search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Depression"

    • 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள்.
    • பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ''பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். அது தெரிந்தோ அல்லது அவர்களுக்கே தெரியாமலோ...'' என்கிறார் உளவியல் மருத்துவரான லீனா ஜஸ்டின்.குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.

    * உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?

    * ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?

    * தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ

    நடக்கிறதா?

    * உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?

    * பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?

    * சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,

    * உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?

    மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.பெற்றோர் செய்ய வேண்டியவைகல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

    அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து காத தூரம் பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.

    சிகிச்சைகள்...

    நோயின் தீவிரத்தைப் பொறுத்து கவுன்சிலிங் செய்யப்படும். Cognitive behavioral therapy என்னும் எண்ணங்களை சரிபடுத்தும் சிகிச்சை மற்றும் Sensory Enrichment Therapy போன்ற சிகிச்சைமுறைகள் குழந்தையை முழுவதுமாக மனப்பதற்றத்திலிருந்து மீட்டெடுக்கும்!

    • கிருஷ்ணமூர்த்தி அதே பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
    • கிருஷ்ண சாமி மட்டும் மாதம்பட்டி யில் கொத்தனார் வேலை செய்து கொண்டு வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மாதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50) அந்த பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு மகள் மகன் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி சென்று விட்டார். கிருஷ்ணசாமியின் மகனும் மனைவி கோமதியும் மாதம்பட்டு பகுதியிலிருந்து பெங்களூரு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். 

    இந்நிலையில் கிருஷ்ண சாமி மட்டும் மாதம்பட்டி யில் கொத்தனார் வேலை செய்து கொண்டு வீட்டில் தனியாக இருந்து வந்தார். இவருக்கு முன்னதாகவே குடிபழக்கம் இருந்து வந்து ள்ளது. இதனால் அடி க்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார். நேற்று மீண்டும் கிருஷ்ணசாமிக்கு வயிற்றுவலி அளவுக்கு அதிகமாக ஏற்பட்டு வலியால் துடித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணசாமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று கிருஷ்ணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வை த்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிக வலைத்தள பயன்பாடுகள் தற்கொலைக்கு வித்திடக் கூடியவையாக இருக்கின்றன.
    • தற்கொலை செய்து கொள்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள்.

    தற்கொலை நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் பேர் தற்கொலையால் செய்துகொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 15 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 2-வது காரணமாக இருக்கிறது. நம் நாட்டில் லட்சத்துக்கு, 16 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 3 சதவீதம் தற்கொலைகள். இதில் 40 சதவீதம் பேர் ஆண்கள், 60 சதவீதம் பேர் பெண்கள். தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் 20-ல் ஒருவர் இறந்து விடுகிறார். தற்கொலை எண்ணம் ஏற்பட முக்கியக் காரணம் மனநோய்களும் நரம்பு கோளாறுகளும்தான்.

    அடுத்ததாக மது, போதைப்பொருள் பழக்கம், புகைக்கும் பழக்கம், தகாத பாலுறவு, சூதாடுதல், திருட்டு, சமூகவிரோத குணம், கடன் வாங்குதல் உள்ளிட்டவை தற்கொலையை தூண்டுகின்றன. இதைத்தவிர வேலையின்மை, குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, தேர்வில் தோல்வி, வேலை செய்யும் இடங்களில் துன்புறுத்தல், குடும்பங்களில் சித்ரவதை, இளம்வயது திருமணங்கள், பாலியல் தொந்தரவுகள் ஆகியவையும் தற்கொலைக்கு காரணங்கள்தான்.

    அதிகச் செல்போன், வலைத்தள பயன்பாடுகள்கூட தற்கொலைக்கு வித்திடக் கூடியவையாக இருக்கின்றன. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற கிடைக்கும் எந்தச் சூழ்நிலையையும் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறார்கள்.

    தற்கொலைகளைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேச தற்கொலை தடுப்புக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ந் தேதியை உலகத் தற்கொலை தடுப்பு நாளாக அனுசரித்து வருகின்றன. 2003 முதல் இது கடைபிடிக்கப்படுகிறது. குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளை பெருமளவு தடுக்க முடியும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    • குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள்.
    • குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

    நவீன தொழில்நுட்ப காலத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். வயதிற்கும், மனவளர்ச்சிக்கும் தொடர்பு இல்லாத அளவிற்கு பல நேரங்களில் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உறவு குறித்த புரிதலோ, வாழ்வின் நடைமுறை சிக்கல்களோ அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

    குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள். இதனால் எது சரியானது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. ஏதோ ஒரு கோபத்தில் லேசாக கண்டித்தாலே தாங்கி கொள்ள முடியாத மனநிலைக்கு ஆளாகின்றனர்.

    குழந்தை எது கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறார்கள். குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த இடத்தில் தான் குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. தான் நினைத்ததை அடைய அடம் பிடிக்கும் குழந்தைகளால் யாரோடும் இணங்கி செல்லவோ, விட்டுக் கொடுத்து போகவோ முடிவது இல்லை.

    குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து தான் எதையும் முதலில் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் நம்பிக்கையோடு அணுகும் வகையில் பெற்றோரின் செயல்பாடு இருக்க வேண்டும். அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் எந்த பிரச்சினை என்றாலும் தீர்வு கேட்டு அணுகுவார்கள். மனரீதியாக சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்து தேற்ற முடியும். தோல்வியே கண்டாலும் தொடர்ந்து முயன்று வெற்றி வீரர்களாக வலம் வர குழந்தைகளை தயார்படுத்த முடியும்.

    • மனதில் குழப்பம் ஏற்படும் போது செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
    • மனஇறுக்கத்தை உடைக்க நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.

    மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு திறமையும், ஆற்றலும் பெற்று உள்ளனர். அது என்ன என்று கண்டறிந்து வாழ்க்கையில் பலரும் உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஆனால் எதிர்பாராத நிகழ்வுகளில் எடுக்கும் சில முடிவுகள் சிலரது வாழ்க்கையின் திசையை அடியோடு மாற்றி விடுகிறது.

    எனவே எந்த நிலையிலும் நிதானமாக, மன சமநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆனாலும் பல நேரங்களில் நிதானம் தவறி ஆத்திரத்தில், விரக்தியின் உச்சத்தில் செய்யும் செயல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதாவது தங்களின் உயிரை தானே மாய்த்து கொள்ளுதல் அல்லது மற்றவரின் உயிரை பறிப்பதாகவும் அமைந்து விடுகிறது.

    இதற்கு உளவியல் சிக்கலே காரணமாக உள்ளது. ஒரு பிரச்சினையில் சிக்கி தவித்து, அதில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் சிலர் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். அது தற்கொலையாக, கொலையாக மாறி விடுகிறது.

    தேசிய குற்ற ஆவண காப்பகம்

    உளவியல் சிக்கல்களை சந்திக்கும் நபர்கள் வேறுபட்ட சமூக, பொருளாதார, வாழ்வியல் நிலைகளில் இருக்கிறார்கள். அவர்க ளின் தவறான முடிவுகள், தனிப்பட்ட அவர்களது குடும்பத்தை மட்டுமின்றி சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே கொலை, தற்கொலை என்பது சமூகத்தில் தடுக்க முடியாத பெரும் நோயாக மாறி விட்டது. அதன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (2021-ம் ஆண்டு) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

    அந்த வகையில், நாட்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில், மராட்டியத்தில் 22,207 பேர், தமிழ்நாட்டில் 14,965 பேர், மத்திய பிரதேசத்தில் 14,965 பேர் தற்கொலை செய்தனர். அதாவது 2021-ல் ஒரு லட்சம் பேரில் சராசரி 26 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

    கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 29,272 கொலைகள் நடந்து உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் 3717 பேர், பீகாரில் 2799 பேர், மராட்டியத்தில் 2330 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1686 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். 2022-ம் ஆண்டு 7 மாதங்களில் மட்டும் 940 கொலைகள் நடந்து உள்ளன.

    தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக 6,064 குற்றங்களும், பெண்களுக்கு எதிராக 8,501 குற்றங்களும், முதியவர்களுக்கு எதிராக 1841 குற்றங்களும். பட்டியலினத்தவருக்கு எதிராக 1377 குற்றங்களும், பழங்குடியினருக்கு எதிராக 39 குற்றங்களும் நடைபெற்று உள்ளது.

    தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையே மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதில் கவலை கொள்ளும் அளவுக்கு 18 முதல் 45 வயதினர் வரை தற்கொலை அதிகமாக உள்ளது. இது போல் குழந்தைகளை கொன்று குடும்பத்துடன் தற்கொலை செய்வதும் சமூகத்தில் விபரீத முகத்தை காட்டுவதாக இருக்கிறது.

    காரணம் என்ன?

    பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் மேம்பட்ட நகரமான மும்பையில் தான் நாட்டிலேயே தற்கொலைகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் குடும்ப பிரச்சினை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, தொழில் பிரச்சினைகள், தோல்வி, மது, போதை பழக்கம், நோய் போன்றவை தற்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

    எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அதில் இருந்து மீண்டு வர ஏராளமான வழிகள் உள்ளன. ஆனாலும் உளவியல் ரீதியாக சமூகத்தில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்பவர்கள் தன்னையே அழித்துக் கொள்ளும் விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். அது போல் சமூகத்தின் மீதான ஆத்திரத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதற்கு அவர்களின் உளவியல் சிக்கல்களே காரணமாக இருக்கிறது.

    (பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு பதிலான வாழ்வில் இருந்து விடுபடுவதில் எந்த பயனும் இல்லை. எனவே பிரச்சினை களை எதிர்கொள்ள இளம்வயதினருக்கு கற்றுத் தர வேண்டும். நல்லவை, கெட்டவைகளை எடுத்து கூறி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இதுவே தற்போதைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

    கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும் என்ற மனநிலை இளைஞர்களிடம் பரவிக் கிடக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்வில் தோல்வி, அவமானம், தடைகள், இழப்பு களை தாங்கியும் தாண்டியும் தான் முன்னேறி செல்ல வேண்டியது இருக்கிறது. அதற்குரிய மனநிலையை வளர்த்து கொண்டால் துயரமான முடிவுகளை சந்திக்கும் நிலை ஏற்படாது.)

    எனவே எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவும், தோல்வியை கடந்து செல்லவும் உளவியல் ரீதியாக தயார் ஆகி விட்டால் மனித வாழ்வு மேம்பட்டதாக மாறி விடும்.

    மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள்

    எந்த ஒன்றும் இறுதியானது அல்ல. எதில் இருந்தும் மீண்டு வர முடியும். எந்தவிதமான இழப்புகளையும் ஈடுசெய்ய மாற்று வழிகள் உள்ளன. மன உளைச்சல் ஏற்படும் போது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனஅழுத்தம் நீடித்தால் தூக்கமின்மை, ரத்த அழுத்தம், சோர்வு உள்பட உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு நோயில் தள்ளி விடும்.

    எனவே மனதை சம நிலையில் வைத்துக் கொள்ள புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சிந்தனை, செயல்பாடு மற்றும் வாழ்க்கை நடைமுறையிலும் மாற்றம் செய்தால் மனஉளைச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

    மனஅழுத்தம் தோன்றினால் கார்ட்டிசோல் என்ற ஹார்மோன் உடலில் அதிகமாக சுரக்கும். ஆனால் சிரிக்கும் போது கார்ட்டிசோல் சுரப்பு குறைந்து விடும். மூளையை தூண்டுவதற்கு உதவும் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். எனவே சிரிப்பு என்பது அறிவியல் ரீதியான மருந்து என்பதை உணர வேண்டும்.

    மனநல ஆலோசனை

    உடற்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சி, இசை, சினிமா, பொழுது போக்கு, விளையாட்டு மட்டுமின்றி சரியான நேரத்துக்கு சாப்பிடு வது, 8 மணி நேரம் தூங்குவது போன்றவற்றை கடை பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் மன அழுத்தம் குறையும். எந்த கேள்வியையும் புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும். கோபத்தோடும், வெறுப்போடும் எதை அணுகினாலும் தோல்வியே கிடைக்கும். எனவே பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் பதற்றமின்றி நிதானமாக செயல்பட வேண்டும்.

    அவசரத்தில் எதையும் பேசி விடவோ, எந்த முடிவுகளையும் எடுத்து விடவோ கூடாது. மனஇறுக்கத்தை உடைக்க நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். மனம் குழப்பம் ஏற் படும் போது தங்களுக்கு பிடித்த லட்சிய வாசகங்களை நினைவில் கொண்டு தைரியமாக செயல்பட வேண்டும். தீவிர மனஅழுத்தம் ஏற்பட்டால் உரிய மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மனதில் குழப்பம் ஏற்படும் போது செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே பிரச்சினைகள் ஏற்படும் போது அதை சரியான வகையில் அணுகி தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு மாறாக பிரச்சினைகளில் மூழ்கி குழப்பிக் கொண்டால் முடிவுகள் விபரீதமாகவே இருக்கும். எனவே எதையும் தீவிரமாக ஆராய்ந்து செயல்பட்டால் யாருக்கும் சிக்கல் இன்றி மற்றவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நீரோடை போல் வாழ்வு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    • பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
    • சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    இன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர். ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

    எனவே, ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், உறவினருடன் சுமுக உறவு இல்லாதது என பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பண நெருக்கடி, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.

    இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.

    நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

    சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காத போது, துவண்டு விடுகின்றனர்.

    மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.

    • மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.
    • சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.

    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன:

    * குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

    * பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

    * நட்பில் உண்டாகும் மனவருத்தம்

    * குடும்பங்கள் பிரிந்து விடுதல்

    * மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

    * பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

    * அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

    * குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

    * மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

    * பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

    * பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்

    * உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

    இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

    • 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள்.
    • பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ''பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.

    முன்பெல்லாம் குழந்தைகளை, குழந்தைகளாகவே வளரவிட்டார்கள். ஆனால், இப்போது அப்படியா? அவர்களை என்ஜினியராக்கப் போகிறேன், டாக்டராக்கப் போகிறேன் என்ற பெருமையோடு பெற்றோர் அவர்களிடம் விலையாகக் கேட்பது குழந்தைகளின் குழந்தைமையை!

    நம் பிள்ளைகள் படிப்பதற்காகவும் ஜெயிப்பதற்காகவும் மட்டுமே பிறக்கவில்லை. உலகின் அத்தனை மகிழ்ச்சிகளையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள் அவர்கள். அதற்கான உரிமைகள் உண்டு.

    எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளின் அறிவுத் திறனறிந்து அதற்கேற்ற கல்வித் திட்டத்தில் சேர்க்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். சமச்சீர் கல்வியில் படிக்கவே சிரமப்படும் குழந்தையை, CBSE அல்லது ICSE படித்தால்தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும் என்று தாங்களாகவே முடிவெடுத்து, அந்தக் குழந்தையையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது எத்தனை பெரிய பிழை?

    முயலாமலிருப்பது தவறுதான். ஆனால், பெரும்பான்மையான குழந்தைகள் தம் இயலாமையோடு போராடிக் கொண்டிருப்பதை கண்டிப்பாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்.தனக்கு கடினமாக இருக்கும் பாடங்களை படிப்பதில் அவர்கள் படும் சிரமங்களையும், அதை எதிர்கொள்ள இயலாமலும், தன்னுடைய பயத்தை பகிர்ந்து கொள்ள முடியாமலும் அந்தக்குழந்தை எதிர்கொள்ளும் அன்றாட சவால்களை பெரியவர்களான நாம் சரியாக கவனிப்பதில்லை.

    பிடிக்காத செயலை, அது குழந்தையின் எதிர்காலத்துக்கு நன்மை தருவதாக இருந்தாலும் செய்யச் சொல்லி வற்புறுத்தும்போது குழந்தைகள் வாடித்தான் போகிறார்கள். கொஞ்சமும் இளைப்பாற நேரமின்றி, பள்ளி முடிந்ததும், மியூசிக், டான்ஸ், ட்ராயிங் என ஏதோ ஒரு பயிற்சி வகுப்பு, பின்னர் டியூஷன் என்று ஓடிக்கொண்டே இருப்பதால், பிள்ளைகள் விளையாட ஏங்குவதை யாரும் புரிந்து கொள்வதில்லை.

    மனம் களைப்படையாமல் இருக்க, வீடியோ கேம் விளையாண்டு தனிமையை மறக்க முயற்சிப்பதால் ஏற்படும் விளைவு, மனப்பதற்றம். தன்னால் படிக்க முடியாது, எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது என்ற விரக்தியில் அடுக்கடுக்கான எதிர்மறை எண்ணங்கள் அவனை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் அதீத எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.

    இவர்களில் பெரும்பாலும் பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள். தமக்கென்று ஒரு நண்பர் கூட்டம் சேர்த்து கொள்வதும் அதில் தன் நிலையை ஒப்பிட்டுக் கொள்வதும் இந்த பருவத்தில்தான் வேகமெடுக்கிறது.

    கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.

    • மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
    • மன அழுத்தம் ஹார்மோன்களின் செயல்பாடுகளை பாதிக்கும்.

    முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதனை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பார்கள். சட்டென்று பின்வாங்க மாட்டார்கள்.

    திட்டமிட்டபடி செயல்பட முடியாத சூழலின்போதும், எதிர்பாராத நிகழ்வுகள் மனதை உலுக்கும்போதும் மன அழுத்தம் ஆட்கொண்டுவிடும். எப்போதாவது மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதில் இருந்து விரைவாக மீண்டுவிட்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடியோ, தொடர்ந்தோ மன அழுத்தத்திற்கு ஆளானால் மன ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் நலனும் பாதிப்புக்குள்ளாகும். ஆரம்ப நிலையிலேயே மன அழுத்தத்திற்கு வித்திடும் அறிகுறிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

    1. உடல் வலி

    மன அழுத்தம் தசைகளை பாதிக்கும். மன அழுத்தம் நாள்கணக்கில் நீடிக்கும்போது தசைகளில் வலியை உண்டாக்கும். அதனால் உடல் முழுவதும் வலி, சோர்வு ஏற்படும்.

    2. தலைவலி

    மன அழுத்தத்தின் தாக்கமாக ஏற்படும் பாதிப்பை நீக்க மூளைக்கு சமிக்ஞை அனுப்பப்படும். அதற்கேற்ப மூளையின் செயல்பாடுகள் தூண்டப்படும். மன அழுத்தம் நீடிக்கும்போது கழுத்து மற்றும் உச்சந்தலையில் வலி ஏற்படக்கூடும். கடும் தலைவலியையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

    3. செரிமானத்தில் சிக்கல்

    மன அழுத்தத்தில் இருக்கும்போது சாப்பிடும் வழக்கத்தில் மாறுதல் ஏற்படும். சிலர் குறைவாக சாப்பிடுவார்கள். சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். ஊட்டச்சத்து இல்லாத உணவுகளையும் உட்கொள்வார்கள். இத்தகைய சீரற்ற உணவுப்பழக்கம் அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    4. படபடப்பு

    மன அழுத்தம் பெரும்பாலும் இதய துடிப்பை வேகப்படுத்திவிடும். இதனால் முக்கிய உறுப்பு களுக்கு வழக்கத்தை விட விரைவாக ரத்தம் சென்றுவிடும். அதன் காரணமாக பதற்றம், படபடப்பு ஏற்படும்.

    5. தூக்கத்தில் இடையூறு

    மனதை பாதிக்கும் சம்பவம் நடக்கும்போது அமைதியாக இருக்க முடியாது. அமைதியின்மை தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். சரியாக தூங்க முடியாது. கண்களை மூடி இருந்தாலும் நடந்த விஷயத்தையே மனம் நினைத்து பார்த்துக்கொண்டிருப்பதால் தூக்கம் தடைபடும்.

    6. உடல் எடை அதிகரிக்கும் அல்லது குறையும்

    மன அழுத்தம் ஹார்மோன்களின் செயல்பாடுகளை பாதிக்கும். அதனால் உடல் எடையில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். பசி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

    7. நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும்

    நீண்ட கால மன அழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை பலவீனப்படுத்தும். இதனால் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

    8. சுவாசத்தில் மாற்றம் உண்டாகும்

    மன அழுத்தத்தில் இருக்கும்போது, சுவாசத்தில் இடையூறு ஏற்படும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படக் கூடும். இதனை சமாளிக்க மூச்சை நன்றாக உள் இழுத்து வேகமாக வெளியே விட்டு சுவாசிக்கலாம்.

    9. நீரிழிவுக்கு வழிவகுக்கும்

    மன அழுத்தத்தின்போது கல்லீரலில் இருந்து கூடுதல் குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் கலக்கக்கூடும். அதனை கட்டுப்படுத்தாவிட்டால் டைப்-2 நீரிழிவுக்கு வழிவகுத்துவிடும்.

    10. கருவுறுதலில் பிரச்சினை ஏற்படும்

    மன அழுத்தம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் இனப்பெருக்க செயல்பாட்டிலும் பாதிப்பை உண்டாக்கும். இதனால் கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படும்.

    • உடல் நல குறைவால் ராமதாஸின் மனைவி இறந்தார்.
    • காதல் மனைவி இறந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மாமண்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் ராம தாஸ் (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் உடல் நல குறைவால் ராமதாஸின் மனைவி இறந்தார். பின்னர் ராமதாஸ் காதல் மனைவி இறந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். மேலும் ஒரு வயது குழந்தையை வைத்து தனியாக பராமரித்து சரிவர பார்த்துக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்தார். நேற்று ராமதாஸ் தனது ஒரு வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு அதே பகுதியில் ஏரிக்கரையில் உள்ள ஆல மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது.

    புதுச்சேரி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பெண்கள் தங்களை மகிழ்ச்சியாக்கும் செயல்களில் ஈடுபடலாம்.
    • பல தாய்மார்கள் பயத்துடனோ, விரக்தியடைந்த மனநிலையுடனோ இருக்கலாம்.

    தாயாக இருப்பது மகிழ்ச்சி நிறைந்தது, பெருமைக்குரியது என்றாலும், வாழ்க்கையில் பொறுப்புகள் நிறைந்த பதவியும் இதுதான். அவற்றை சமாளிக்கும் பக்குவம் இல்லாமல் போகும் போது, மன அழுத்தம் ஏற்படுவது சகஜம். இதனால், பல தாய்மார்கள் பயத்துடனோ அல்லது விரக்தியடைந்த மனநிலையுடனோ இருக்கலாம். இவ்வாறு மன ஆரோக்கியம் பாதிக்காமல் செயல்படுவதற்கு சில வழிகள் உண்டு. அவற்றை தெரிந்துகொள்வோம்.

    உங்களுடையதாக்குங்கள்: வீட்டிலேயே இருக்கும் அம்மாக்கள் வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு என நாள் முழுவதும் தங்கள் கடமை எனும் வட்டத்துக்கு உள்ளேயே சுற்றி வருகின்றனர். இதுவே மனச்சோர்வுக்கு காரணமாக அமையும் என உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, ஒவ்வொரு நாளையும் உங்களுக்கானதாக மாற்றுவது அவசியம். அன்றாடப் பணிகளுக்கிடையே, உங்களின் தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யக் காட்டும் அக்கறைதான், இதற்கான சிறந்த வழி. உங்களின் உடை, சிகை அலங்காரம் உட்பட அனைத்து விஷயங்களிலும், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.

    விருப்பத்தைத் தேடுங்கள்: குழந்தை பிறந்த பின்பு நம் தனித்தன்மையை ஒதுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பெண்கள் தங்களை மகிழ்ச்சியாக்கும் செயல்களில் ஈடுபடலாம். புதிதாக ஒன்றைக் கற்க விரும்பினால், அதற்கான முயற்சியில் இறங்கலாம். இது தனிமை உணர்வைப் போக்கி, மனதுக்கு மகிழ்ச்சியூட்டும். இதன் மூலம் தேவையற்ற மன அழுத்தம் நீங்கி, மனம் ஒருநிலைப்படும். தற்போது, புதிய விஷயங்களை வீட்டிலிருந்தே கற்க, பல வசதிகள் வந்துவிட்டன. அதைப் பயன்படுத்தி உங்களுக்கான வெற்றிடத்தை நிரப்பலாம்.

    வெளியுலகத் தொடர்பு அவசியம்: பல அம்மாக்கள் வீட்டிலேயே தங்களின் நேரத்தைச் செலவிடுவதால், வெளியுலகத் தொடர்பின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதைத் தவிர்க்க, வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், பகுதி நேர வேலை செய்யலாம். தற்போது, இதற்கான பல வசதிகள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிக்கொணரலாம்.

    புதிய அறிமுகங்கள் தேவை: பெண்கள் பலருக்கும், குழந்தை பெற்ற பின்பு நண்பர்களை உருவாக்குவது கடினமாகத் தோன்றலாம். குடும்பப் பொறுப்புகள் இருக்கும்போது, பிறருடன் நட்பை வளர்த்துக் கொள்ள நேரத்தை ஒதுக்குவது சிரமமாக இருக்கும். ஆனால், இந்தப் புதிய அறிமுகம், வாழ்வில் பலவற்றை கற்றுக்கொள்வதற்கு வழிசெய்யும்.

    வெளியே செல்லுங்கள்: வெளியில் செல்லும்போது, உடல் நலத்துக்குத் தேவையான 'வைட்டமின் டி' சத்தை இயற்கையாவே பெறுவதுடன், உங்களைப் புதுப்பித்த உணர்வையும் பெறுவீர்கள். பூங்காவிலோ, கடற்கரையிலோ நடக்கும்போது, சின்ன விஷயங்களையும் ரசிக்கப் பழகுவது முக்கியம்.

    மனச்சோர்வைத் தவிருங்கள்: பலவற்றையும் மனதிற்குள்ளே அசை போடுவதால் மனஅழுத்தம் அதிகமாகும். இது நாளடைவில் மனச் சோர்வாக மாறும். இதைப் போக்குவதற்கு நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பேசப் பிடிக்காத விஷயங்களை ஒரு புத்தகத்தில் எழுதுங்கள். இதனால், மனம் லேசாகும். மனச் சோர்வு தினசரி வாழ்க்கையைப் பாதித்தாலோ அல்லது தாங்க முடியாத அளவு உணர்ந்தாலோ மனநல மருத்துவரின் ஆலோசனையை நாடுவதற்குத் தயங்கக்கூடாது.

    ×