search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In government school"

    • தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த என்.கந்தம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சியினை செய்து காண்பித்தனர்.

    பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

      ஓமலூர்:

      சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கட்டபெரியாம்பட்டி கிராமத்தில் உள்ள நச்சுவா யனூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல் பட்டு உள்ளது. இதில், தற்போது 50-க்கும் மேற் பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றிலும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கிராம பொது நிலம் உள்ளது. இங்கு அம்மன் கோவிலும் உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியை சுற்றிலும் கடந்த ஆறு மாதமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், கிராமத்தில் பெய்யும் மழைநீரும் கசிவுநீரும் வந்து இங்கே தொடர்ந்து தேங்கி நிற்கிறது.

      அங்கு மரங்கள் இருப்ப தால், மரத்தில் இருந்து உதிரும் இலைகள் தண்ணீ ரில் அழுகி அந்த பகுதி துர் நாற்றம் வீசுகிறது. மேலும், ஈக்கள் கொசுக்கள் தொல் லையும் அதிகரித்து காணப் படுகிறது. இதனால், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

      அதேபோல கிராமத்தின் பொது காரியங்கள், திரு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் இந்த இடத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மருத்துவ முகாம் கள், கால்நடை சிகிச்சை முகாம் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற முடி யாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் கிராம மக்களும் அவதிப்படுகின்றனர்.

      மேலும், அங்குள்ள வாக்குச்சாவடி மைய பழைய கட்டிடம் மிகவும் பாதிப்ப டைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், சுவர்களும், ஓடுகளும் உடைந்து விழுந்து வருகிறது.அதனால், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், தண்ணீர் செல்லும் கால் வாய்களின் ஆக்கிரமிப்பு களை அகற்றி குட்டைகளில் தண்ணீர் தேக்கி வைக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      ×