search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepika"

    • கல்கி 2898 கி.பி படத்தின் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
    • இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.

    இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.

    இத்திரைப்படத்தில் மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் வரும் இந்த புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.

    இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாகனம் கிட்டத்தட்ட 20 அடி நீளமும் 11 அகலமும் 7 அடி உயரமும் கொண்டது. இந்த வாகனத்தின் எடை 6 டன் அதாவது 6000 கிலோ ஆகும்.

    2 மஹேந்திரா எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் 125 bhp மற்றும் 9,800 Nm டார்க் சக்தியுடன் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பின்புறம் 47 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தால் அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் பயணிக்கமுடியும். இந்த வாகனத்தில் 2 ஹப்லெஸ் டயர் முன்புறத்தில் 1 ஹப்லெஸ் டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டயரின் எடையும் 1 டன் ஆகும்.

    இந்த வாகனத்தின் மையத்தில் ஓட்டுநருக்கு ஒரு இருக்கை உள்ளது. வாகனத்தின் பின்புறத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு ஒரு சிறிய சிறை ஒன்று உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே திருப்பதி சென்றுள்ளார்.
    • இவரின் புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிகம் லைக் செய்யப்படுகின்றன.

    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார். அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனே கிராமிய பாடகர் மேமே கான் பாடலுக்கு நடனமாடினார்.

    தீபிகா படுகோனே
    தீபிகா படுகோனே

    இந்நிலையில், தீபிகா படுகோனே திருப்பதி சென்றுள்ளார். இன்று அதிகாலை விஜபி தரிசனம் செய்ததை அடுத்து தேவஸ்தானம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், தரிசனம் முடிந்து வெளியே வந்த தீபிகா படுகோனேவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, பொய் தகவல்களை தடுக்க இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கிறார். #DeepikaPadukone
    ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனே தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். ஆனால் சரியான கதைகள் அமையவில்லை. கணவர் ரன்வீர் சிங் நடிக்கும் 83 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    இது 1983 -ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வின் அடிப்படையில் அமைந்த கதை. கேப்டன் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் நடிக்கிறார். திருமணமாகி விட்டதால் இனி முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது என்பது அரிதான ஒன்று என்பதை புரிந்துகொண்ட தீபிகா, அடுத்த கட்டமாக தனக்காக தனி இணையதளம் ஒன்றை தொடங்க உள்ளார்.



    தன்னைப் பற்றி நிறைய பொய் தகவல்கள் வருவதால் இந்த இணையதளத்தை தொடங்க உள்ளதாக கூறும் அவர் இதில் தன்னைப் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட இருக்கிறார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். #DeepikaPadukone #Deepika
    ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

    பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக வந்து மேலும் பிரபலமானார். இந்த படத்தில் சர்ச்சைகளையும் சந்தித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் சில நாட்கள் போலீஸ் பாதுகாப்பும் அளித்தனர். 

    இப்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் அவருக்கு காதலும் வந்துள்ளது. இருவருக்கும் இத்தாலியில் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமண ஏற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிரிப்பிள் எக்ஸ் ஹாலிவுட் படத்தில் நடித்து இருந்த தீபிகா படுகோனே அதன் அடுத்த பாகத்திலும் இப்போது நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குனர் டி.ஜே.கருசோ வெளியிட்டு உள்ளார். சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு பதில் அளித்தபோது இதனை அவர் தெரிவித்தார்.

    வின்டீசல், சாமுவேல் ஜாக்சன், டோனி யென் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. பிரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்துக்காக இந்தியில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #DeepikaPadukone
    தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலர் படங்கள் தயாரிக்கிறார்கள். நடிகைகளுக்கும் இந்த ஆசை வந்து தயாரிப்பில் இறங்க கதை கேட்கிறார்கள்.

    இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே விரைவில் தயாரிப்பாளராக மாறப்போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    “பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளேன். படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. சினிமா எனக்கு நிறைய கொடுத்து உள்ளது. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு காட்டுகிறார்கள். பத்மாவத் படம் வசூல், கான் நடிகர்களை மிஞ்சிவிட்டது என்று பேசினார்கள். அதற்கு காரணம் ரசிகர்கள்தான்.



    அவர்களுக்கு என்னால் என்ன திருப்பி கொடுக்க முடியும்? எனக்கு தெரிந்தது சினிமா மட்டும்தான். எனவே நல்ல படங்கள் தயாரித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடிவு செய்துள்ளேன். வித்தியாசமான படங்களை தயாரித்து திரைக்கு கொண்டு வருவேன்.” இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
    ×