search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    செங்கமளத்தான் ஊரணியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை கண்காணிப்பு அலுவலர் லால்வேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்ளார்.

    வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார்.
    • தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி, செட்டிநாடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.138.95 லட்சம் மதிப்பீட்டில் செங்கமளத்தான் ஊரணியில் நடைபெற்று வரும் மேம்பாடு மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாகவும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் உபகரணங்களான மரம் அறுக்கும் எந்திரம், சவுக்குக்கட்டை, சாரக்கயிறு, தயார் நிலையில் உள்ள மணல் மூட்டைகள் உள்ளிட்டவைகளும், தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, ரெயின்கோட்டுகள், தலைக்கவசம், ஒளிரும் சட்டை, பிளாஸ்டிக் தார்பாய் போன்ற உபகரணங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பள்ளித்தம்மம் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துப் பெட்டகங்கள் மற்றும் இயல்முறை சிகிச்சைகள் தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும் விதம் மற்றும் முறைகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், சிறுவத்தி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், விஜயபுரம் சமத்துவபுரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ள சமுதாயக்கூடம், மணவயல் ஊராட்சி, கோட்டூர் கிராமத்தில் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிர் அடிக்கும் தளம் தொடர்பான கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோன்று திருமணவயல் ஊராட்சி, தேவகோட்டை நகராட்சி, செட்டிநாடு ஊராட்சி பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் லால்ேவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×