search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stagnant rain water"

    • தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது.
    • பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் சென்று விடிய, விடிய அந்த பகுதிகளில் ஆய்வு நடத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. தூத்துக்குடி பி.அன்.டி. காலனி பகுதியில் உள்ள சில தெருக்களில் மழை நீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் சென்று ஆய்வு பணிகளை தொடங்கியவர் இரவு முழுவதும் விடிய, விடிய அந்த பகுதிகளில் சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்தினார்.

    அப்போது மழை நீர் வடிவதற்கு வசதியாக வடிகால்களில் அடைப்புகள் இருந்ததை கண்டு அதனை உடனடியாக அகற்றியும் வடிகால் இல்லாத தெருக்களில் புதிதாக பணிகள் முடிந்த வடிகால்களில் நீர் வருவததற்கு பாதை அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார். மேலும் அந்த பகுதியில் வடிகால்கள் இல்லாத இடங்களில் வரும் நாட்களில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். ஆய்வின்போது கவுன்சிலர் இசக்கிராஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

      ஓமலூர்:

      சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கட்டபெரியாம்பட்டி கிராமத்தில் உள்ள நச்சுவா யனூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல் பட்டு உள்ளது. இதில், தற்போது 50-க்கும் மேற் பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றிலும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கிராம பொது நிலம் உள்ளது. இங்கு அம்மன் கோவிலும் உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியை சுற்றிலும் கடந்த ஆறு மாதமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், கிராமத்தில் பெய்யும் மழைநீரும் கசிவுநீரும் வந்து இங்கே தொடர்ந்து தேங்கி நிற்கிறது.

      அங்கு மரங்கள் இருப்ப தால், மரத்தில் இருந்து உதிரும் இலைகள் தண்ணீ ரில் அழுகி அந்த பகுதி துர் நாற்றம் வீசுகிறது. மேலும், ஈக்கள் கொசுக்கள் தொல் லையும் அதிகரித்து காணப் படுகிறது. இதனால், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

      அதேபோல கிராமத்தின் பொது காரியங்கள், திரு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் இந்த இடத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மருத்துவ முகாம் கள், கால்நடை சிகிச்சை முகாம் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற முடி யாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் கிராம மக்களும் அவதிப்படுகின்றனர்.

      மேலும், அங்குள்ள வாக்குச்சாவடி மைய பழைய கட்டிடம் மிகவும் பாதிப்ப டைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், சுவர்களும், ஓடுகளும் உடைந்து விழுந்து வருகிறது.அதனால், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், தண்ணீர் செல்லும் கால் வாய்களின் ஆக்கிரமிப்பு களை அகற்றி குட்டைகளில் தண்ணீர் தேக்கி வைக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • கலெக்டர் பைக்கில் சென்று பார்வையிட்டார்
      • நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்

      ஜோலார்பேட்டை:

      திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை சாலையில் ரெயில்வே தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தின் வழியாகத்தான் திருப்பத்தூர் வந்து செல்ல வேண்டும். திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தரைப்பாலத்தில் எப்போது தண்ணீர் தேங்கிக்கொண்டே இருக்கும்.

      இதனால் அவ்வப்போது மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரெயில்வே தாரைப்பாலத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் தேங்கி நின்றது.

      அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் பள்ளியிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

      அதைத்தொடர்ந்து நேற்று மாலை கலெக்டர் அமர்குஷ்வாஹா அப்பகுதிக்கு சென்று தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரைப்பாலத்தில் தண்ணீர் தடையின்றி செல்லவும், அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அப்பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அந்த இடங்களுக்கு கார் செல்ல முடியவில்லை. இதனால் காரை நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டு கலெக்டர் அதனை ஒட்டியவாறு சென்று அங்கு கால்வாய் ஏற்படுத்தினால் தண்ணீர் தடையின்றி செல்லுமா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

      இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்முரளி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

      திருவாரூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் மழைநீர் தேங்கி நின்றது. இதை கடந்து செல்ல முடியாமல் பெண்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

      திருவாரூர்:

      டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பெய்து வரும் கனமழையால் அவதிப்பட்டு வருகிறார்கள். புயலால் வீடுகளை இழந்த மக்கள் , வீட்டு சுவரும் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பரிதவிப்பில் உள்ளனர்.

      கடந்த 21-ந் தேதி பெய்த மழையில் பட்டுக்கோட்டை சிவகொல்லையில் வீட்டு சுவர் இடிந்து 4 பேர் பலியானார்கள். இதனால் சேதமான வீட்டு சுவரால் வீட்டில் தங்க முடியாமல் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறார்கள்.

      இந்த நிலையில் திருவாரூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

      இந்த மழையால் திருவாரூர் நகராட்சி 30-வது வார்டு பகுதியான சாப்பாவூரில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல முடியாமல் பெண்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

      திருவாரூருக்கு வர வேண்டும் என்றால் தியானபுரம், விளமல் வழி யாக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டும். இதனால் சாப்பாவூர் கிராம மக்கள், தங்களது பகுதியில் ஏணி வைத்து இறங்கி மழை தண்ணீரில் நடந்து செல்கிறார்கள்.

      திருவாரூர்- தஞ்சை ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்த மழையால் எங்களது குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

      இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது மாற்று ஏற்பாடாக ஏணி வைத்து அதில் இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் குளம் போல் உள்ள தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      இவ்வாறு அவர்கள் கூறினர். 

      ×