என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனமுறிவு"
- அருண் (வயது 32) டிரைவர் பணி செய்வதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து அருணின் மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
- இதனால், மனமுடைந்த அருண் வடலூர் சாலையில் சிவன் கோவில் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் அருண் (வயது 32). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி காட்டுமன்னார்கோவில் அருகே கூடுவாஞ்சாவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருண் டிரைவர் பணி செய்வதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து அருணின் மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் டிரைவர் பணிக்கு சென்று விட்டு பெற்றோரை காண பின்னலூருக்கு நேற்று வந்தார். அங்கிருந்து அவரது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் வரமறுத்தாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அருண், வடலூர் சேத்தியாத்தோப்பு சாலையில் உள்ள சிவன் கோவில் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தி யாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா ஆகியோர் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்