search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை

    • கிருஷ்ணமூர்த்தி அதே பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
    • கிருஷ்ண சாமி மட்டும் மாதம்பட்டி யில் கொத்தனார் வேலை செய்து கொண்டு வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மாதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50) அந்த பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு மகள் மகன் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி சென்று விட்டார். கிருஷ்ணசாமியின் மகனும் மனைவி கோமதியும் மாதம்பட்டு பகுதியிலிருந்து பெங்களூரு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கிருஷ்ண சாமி மட்டும் மாதம்பட்டி யில் கொத்தனார் வேலை செய்து கொண்டு வீட்டில் தனியாக இருந்து வந்தார். இவருக்கு முன்னதாகவே குடிபழக்கம் இருந்து வந்து ள்ளது. இதனால் அடி க்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார். நேற்று மீண்டும் கிருஷ்ணசாமிக்கு வயிற்றுவலி அளவுக்கு அதிகமாக ஏற்பட்டு வலியால் துடித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணசாமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று கிருஷ்ணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வை த்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×