search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CRPF"

    சென்னை பூந்தமல்லியில் உள்ள சிஆர்பிஎப் பயிற்சி மையத்தில் அதிகாரிகள் அளித்த தண்டனையால் மன உளைச்சல் ஏற்பட்டு ராஜேஷ்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். #CRPF
    சென்னை:

    சென்னை பூந்தமல்லியில் சிஆர்பிஎப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பணியாற்றிய ராஜேஷ் குமார் (40) என்ற வீரர் பணி நேரத்தில் செல்போனில் பேசியதால், அதிகாரிகள் தண்டனை அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனால், மன உளைச்சல் அடைந்த ராஜேஷ் குமார் இன்று தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில், 19 வீரர்கள் காயமடைந்துள்ளனர். #JammuAndKashmir #CRPFvehicleaccident
    ஸ்ரீநகர்:

    இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘இன்று அதிகாலை 21 பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்ற வாகனம், பெமினா தலைமையகம் அருகே செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சுமார் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகாமையில் உள்ள ஜெ.வி.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் ஸ்ரீநகரில் உள்ள இராணுவ முகாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஒரு வீரர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார். #JammuAndKashmir #CRPFvehicleaccident
    ×