறிவிப்பு குறித்து கோரிக்கை வைக்கும் போது அதனை பரிசீலிக்கும் சேலம் கோட்ட அதிகாரிகள் எர்ணாகுளம், கொச்சுவேலி, ஆலப்புழா, திருவனந்தபுரம் என கேரளாவில் இருந்து சென்னைக்கு ெரயில் அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கோவை, திருப்பூர் மாவட்ட பயணிகளுக்கு இருக்கை கிடைக்காமல் போகிறது. எனவே இம்முறையும் அப்படியொரு அறிவிப்பு வெளியிடாமல் கோவையில் இருந்து ெரயில் புறப்படும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெங்களூருக்கு -5, திருச்சிக்கு - 5 என இயக்கப்பட உள்ளது
    • சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    ஆயூதபூஜை விஜயதசமி முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை என்பதால் பொது மக்கள் வசதிக்காக சென்னை பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    வேலூருக்கு-50 பஸ்கள், ஆற்காடு 10 பஸ்கள், ஓசூர்- 10 பஸ்கள், தர்மபுரி- 5 பஸ்கள், குடியாத்தம்-10, திருப்பத்தூர்-20 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதேப்போல் வேலூரிலிருந்து பெங்களூருக்கு -5 பஸ்கள், திருச்சிக்கு - 5 பஸ்கள் என இயக்கப்பட உள்ளது.

    மேலும் வருகின்ற 24 மற்றும் 25-ந்தேதிகளில் பொதுமக்கள் சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கு ஏதுவாக வேலூரிலிருந்து, சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேர்த்திருவிழா நாளை தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • அந்தியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் புதுபாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள்.

    திருவிழாவில் கலந்துகொண்டு மக்கள் சிரமம் இன்றி வந்து செல்ல ஈரோடு மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி குருநாதசாமி கோவில் திருவிழாவையொட்டி ஈரோடு, பவானி, குருவரெட்டியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, மேட்டூர், கவுந்தப்பாடி, பர்கூர், வெள்ளி திருப்பூர், எண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து அந்தியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது.
    • பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு அமாவாசை நாட்களும் சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உள்பட பல திரு விழா நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும். இதை தவிர பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

    பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு அமாவாசை நாட்களும் சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை வைகாசி மாத அமாவாசை வருகிறது.

    சிறப்பு பஸ்கள்

    இதையொட்டி சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர், தர்மபுரி ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்க சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நட வடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி சென்று வருகிறார்கள்.
    • குறிப்பாக யுகாதி, தசரா, சிவராத்திரி போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி சென்று வருகிறார்கள்.

    குறிப்பாக யுகாதி, தசரா, சிவராத்திரி போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    இங்கு வருகிற 22-ம் தேதி யுகாதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாதேஸ்வரன் சாமிக்கு தைலா அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் சேலம் மாவட்ட அய்யப்ப சேவா சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ மணிகண்டன் தலைமையில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    22-ந் தேதி யுகாதியன்று, காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை பெரிய தேரோட்டம் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே மாதேஸ்வர மலை கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    இதையொட்டி மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு செல்ல கர்நாடக மாநில சிறப்பு பஸ்களும், தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும், மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. 

    • முருகன் கோவில்களில் தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • மேலும் சேலத்தில் இருந்து வடலூருக்கும், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 6-ம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, பயணிகளின் வசதிக்காக, அரசுப் போக்குரவத்துக்கழக சேலம் கோட்டத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நாளை (5-ந் தேதி), தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் சேலத்தில் இருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி ஆகிய ஊர்களில் இருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடியில் இருந்து பழனிக்கும், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் இருந்து கபிலர்ம லைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும் சேலத்தில் இருந்து வடலூருக்கும், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 6-ம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • போக்குவரத்து கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.
    • தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கபட்டுள்ளன.

    கோத்தகிரி,

    தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இருந்து விடுமுறைக்காக மற்ற மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும் அதிக பயணிகள் செல்ல கூடும் என்பதால் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்க பட்டுள்ளன.

    இதில் விடுமுறைக்காக கோத்தகிரி பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்க்காக உரிய நேரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தாலும் தற்போது 5 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கோத்தகிரி போக்குவரத்து கிளை மேலாளர் ஞானபிரகாஷம் தெரிவித்துள்ளார்.

    மேலும் தீபாவளியன்று பயணிகள் அதிக அளவு பயணம் செய்ய நேரிட்டால் உடனடியாக இயக்க மேலும் சில பஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

    • தகவல்கள் தெரிந்து கொள்ள பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லவார்கள்.

    கோவை,

    தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லவார்கள்.

    அவர்களுக்கு வசதியாக நாளை முதல் 23-ந் தேதி வரை கோவையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மதுரைக்கு 100 பஸ்களும், தேனிக்கு 40 பஸ்களும், திருச்சிக்கு 50 பஸ்களும், சேலத்துக்கு 50 பஸ்களும் என மொத்தம் 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    போக்குவரத்து மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் பல்வேறு பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

    வழக்கமாக, போக்குவரத்து நெரிசலை தடுக்க கொடிசியாவில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால், இந்த ஆண்டில் சிறப்பு பஸ்கள் காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம் மற்றும் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    இதில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, தென்மாவட்டங்களுக்கும், சூலூர் பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சிக்கும், காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி வழியாக செல்லும் பஸ்களும், மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் செல்லும் பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    இந்த பஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதில் செல்வதற்காக காந்திபுரம் நகரப் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் பஸ் நிலையங்களின் தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் பஸ் நிலையங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பிள் அறிவிப்பு பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

    • வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மேலாண் இயக்குனர் தகவல்
    • வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட்., மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா 2022-ஐ முன்னிட்டு 28.08.2022 முதல் 09.09.2022 வரை சென்னை, திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதா கோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கும்,

    அதே போன்று மேற்கண்ட ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்தும் 28.082022 முதல் 09.09.2022 வரை இரவு, பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்). சார்பாக இயக்கப்பட உள்ளது.

    மேலும் மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர்.

    எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 7,689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
    • சென்னையில் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    சென்னை:

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்தே ஆர்வமுடன் பலர் விண்ணப்பித்தனர்.

    அந்த வகையில் 9.35 லட்சம் ஆண்கள், 12.67 லட்சம் பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு நாளை நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகா மையங்களில் வரும் 7,689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 7 ஆயிரத்து 689 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7,689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இந்நிலையில், குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை போக்குவரத்துறை இயக்குகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அறிவுறுத்தல்படி, மையங்களின் எண்ணிக்கை ஏற்ப நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு மையங்கள் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சிறப்பு பஸ்கள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×