search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "from Erode"

    • ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • 24 மணி நேரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இன்று முதல் வரும் 12-ந் தேதி வரை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, சேலம், மதுரை, சென்னை, நாம க்கல், ராசிபுரம், திருப்பூர், சத்தி, பழனி மற்றும் கரூர் ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் ஈரோட்டில் இருந்து கம்பம், குமுளி, சிவகாசி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், வேலூர், புதுச்சேரி, செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்ல www.tnstc.in என்ற இணைய தளத்தின் வாயி லாக முன்ப திவு செய்து கொள்ளலாம்.

    கோபி, சத்தி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய ஊர்களில் இருந்து கோவை, ஈரோடு ஆகிய ஊர்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடு பஸ் நிலையத்திற்கு இன்று முதல் 12-ந் தேதி வரை தினமும் இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    ×