என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » deepika padukone
நீங்கள் தேடியது "Deepika Padukone"
மேக்னா குல்சார் இயக்கத்தில் டெல்லியில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனேவின் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. #Chhapaak #DeepikaPadukone
டெல்லியில் கடந்த 2005-ம் ஆண்டு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அகர்வால் என்ற பெண் மீது திராவகம் (ஆசிட்) வீசப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உள்ளானபோது லட்சுமி அகர்வாலுக்கு வயது 15.
அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொல்லை கொடுத்து வந்தான். அதை ஏற்காததால் லட்சுமி மீது திராவகத்தை வீசினான். இதில் லட்சுமி முகம் வெந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். தற்போது புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி திராவக வீச்சில் பாதிக்கப்படுவோருக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். இந்த சம்பவத்துக்கு பிறகு திராவகம் விற்பதை ஒழுங்குபடுத்தியும், திராவகம் வீசுவோருக்கு அதிக தண்டனையை அறிவித்தும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
தற்போது லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் அவரது வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, கதையை கேட்டதும் மனதை பாதித்தது. இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி அவர்களின் கருணை, பலம், நம்பிக்கை உள்ளிட்ட விஷயங்களையும் மையப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.
A character that will stay with me forever...#Malti
— Deepika Padukone (@deepikapadukone) March 25, 2019
Shoot begins today!#Chhapaak
Releasing-10th January, 2020.@meghnagulzar@foxstarhindi@masseysahibpic.twitter.com/EdmbpjzSJo
இந்த படத்தில் நடிக்கும் தனது முதல் தோற்றத்தை தீபிகா படுகோனே டுவிட்டரில் வெளியிட்டு, ‘எனது சினிமா வாழ்க்கை பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம்’ என்று பதிவிட்டுள்ளார்.
மேக்னா குல்சார் இயக்கும் இந்த படம் 2020 ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Chhapaak #Malti #DeepikaPadukone #MeghnaGulzar
திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்துவிடுகிறது என்று எண்ணி அவர்களை ஒதுக்குவது சரியல்ல, எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார். #DeepikaPadukone
திருமணம் ஆன நடிகைகளை இயக்குனர்கள் புதிய படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடங்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகின்றனர். அந்த வழக்கத்தை சமீபத்தில் உடைத்திருக்கிறார் சமந்தா. திருமணத்துக்கு பிறகும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதுடன், லிப் டு லிப் முத்தக்காட்சி, கவர்ச்சி காட்சிகளில் நடித்து புது டிரெண்ட் உருவாக்கினார். இது ஒர்க் அவுட் ஆனதால் பாலிவுட்டில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்றவர்களும் திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சீனியர் நடிகைகள் நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டி வருகின்றனர். தங்களது திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். வயது ஏறினாலும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகைகளுக்கு தைரியம் தரும் வகையில் தீபிகா படுகோனே பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ‘அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. என்னுடைய தகுதிக்கு ஏற்பவே சம்பளம் தரப்படுகிறது. அப்படியில்லாமல் யாரும் பெரிய தொகையை தர மாட்டார்கள். திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்துவிடுகிறது என்று எண்ணி அவர்களை ஒதுக்குவது சரியல்ல. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும்.
திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்துவிடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன். திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன என்பதை சமீபத்திய படங்கள் நிரூபித்திருக்கின்றன’. இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார். #DeepikaPadukone
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, திருமணமான நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல என்று கூறியிருக்கிறார். #DeepikaPadukone
இந்தியில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை மணந்து திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. எனக்கு அருகதை இல்லாமல் யாரும் பெரிய தொகையை கொடுக்க மாட்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று என்னை அழைப்பதில் மகிழ்கிறேன்.
திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரியல்ல. திருமணம் நடிகைகள் மார்க்கெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும். திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்து போய்விடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன்.
திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். நீண்ட நாட்கள் நடித்து சலிப்பு ஏற்பட்டு சொந்த வாழ்க்கை திருமண பந்தம் போன்றவற்றை சந்தோஷமாக அனுபவிக்க சினிமாவை விட்டு ஒதுங்க நினைக்கலாம். ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் நன்றாக ஓடுகின்றன.
இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, பொய் தகவல்களை தடுக்க இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கிறார். #DeepikaPadukone
ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனே தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். ஆனால் சரியான கதைகள் அமையவில்லை. கணவர் ரன்வீர் சிங் நடிக்கும் 83 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இது 1983 -ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வின் அடிப்படையில் அமைந்த கதை. கேப்டன் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் நடிக்கிறார். திருமணமாகி விட்டதால் இனி முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது என்பது அரிதான ஒன்று என்பதை புரிந்துகொண்ட தீபிகா, அடுத்த கட்டமாக தனக்காக தனி இணையதளம் ஒன்றை தொடங்க உள்ளார்.
தன்னைப் பற்றி நிறைய பொய் தகவல்கள் வருவதால் இந்த இணையதளத்தை தொடங்க உள்ளதாக கூறும் அவர் இதில் தன்னைப் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட இருக்கிறார்.
இந்திப் பட உலகில் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்ளிட்ட பலரை பின்னுக்கு தள்ளி தீபிகா படுகோனே சாதனை படைத்துள்ளார். #DeepikaPadukone
பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2018-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஸ்டார் மீட்டர் என எப்போதும் யார் பிரபலமாக இருக்கிறார் என்பதற்கான ரேட்டிங் இவர்கள் தளத்தில் இருக்கும். இந்த டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இந்தி முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என அனைத்து முக்கிய நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி நடிகை தீபிகாபடுகோனே முதல் இடம் பிடித்துள்ளார்.
இவர் நடித்து வெளிவந்த `பத்மாவத்’ சந்தித்த சர்ச்சையும் அதன்பின் அது பெற்ற வெற்றியும்தான் இதற்கு காரணம்.
மேலும், இந்த வருடம் பல முக்கியமான படங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தொடர்களில் நடித்த நடிகை ராதிகா ஆப்தேவும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
1. தீபிகா படுகோனே
2. ஷாருக்கான்
3. அமீர்கான்
4. ஐஸ்வர்யா ராய் பச்சன்
5. சல்மான் கான்
6. கேத்திரீனா கைப்
7. குப்ரா சேட்
8. இர்பான் கான்
9. ராதிகா ஆப்தே
10. அக்ஷய் குமார்
சமீபத்தில் தீபிகாவை திருமணம் செய்துக் கொண்ட ரன்வீர் சிங், தற்போது ஒரு விழாவில் அவரைப் பற்றி பேசி கண் கலங்க வைத்துள்ளார். #DeepikaPadukone
மும்பையில் ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள் சார்பாக ‘பத்மாவத்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்குக்கு வழங்கப்பட்டது. விழாவுக்கு ரன்வீரும் தீபிகா படுகோனும் வந்திருந்தனர். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் ரன்வீரின் பேச்சை கேட்க ரசிகர்கள் காத்திருந்தனர்.
அப்போது பேசிய ரன்வீர், ‘’என்னுடைய ராணி ‘பத்மாவத்’ படத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் என் ராணியை அடைந்துவிட்டேன். உன்னை நேசிக்கிறேன் தீபிகா. இந்த ஆறு வருடத்தில் நான் எதையாவது சாதித்திருந்தால் அதற்கு நீதான் காரணம்.
என்னைச் செதுக்கியது நீதான். எனக்கு நீ அளித்த எல்லாவற்றுக்கும் நன்றி. ஐ லவ் யூ தீபிகா’’ என்றார். இதைக் கேட்ட தீபிகா கண் கலங்கினார். கண்ணீர்த் துளிகள் உருண்டு கன்னத்தில் விழுந்தன. எனினும் கண்களில் நிறைந்த நீருடன் சமாளித்துக் கொண்டு சிரித்தார் தீபிகா. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய முழு தகவலை இங்கே பார்க்கலாம். #ForbesIndiaCeleb100 #ForbesIndia
இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடியுடன்) 11-வது இடத்தை பிடித்துள்ளார்.
ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia
இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்ஷய் குமார், தீபிகா படுகோனோ, ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia
இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். சல்மான் நடித்த டைகர் ஜிந்தா ஹே கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாகிய ரேஸ் 3 படம் மற்றும் விளம்பர படங்கள் மூலமும் அவர் இத்தனை கோடியை சம்பாதித்துள்ளார்.
சல்மான் கானைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி (ரூ.228.09 கோடி) இரண்டாவது இடத்திலும், அக்ஷய் குமார் (ரூ.185 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே (ரூ.112.8 கோடி) 4-வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய பெண் பிரபலம் என்ற பெருமை தீபிகாவுக்கு கிடைத்துள்ளது.
தீபிகாவை தொடர்ந்து தோணி (ரூ.101.77 கோடி) 5-வது இடத்திலும், அமீர் கான் (ரூ.97.5 கோடி), அமித்தாப் பச்சன் (ரூ.96.17 கோடி), ரன்வீர் சிங்(ரூ.86.67 கோடி), சச்சின் டெண்டுல்கர் (ரூ.80 கோடி), அஜய் தேவ்கன்(ரூ.75.5 கோடி) அடுத்த இடங்களுடன் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia
பெங்களூருவில் நடைபெற்ற தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #DeepVeerReception #DeepVeer
இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இத்தாலியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அடுத்ததாக வரும் 27-ஆம் தேதி, ரன்வீர் சிங் குடும்பத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மும்பையில் நடைபெறுகிறது. #DeepVeerReception #DeepVeer
இந்தியாவின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அமிதாப் பச்சனும், இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனேவும் இடம் பிடித்துள்ளனர்.
இன்புளூனர்சர் இன்டெக்ஸ் 2018 (YouGov Influencer Index 2018) செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், முதல் இடத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனே அடுத்து மூன்றாவது நபராக தோனி உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் குறித்து, உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம் ஆன்லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
5-வது இடத்தை நடிகர் அக்க்ஷய் குமார் பிடித்துள்ளார். அமீர்கானும், ஷாருக்கானும் முறையே 7-வது மற்றும் 8-வது இடத்தை பிடித்துள்ளனர். நடிகைகள் ஆலியா பட் 9-வது இடத்தையும், பிரியங்கா சோப்ரா 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இத்தாலியில் திருமணத்தை முடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி, தற்போது மும்பை திரும்பியுள்ளனர். #DeepikaPadukone #RanveerSingh
இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர்.
15ம் தேதி லேக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினர் இன்று இந்தியா திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
வருகிற 21ம் தேதி பெங்களூருவிலும், 28ம் தேதி மும்பையிலும் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. #DeepikaPadukone #RanveerSingh
பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்குக்கு இத்தாலியில் வைத்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. #DeepikaPadukone #RanveerSingh
இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர்.
அங்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து லோக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபீகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
திருமணத்துக்கு வந்தவர்களின் செல்போன்களின் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. திருமணம் நடக்கும் இடம் ஏரி ஓரத்தில் இருப்பதால் படகில் பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டனர். திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
திருமண பரிசுகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக இருவரும் அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #DeepikaPadukone #RanveerSingh
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X