search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development"

    • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியனில் ரூ.53.85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி யூனியன் தினைக்குளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் தினைக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப பணிகளை உரிய காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான காம்பவுண்ட் சுவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டதுடன் பள்ளி வளாகத்தை சுற்றி உட்புறப் பகுதியில் காம்பவுண்டு சுவரில் மாணவ- மாணவிகள் பார்த்து பயன்பெறும் வகையில் கல்வி முன்னேற்றத்திற்கான விழிப்பு ணர்வு ஓவியங்கள் வரைந்துள்ளதை பார்வையிட்டு பாராட்டினார்.

    இதே போல் ஒவ்வொரு பள்ளியிலும் காம்பவுண்டு சுவர் உட்புறத்தில் பொது அறிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அமைத்து மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பின்னர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார்.தினைக்குளம் ஊராட்சியில் 15-வது நிதி குழு திட்டத்தின் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தி ற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார். அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராம சாலையின் பக்கவாட்டுகளில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன் கணேஷ் பாபு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் அருண் பிரசாத், ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது ஆய்வு செய்தார்.
    • ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்ததுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் தாரேஸ் அகமது பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டறிந்தார்.

    முன்னதாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பார்த்திபனூர் பகுதியில் பயனாளிகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் மாசு நீர் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருவதையும், அரியனேந்தல் ஆதிதிராவிடர் காலனியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், இந்திரா நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் செங்குத்து உறிஞ்சிக்குழி பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.

    நெல்மடுவலூர் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளையும், போகலூர் ஊராட்சி ஒன்றியம், பூவிளத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் தொலைவில் வணங்கானேந்தல் வழியாக பூவிளத்தூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், உதவி இயக்குநர் (தணிக்கை) அருள் சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், ரவி, போகலூர் செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர்கள் அழகேசன், கல்யாண சுந்தரம், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அறிவியல் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியில் கூறினார்.
    • அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம் என்றும் பேசினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எஸ்.எஸ்.எல்.வி. டி2 ராக்கெட் வெற்றிகரமாக ஏவியதன் மூலம் இனி வணிக ரீதியான ராக்கெட்டுகளை ஏவ முடியும். நிலவுக்கு செயற்கை கோள்களை அனுப்ப சோத னைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்தவுடன் நிலவுக்கு ராக்கெட் மூலம் செயற்கைகோள் ஏவப்படும்.

    ஆன்மீகமும், அறிவி யலும் முக்கியமானது. ஆன்மீகத்தில் அறிவிய லையும், அறிவியலில் ஆன்மீகத்தையும் பார்க்க கூடாது. இவற்றின் மூலம் மக்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றார்.

    அரசு பள்ளியில் படிப்பது இழிவு கிடையாது. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு சளைத்தது கிடையாது. நான் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்து ரையாடிய போது அவர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என்பதை கண்டறிந்தேன்.

    அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம். குறிப்பிட்ட தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் பள்ளி அல்ல, மாணவர்கள் போதிய பயிற்சி எடுக்காததே காரணமாகும். ஆண்டு தோறும் அறிவி யல் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு குறையாது. அறிவியல் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் ஆகும். புது, புது முயற்சிகளை மேற்கொண்டால் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.
    • மதுரையில் நடந்த மாநாட்டில் தலைவர்கள் பேசினார்கள்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு நடந்தது.

    இதில் தி.க. தலைவர் வீரமணி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் அழகிரி, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. கோ.தளபதி, பூமிநாதன் மற்றும் தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீ.வீரமணி பேசியதாவது:-

    சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழகம் வளம் மிக்க மாநிலமாக மாறி இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் பா.ஜ.க. பிடிவாதம் பிடிக்கிறது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டிருப்பதால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி ஈரோட்டில் பிரசாரம் தொடங்கப்படும்.

    அதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டி.ஆர்.பாலு எம்.பி. பேசுகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். குழந்தையை பெற்றெடுத்து ஊனமாக்கியது போல் இந்த திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு பா.ஜ.க. துரோகம் செய்கிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாது. சேது சமுத்திர திட்டத்திற்கு மத சாயம் பூசக்கூடாது என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசினர்.

    • தேவிபட்டினத்தில் ரூ.1.47 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சிகிச்சை பிரிவிற்கான கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு சிகிச்சை வழங்கும் பகுதிக்குச் சென்று சிகிச்சை வழங்குவது குறித்து கேட்டறிந்தவுடன் சிகிச்சை பெற வந்த மக்களிடம் காலதாமதமின்றி சிகிச்சை வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

    மரைக்காயர் ஊரணியில் ரூ 15.72 லட்சம் மதிப்பீட்டில கரை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளும் பொழுது இந்த ஊரணிக்கு வரக்கூடிய மழைநீருக்கான வரத்து கால்வாய்களையும் சீரமைத்து ஊரணியில் தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்கும் வகையில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து தேவிபட்டினம், காந்தி நகர் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ2.77 லட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டி வருவதை பார்வையிட்டு பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்திட பயனாளிக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து தேவிபட்டினம் ஊராட்சியில் ரூ11.27 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ரூ8.83 லட்சம் மதிப்பீட்டில் கிணறு, காமராஜர் தெருவில் ரூ9.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினையும் பார்வையிட்டு பணியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    படையாச்சி காலனியில் ரூ5.23 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருவதையும், மேலப்பள்ளிவாசல் பகுதியில் ரூ13.09 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படு வதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

    சோலைநகர் பகுதியில் ரூ6.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை, பூவாடை பகுதியில் ரூ24.40 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மனித சக்தியின் மூலம் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாத புரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் அர்ஜுனன், ரவி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜன்னத்து யாஸ்மின், தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
    • பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    திருவையாறு:

    திருவையாறு ஒன்றியம் மருவூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
    ரூ.6.5 லட்சத்தில் நெல் உளர்த்தும் களம், ரூ.11 லட்சத்தில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவிகள்
    கழிப்பறை 4.9 லட்சம், தொகுப்பு வீடுகள் மற்றும் தனிநபர் உறுஞ்சிகுழி அமைத்தல் பணி ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த்
    பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதை தொடர்ந்து வடுகக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
    ரூ.3 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணி, ரூ.25.65 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம்,

    ரூ.13.65 லட்சத்தில் கனிம மற்றும் சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, ஒன்றிய பொறியாளர்கள் விஜயகுமார், மணி கண்டன்,
    ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரவணச் செல்வன், ஊராட்சிமன்ற த்தலைவர்கள் மணிகண்டன், விஜயபாஸ்கர்,
    ஊராட்சி செயலர்கள் பரிமேலழகன், நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராம ஊராட்சியின் வளர்ச்சி குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    இதில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, முது குளத்தூர், மண்டபம் ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-அனைத்து ஊராட்சி களிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த திட்டங்களை தீர்மானித்து அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் பணிகள் நடை பெறும். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும், பொது நிதியில் இருந்து எடுக்கப்படும் வேலைகளையும் விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உரிய முறையில் குடிநீரில் குளோரிநேசன் செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க வாட்டர் மீட்டர் பொருத்த வேண்டும்.

    தெரு விளக்குகள் அலைபேசி மூலம் செயல்படுத்தும் முறை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளன. 2023-24 கிராம வளர்ச்சி திட்டம் தயார்செய்யும் போது தண்ணீர் மேலாண்மை குறித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகளில் பயன்பாடற்ற மின் இணைப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தேவையான மருத்துவ உதவிகளை பெற்று வழங்க வேண்டும். பொதுவாக ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு செயல்பட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்களது பணி முக்கியமான ஒன்றாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட வங்கிகளுக்கான வருடாந்திர கடன் திறன் ரூ.24 ஆயிரத்து 790 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.24 ஆயிரத்து 790 கோடி மதிப்பில் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிதியாண்டு தொடங்குவதற்கு முன் உத்தேச கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன்படி அடிப்படையில் இறுதி கடன் அறிக்கையை வங்கிகள் வெளியிடும். வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் வருகிற 2023-24-ம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்ட வங்கிகளுக்கான வருடாந்திர கடன் திறன் ரூ.24 ஆயிரத்து 790 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 63.43 சதவீதம் அதிகம். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரியான கருணாகரன் முன்னிலையில் நபார்டு வங்கியின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது.

    கலெக்டர் வினீத் வெளியிட, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் பெற்றுக்கொண்டார். நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.24 ஆயிரத்து 790 கோடி மதிப்பில் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.8 ஆயிரத்து 815 கோடியே 31 லட்சமும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.13 ஆயிரத்து 417 கோடியே 21 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஏற்றுமதி கடன் வழங்க ரூ.682½ கோடியும், கல்விக்கடன் வழங்க ரூ.328 கோடியே ௯௫ லட்சமும், வீட்டுவசதிக்கு ரூ.357¾ கோடியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.435 கோடியே 7 லட்சமும், மகளிர் குழுவினர் உள்ளிட்ட மற்ற துறையினருக்கு ரூ.708 கோடியே 19 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக உள்ளிட்டமைப்பு வசதிக்கு ரூ.45 கோடியே 9 லட்சம் என மொத்தம் ரூ.24 ஆயிரத்து 790 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
    • திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தெரிவித்தாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    ஆய்வு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, சப்- கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
    • 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கூறியதாவது,

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் அரசு இடங்கள், பள்ளிகள், பூங்காக்கள், குப்பை கிடங்குகள், குளம், ஆறு, வாய்க்கால் கரை பகுதிகளில் இந்தாண்டு நகராட்சிக்கு வருமானம் தரக்கூடிய வகையிலும், இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம், ஸ்கார்டு தொண்டு நிறுவனம் இணைந்து இப்பணியை மேற்கொள்ளவுள்ளது.

    இப்பணியானது ஒரு மாதத்தில் முடிவடையும். தொடர்ந்து 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும் என்றார்.

    இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் மரக்கன்றை நட்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், திட்ட அலுவலர் திருலோகசந்தர் மற்றும் அலுவலர்கள் கனகதுர்கா, திலகவதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார்.
    • தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி, செட்டிநாடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.138.95 லட்சம் மதிப்பீட்டில் செங்கமளத்தான் ஊரணியில் நடைபெற்று வரும் மேம்பாடு மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாகவும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் உபகரணங்களான மரம் அறுக்கும் எந்திரம், சவுக்குக்கட்டை, சாரக்கயிறு, தயார் நிலையில் உள்ள மணல் மூட்டைகள் உள்ளிட்டவைகளும், தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, ரெயின்கோட்டுகள், தலைக்கவசம், ஒளிரும் சட்டை, பிளாஸ்டிக் தார்பாய் போன்ற உபகரணங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பள்ளித்தம்மம் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துப் பெட்டகங்கள் மற்றும் இயல்முறை சிகிச்சைகள் தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும் விதம் மற்றும் முறைகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், சிறுவத்தி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், விஜயபுரம் சமத்துவபுரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ள சமுதாயக்கூடம், மணவயல் ஊராட்சி, கோட்டூர் கிராமத்தில் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிர் அடிக்கும் தளம் தொடர்பான கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோன்று திருமணவயல் ஊராட்சி, தேவகோட்டை நகராட்சி, செட்டிநாடு ஊராட்சி பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் லால்ேவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    • கட்டாலங்குளம் ஊராட்சியில் கிராமபுற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி நடைபெற்றது.
    • தேர்ச்சி பெற்ற 30 பெண்களுக்கு பஞ்சாயத்து அலுவலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள கட்டாலங்குளம் ஊராட்சியில் கிராமபுற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி நடைபெற்றது. இதில் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    அழகு கலை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 30 பெண்களுக்கு பஞ்சாயத்து அலுவலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் ஜேசுபால்ராயன், துணைத் தலைவர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு வருகிற 20- ந் தேதி பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்படும் என்றும், பஞ்சாயத்து மூலம் கிராமப்புற பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறினர்.

    ×