search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Depression"

    • 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் வாணாபாடி ரோடு, வசந்தம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சங்கர் (வயது 37). இவரது மனைவி ஆதிலட்சுமி (30).

    ஆந்திர மாநிலம், காணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி, மாற்றுத்திறனாளி சங்கரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் அவ்வப்போது ஏற்பட்ட குடும்ப தகராறினால் மனமுடைந்த ஆதிலட்சுமி கடந்த 14-ந் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாடு கட்டும் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மனைவி இறந்து போன துக்கம் மற்றும் மன உளைச்சலில் இருந்த சங்கர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிகள் மனச்சோர்வு அடைய வேண்டாம் மீண்டும் சாதிப்போம்.
    • இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் பேட்டியளித்தார்.

    கீழக்கரை

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த, தோல்வியடைந்த மாணவிகள் மனச்சோர்வு அடைய வேண்டாம். மீண்டும் சாதிப்போம் என்று கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மதிப்பெண் குறைவாக எடுத்த, தோல்வியடைந்த மாணவிகள் எதற்கும் கவலைப்பட தேவையில்லை. மறு தேர்வு எழுதி பிளஸ்-1 படிக்கலாம்.மதிப்பெண் குறைந்ததாலும், தோல்வியடைந்ததாலும் எந்த விதத்திலும் மனம் தளர வேண்டாம். பெற்றோர்களும் கவலை கொள்ள வேண்டாம். நல்ல மதிப்பெண்கள் மறு தேர்வில் பெற்று உயர்கல்வி படிக்கலாம்.

    மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.மதிப்பெண் குறைந்த தற்கும், தோல்விய டைந்ததற்கும் காரணம் என்ன? என்பதை சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அருண் (வயது 32) டிரைவர் பணி செய்வதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து அருணின் மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • இதனால், மனமுடைந்த அருண் வடலூர் சாலையில் சிவன் கோவில் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் அருண் (வயது 32). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி காட்டுமன்னார்கோவில் அருகே கூடுவாஞ்சாவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருண் டிரைவர் பணி செய்வதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து அருணின் மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் டிரைவர் பணிக்கு சென்று விட்டு பெற்றோரை காண பின்னலூருக்கு நேற்று வந்தார். அங்கிருந்து அவரது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் வரமறுத்தாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அருண், வடலூர் சேத்தியாத்தோப்பு சாலையில் உள்ள சிவன் கோவில் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தி யாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா ஆகியோர் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
    • தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

    கருவுற்றிருக்கும் பெண், அதிலும் குறிப்பாக முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு கர்ப்பம் குறித்து மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம். இது பலவிதமான உணர்ச்சிகளையும், கவலைகளையும் கொண்டு வரலாம். ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பற்றி கவலைப்படுவது ஒரு மோசமான விஷயம் அல்ல, ஏனெனில் இது புதிய சவால்களை எதிர்கொண்டு நடவடிக்கை எடுக்க மக்களைத் தள்ளும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்..

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மனரீதியானவை. இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எதிர்பார்ப்புள்ள தாய்மார்களையும் மன அழுத்தம் கடுமையாக பாதிக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்தால், தாய் மற்றும் குழந்தை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அடிப்படையில் இது உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக பலவீனப்படுத்துகிறது. இருப்பினும், மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, சுமூகமான மற்றும் ஆபத்து இல்லாத கர்ப்பத்திற்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    சீரான முறையில் சுவாசிக்க:

    சுவாச முறைகள் மன அழுத்தத்தால் கணிசமாக பாதிக்கப்படுகின்றன. இதன் பொருள் நீங்கள் குறைவாக சுவாசிக்கிறீர்கள். இது உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இதனால் உங்கள் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும். கர்ப்ப காலத்தில் சரியாக சுவாசிக்கவும் மற்றும் உட்கார்ந்து அல்லது படுத்து, கண்களை மூடி சுவாசிக்க வேண்டும். நீங்கள் கவலையாக உணரும் போதெல்லாம் குறைந்தது ஐந்து ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நிம்மதியான நித்திரை:

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தம் காரணமாக தூங்குவதில் சிரமம் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் மனச்சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகம். உங்களுக்கு போதுமான தூக்கம் வராவிட்டால், உங்கள் உடலும் மனமும் விரைவாக ஆற்றலை இழக்கின்றன. குறிப்பாக அழுத்தத்தில் இருக்கும்போது. ஏனெனில் அது எதிர்மறையான எண்ணங்களுக்கும் வழிவகுக்கிறது. உங்களுக்கு இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால், பகலில் சிறிது நேரம் தூங்க முயற்சிக்கவும்.

    உடற்பயிற்சி:

    மன அழுத்தத்தின் போது வெளியாகும் ஹார்மோன்கள் உங்கள் தசைகளை பதற்றம் மற்றும் சுருங்கச் செய்யும். கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனையை சமாளிக்க, உடலில் உள்ள பதற்றத்தை குறைக்க, இது ஒரு சிறந்த நுட்பமாகும். நீங்கள் பதற்றமாகவோ அல்லது பதட்டமாகவோ உணர்ந்தால், உங்கள் கழுத்து, முதுகு, கைகள் மற்றும் கால்களை நீட்டி சில நிமிடங்கள் செலவிடுங்கள். உங்கள் இடது காது உங்கள் இடது தோள்பட்டைக்கு அருகில் இருக்கும்படி உங்கள் தலையைத் திருப்புங்கள். மேலும் உங்கள் கழுத்தை நீட்டவும். இந்த நிலையில் 20 வினாடிகள் இருங்கள்.

    மிளகுக்கீரை சாப்பிடவும்:

    புதினா இலைகளில் மெந்தோல் என்ற பொருள் உள்ளது. இது தசை பதற்றத்தை குறைக்கிறது. இதை குடித்தால் அழுத்தம் குறையும். புதினா வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை நீக்குகிறது. நீங்கள் எங்கிருந்தாலும் மன அழுத்தம் மற்றும் வயிற்று பிரச்சனைகளை குறைக்க மிளகுக்கீரை மிகவும் உதவியாக இருக்கும்.

    • புவனகிரி அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அமிர்தவள்ளி கடந்த மாதம் 24-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உறவினரை திருமணம் செய்து கொண்டார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாம்பட்டினம் மெயின் ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி (விவசாயி) இவரது மகள் அமிர்தவல்லி (19) இவர் கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உறவினரை திருமணம் செய்து கொண்டார். இதனால் குடும்பத்தில் அனைவரும் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மகன் சந்திரசேகர், (23) வீட்டில் இருந்தவர் நேற்று முன்தினம் குரியமங்கலம் சாலையில் உள்ள மகராசன் தோப்பு வயலில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    தகவல் அறிந்த செல்வமணி மற்றும் உறவினர்கள் சந்திரசேகரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலையில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை.
    • பெண்களின் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும்.

    பெண்கள் ஒவ்வொரு பருவங்களுக்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிப்பதால் பல பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை. ஒரு பெண் பூப்பு அடையும் காலம் தொடங்கி, மகப்பேறு காலம், கடைப்பூப்பு காலம் என அனைத்து நிலைகளிலும் உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை எதிர்கொள்கிறாள்.

    பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களினால் அதிகரித்த பசி, எதிலும் நாட்டம் இன்மை, கோபம் போன்றவை ஏற்படலாம். பெரும்பாலான பெண்கள், இத்தகைய நேரத்தில் சத்தான உணவினை தவிர்த்து பாஸ்ட்புட்களை உண்பது உடல்நலத்தினை பாதிக்கும் செயலாகும். இத்தகைய உணவுப் பழக்கவழக்கங்களினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பெரும்பாலான பெண்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பிரச்சினை, சினைப்பை நீர்கட்டி, கருப்பை தசைக்கட்டி போன்றவைகளால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.

    முறையற்ற மாதவிடாய் உள்ளவர்கள் எள்ளு மற்றும் கருஞ்சீரகத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரினைப் பருகிவரலாம். மேலும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஐந்து நாட்களுக்கு மேல் அதிகப்படியான உதிரப்போக்கு உள்ளவர்கள் துவர்ப்புச் சுவை உடைய அத்திப் பிஞ்சு, மாதுளைப் பிஞ்சு, மாதுளை தோல் கஷாயம், வாழைப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்து வரலாம்.

    கர்ப்பப்பை வாயில் சதை வளர்ச்சி இருந்தால் ஒரே மாதத்தில் இரண்டு முறைகூட மாதவிடாய் ஏற்படும். உடலில் கொழுப்பு சேர்வதால் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வாயில் சதை வளர்வதைத் தூண்டும். ஒப்பீட்டு அளவில் இந்தப் பிரச்னை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.

    • இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
    • கூட்டமாக இருக்கும்போதும்கூட தனித்திருப்பதாக உணர்வது.

    இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார். இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்து வருவது கவலையளிக்கிறது. பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளை கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையை கொண்டிருக்கின்றனர். 17 சதவீதத்தினர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.

    எதைப் பார்த்தாலும் எதிர்மறை மனோபாவத்தை வெளிப்படுத்துவது, சோக உணர்வில் மூழ்கிக் கிடப்பது, எப்போதும் அதிக எரிச்சலுடன் இருப்பது, எல்லாவற்றின் மீதும் திடீர் ஆர்வக்குறைவு, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை, குழு, கூட்டமாக இருக்கும்போதும்கூட தனித்திருப்பதாக உணர்வது.

    மன அழுத்தத்தால் மூளைக்குள் என்னதான் நடக்கிறது? மூளை பின்மேடு பகுதிதான் உணர்ச்சிகள், மனநிலை, நினைவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த நோயாளிகளிடம் இந்தப் பகுதியின் அளவு சுருங்கியிருக்கிறது. நார்எபிநெப்ரின் என்பது நரம்பு கடத்தி ஹார்மோன். இது அதிகமாக இருந்தால் சீஸோபிரெனியா (மனச்சிதைவு), குறைவாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும். செரடோனின் என்ற ஹார்மோன் குறைவாக இருந்தால் மன அழுத்தம், மனக்கலக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.

    மூளையின் முன்பகுதியில் உள்ள பெருமூளை, திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்றவற்றில் பங்களிக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது இயல்புக்கு மாறாக சோர்வடைந்து விடுகிறது. முன்தலை பெருமூளையின் வலது பாதி, எதிர்மறை உணர்ச்சியை உருவாக்க காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

    • காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • ஒரு நாளைக்கு 6 கிராம் அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மாரடைப்பு ஏற்படுவ தற்கான காரணங்களான வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறை, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இவை அனைத்தாலும் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைப் பதோடு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும் என்கிறார் நெல்லை ஷிபா மருத்துவமனை இதயநோய் சிகிச்சை மருத்துவர் கிரிஷ் தீபக்.

    மன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

    பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது திடீர் நெஞ்சுவலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கு பரவும்), மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு நெஞ்சு வலி இல்லாமல், நெஞ்சு எரிச்சலோ அல்லது இடது கை குடைச்சலோ இருக்கும். இது மட்டுமல்லாமல் முதுகு எரிச்சல், வலது பக்க நெஞ்சுவலி, தாடைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம்.

    மாரடைப்பை கண்டறிய

    இதய சுருள் படம் (ECG) எடுக்க வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனை மூலமும் மாரடைப்பை கண்டறிய லாம். இதய ஸ்கேன் (ECHO) மூலம் நம் இதயத்தின் செயல்திறன், மாரடைப்பைக் கண்டறியலாம்.

    ஆஞ்சியோகிராம் / ஆஞ்சியோ பிளாஸ்டி

    ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்கும்போது இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தால், கை வழியாக ஒரு சிறிய டியூப்பை செலுத்தி, அதன் மூலம் ஒரு பலூனை உட்செலுத்தி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று அதில் இருக்கும் கொழுப்பு படிவுகளை அகற்றி (விரித்து விடுதல்) அந்த இடத்தில் ஸ்டென்ட் வைத்து அடைப்பை சரி செய்யும் சிகிச்சை முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி.

    பைபாஸ் சர்ஜரி யாருக்கு தேவை?

    இதயத்திற்கான ரத்தக் குழாய்களில் 3 அல்லது 5 இடங்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பைபாஸ் சர்ஜரி பரிந்துரை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையினால் சுலபமாக மற்றும் வலி இல்லாமல் அடைப்பை அகற்றலாம்.

    இதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் என்ன?

    இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள சால மீன், வால்நட்ஸ், கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பு திராட்சை, தக்காளி போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 6 கிராம் (3 டீஸ்பூன்) அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு நாளைக்கு 4 முதல் 6 டீஸ்பூன் அளவில் சன் பிளவர் எண்ணெய், ரைஸ்பிராண்ட் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மாரடைப்பை தடுக்க என்ன செய்வது?

    மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பை வராமல் தடுக்க முடியும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்பதோடு, முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம ன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

    மாரடைப்பை தடுக்க ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தினசரி 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் கிரிஷ் தீபக்.

    Dr. கிரிஷ்தீபக் MD, DM.,FNB இதய மருத்துவர், ஷிபா மருத்துவமனை 9442139292

    • குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.
    • விளையாடுவதற்கும் பெற்றோர் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

    மாறிவரும் வாழ்க்கைகசூழ்நிலையால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதை அவர்கள் வெளிப்படையாக சொல்வதில்லை. எந்தவித காரணங்களும் இல்லாமல் குழந்தைகள் வெளிப்படுத்தும் அழுகை, கோபம், எரிச்சல், கவலை, போன்ற உணர்வுகளின் வழியாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடியும்.

    பெற்றோருக்கு இடையே ஏற்படும் மோதல்கள், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல், உடல் நலக்குறைபாடு, தேர்வில் ஏற்படும் தோல்வி போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

    குழந்தைகளிடம் பேசுவதற்கும் விளையாடுவதற்கும் பெற்றோர் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் பிணைப்பு அவர்களை மனம் விட்டு பேச வைக்கும். இதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க முடியும்.

    துக்கத்தை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டிருப்பது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். தக்க சமயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியமானது.
    துக்கத்தை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டிருப்பது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். தக்க சமயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியமானது.
    மனதுக்கு பிடித்தமானவர்களின் எதிர்பாராத பிரிவோ, மரணமோ மனதை உலுக்கிவிடும். அவர்களின் இழப்பை அவ்வளவு எளிதில் மனம் ஏற்றுக்கொள்ளாது. துக்கம் ஆக்கிரமித்து, உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் மனம் தவிக்கும். இழப்பை சந்தித்த ஆரம்ப நாட்களில் துக்கத்தில் இருந்து மீள்வது கடினமான ஒன்றாக இருக்கும்.

    `இழப்புகளால் ஏற்படும் துக்கம் எந்த அளவுக்கு மன, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்?' என்பது பற்றி ஆய்வு நடந்திருக்கிறது. அந்த ஆய்வில் நாளமில்லா சுரப்பிகள், நோயெதிர்ப்பு மண்டலம், இதயம் மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, கோபம், பதற்றம், பசியின்மை, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் பாதிப்பு அதிகமாகும் என்பதும் தெரியவந்திருக்கிறது.

    பொதுவாக துக்கம் சில மாதங்கள் நீடிக்கும். சிலருக்கு 12 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது ஆரோக்கியத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் துக்கத்தில் இருந்து படிப்படியாக மீள முடியும்.

    தனிமையை தவிருங்கள்: மனதுக்கு பிடித்தமானவர்களின் இழப்புக்கு பிறகு தனிமையை உணர்வது இயல்பானது. அவர்களின் ஞாபகங்கள் மனதை ரணமாக்கி கண்ணீரை வரவழைக்கும். அந்த சமயத்தில் ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லாத சூழலில் மன வேதனை அதிகமாகும். ஆதலால் தனிமையில் இருப்பதை தவிருங்கள். தனிமைப்படுத்திக்கொள்வது உங்கள் உணர்வுகளையும், ஆரோக்கியத்தையும் மோசமாக்கி விடும்.

    உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: துக்கத்தை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டிருப்பது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். தக்க சமயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியமானது. நெருக்கமாக பழகுபவர்களிடம் உள்ளக்கு முறல்களை கொட்டி விடுங்கள். உணர்ச்சிகளை ஒரேடியாக கட்டுப் படுத்தக்கூடாது. உணர்வுகளை சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். அழ விரும்பினால் அழுதுவிடுங்கள்.

    ஓய்வு எடுங்கள்: எதிர்பாராத இழப்பு ஏற்படுத்தும் அதிர்ச்சியிலும், மன அழுத்தத்திலும் இருந்து மீளவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சமயத்தில் சோர்வை உணர்வது இயற்கையானது. வழக்கத்தை விட அதிக ஓய்வும், தூக்கமும் அவசியமானது.

    சத்துணவு அவசியம்: துக்கத்தில் இருக்கும்போது சாப்பிட தோன்றாது. அது உடலை மேலும் பலவீனப்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியையும் பலவீனமாக்கும். அதனை தவிர்க்க ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வது அவசியமானது. உணவு சாப்பிட விரும்பாதபோது பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். தண்ணீர் பருகலாம். உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பது முக்கிய மானது.

    உடற்பயிற்சி: துக்கமாக இருக்கும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது மனதை இலகுவாக்கும். மனச்சோர்வை போக்கி உடலை சுறுசுறுப்பாக செயல்பட தூண்டும். மன நிலையையும் மேம்படுத்தும்.
    ஆண்களை விட பெண்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். எந்தெந்த வகையில் மனச்சோர்வு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
    ஒரு நபர் மூன்று நாட்களுக்கு மேல் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கொண்டிருந்தால் மன நல ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்தால், அது கடுமையான மனச்சோர்வாக மாறிவிடும். 6 மாதங்களுக்கும் மேல் நீடித்தால் நாள்பட்ட மன அழுத்தமாக மாறிவிடும். அதில் இருந்து மீள் வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

    இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆண்களை விட பெண்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். மன சோர்வின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. அதுதான் பாதிப்பை அதிகரிக்க செய்துவிடுகிறது. எந்தெந்த வகையில் மனச்சோர்வு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

    ஆர்வமின்மை:

    மனச்சோர்வுக்கான முதன்மை அறிகுறிகளில் ஒன்று, ஆர்வமின்மை. தாங்கள் விரும்பி அடிக்கடி செய்யும் விஷயங்களை கூட ரசித்து செய்ய மாட்டார்கள். பெரும்பாலான நேரங்களை தனிமையில் செலவிடுவார்கள். வழக்கத்தை விட குறைவாக பேசுவார்கள். மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க விரும்பமாட்டார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் கூட ஆர்வம் இல்லாதது மனச்சோர்வுடன் இருப்பதை உறுதிப்படுத்திவிடும்.

    கவனம் செலுத்துவதில் சிரமம்:

    மனச்சோர்வுடன் இருக்கும் பெண்கள் விருப்பமான செயல்பாடுகளின் மீது கூட கவனம் செலுத்துவதற்கு சிரமப்படுவார்கள். ஏதோ ஒரு விஷயம் அவர்களின் மனதை பாதித்து இருக்கும். அதில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்காமல் அது பற்றியே நினைத்துப் பார்த்து மனதை குழப்பிக்கொள்வார்கள். அது அவர்களின் வேலை மற்றும் செயல்பாடுகளை பாதிக்கும்.

    பசியின்மை:

    உணவு விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். விதவிதமாக சமைத்து, ருசிக்கவும் விரும்புவார்கள். எந்த உணவையும் சாப்பிடும் மன நிலை தனக்கு இல்லை என்று ஒரு பெண் சொன்னால் அது மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கலாம். பசியின்மை பிரச் சினையை எதிர்கொள்வார்கள். மனச்சோர்வின்போது தங் களுக்கு பிடித்தமான உணவுகளை கூட சாப்பிடுவதற்கு விரும்பமாட்டார்கள்.

    தனிமையை நாடுவது:

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனச்சோர்வின் அறிகுறி கள் வேறுபடும். மனச்சோர்வு மகிழ்ச்சியை பறித்துவிடும். சோகத்திற்கும் ஆளாக்கிவிடும். தனிமை சிந்தனை மேலோங்கும். தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள். அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இதை புரிந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம். அவர்களுக்கு போதுமான அன்பையும், ஆதரவையும் வழங்குவது அவசியமானது.

    காரணம் இல்லாமல் அழுவது:

    ஒரு நபர் எந்த காரணமும் இல்லாமல் அழுகிறார் என்றால், அது மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். ஏனென்றால், மனச்சோர்வு உள்ளவர்கள் தங்கள் ஆழ் மனதில் ஏதாவதொரு விஷயத்தை புதைத்து வைத்திருப்பார்கள். அதை நினைத்து பார்த்து அழுவார்கள். அதன் காரணமாக சோகம் குடிகொள்ளும். அது மன ஆரோக்கியத்தை பாதிக்கும் தொடர்ச்சியான செயல்முறையாக மாறிவிடும். எனவே, அழுகை எட்டிப்பார்த்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

    தூக்கமின்மை:

    மனச்சோர்வின்போது எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை தூக்கமின்மை. மனச்சோர்வினால் பாதிக்கப்படுபவர் களுக்கு ரத்த சோகை அல்லது தூங்குவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பார்கள். மனச்சோர்வின் காரணமாக தூக்க சுழற்சி பாதிப்புக்குள்ளாகிவிடும்.
    மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, வேலை செய்யும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதையோ அல்லது வேலையில் கவனம் செலுத்துவதையோ குறைக்கிறார்கள்.
    உங்களுடைய நாளை சரியாகத் திட்டமிட்டு தொடங்குங்கள். உங்களது தேவைகளில் தெளிவாக இருங்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தினை வசதியாக அமைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. எப்போதும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இது உங்கள் வேலையில் மனம் இலகுவாகச் செயல்பட உதவும்.

    இன்றைய பெண்கள் ஒரே நேரத்தில் பல பாத்திரங்களை வகிக்கிறார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் நேரத்தை ஒதுக்குவதற்குத் திணறுகிறார்கள். ஓய்வு நேரம், உடற்பயிற்சி, நட்பு மற்றும் தூக்கம் போன்றவற்றுக்கு ஒரு பெண்ணின் தினசரி அட்டவணையில் இடம் இருப்பது நல்லது.

    எல்லா வேலைகளையும் தாங்களே செய்யாமல், குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளலாம். உறவுகளைப் பலப்படுத்துவது இயல்பிலேயே பெண்களின் குணம்.

    மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, வேலை செய்யும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதையோ அல்லது வேலையில் கவனம் செலுத்துவதையோ குறைக்கிறார்கள். இது குழந்தைகளின் வளர்ப்பு, தேவைகள், படிப்பு போன்றவற்றை பாதிக்கும்.
    ×