search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhiur Gurunathasamy temple festival"

    • தேர்த்திருவிழா நாளை தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • அந்தியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் புதுபாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள்.

    திருவிழாவில் கலந்துகொண்டு மக்கள் சிரமம் இன்றி வந்து செல்ல ஈரோடு மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி குருநாதசாமி கோவில் திருவிழாவையொட்டி ஈரோடு, பவானி, குருவரெட்டியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, மேட்டூர், கவுந்தப்பாடி, பர்கூர், வெள்ளி திருப்பூர், எண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து அந்தியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×