search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தைப்பூசத்தை முன்னிட்டு நாமக்கல்லில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    தைப்பூசத்தை முன்னிட்டு நாமக்கல்லில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • முருகன் கோவில்களில் தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • மேலும் சேலத்தில் இருந்து வடலூருக்கும், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 6-ம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, பயணிகளின் வசதிக்காக, அரசுப் போக்குரவத்துக்கழக சேலம் கோட்டத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நாளை (5-ந் தேதி), தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் சேலத்தில் இருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி ஆகிய ஊர்களில் இருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடியில் இருந்து பழனிக்கும், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் இருந்து கபிலர்ம லைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும் சேலத்தில் இருந்து வடலூருக்கும், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 6-ம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×