search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு 180 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு 180 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 180 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • (OTRS) https://www.tnstc.in, TNSTC செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 டீலக்ஸ் பஸ்களின் முன்பதிவு செய்து பயனடையலாம்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் மதுரை கூட்டாண்மை வணிக அலுவலக மேலாண் இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழா நாளை நடப்பதையொட்டி பொது மக்கள் அதிகளவில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்வார்கள். எனவே பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பஸ்களும் மற்றும் சிறப்பு பஸ்களும் திருவண்ணா மலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு இன்று (25ந்தேதி) முதல் நாளை மறுநாள் (27-ந்தேதி) வரை 180 பஸ்கள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கோக்குவரத்து கழகம் மூலம் திருவண்ணா மலை திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்று வர பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பஸ்க ளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரிசலையும், கால நேர விரயத்தையும் தவிர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்து கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in, TNSTC செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 டீலக்ஸ் பஸ் களின் முன்பதிவு செய்து பயனடை யலாம்

    மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பஸ்களை கண்காணிக்கவும், முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப் பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×